அய்யா வைகுண்டர் தெட்சணத்தில் பள்ளி கொண்டு சான்றோர்களுக்காக ஆறு ஆண்டுகால தவம் முடித்தபின்னால் இந்த பூலோகத்தில் தான் நினைக்கும் காரியங்களை உடனுக்குடன் செய்து முடிப்பதற்கு தனக்கு ஏவலாக 5 பேர் வேண்டும் நினைத்த போது அவர் எண்ணத்தில் உதித்தது கடிய சேவகன், கயிலை பையன், அத்திவாக்கன், காத்தவராயன், மாயபலவேசம் என்று 5 துஷ்ட வீரர்கள் தான்.
இவர்கள் 5 பேரும் மாமிச படையல் ஏற்பவர்கள். ஈனம், இரக்கம், தயவு , தாட்சண்யம் இவர்களிடம் கிடையாது. மாகாளியின் கட்டுபாட்டில் இருந்து மாடசாமியின் ஏவலுக்கு பணி செய்பவர்கள். ஏழு லோகங்களிலும் புகுந்து விளையாடும் வல்லமை படைத்தவர்கள். உடனே அய்யா சிவபெருமானுடன் கலந்து ஆலோசித்து இவர்களை எப்படி நமது வயபடுதுவது என்று யோசித்தார்.
தங்கள் காரியத்தை செயல் படுத்தும் விதமாக அய்யா வைகுண்டர் திருசெந்தூரில் முருகன் கோவிலில் நடைபெறவிருந்த தேரோட்டத்தில் இந்த துஷ்ட வீரர்கள் கலந்து கொண்டு தேரை இழுப்பதை அறிந்து அங்கு சென்றார். தேரின் மேல் அய்யா அமர்ந்து கொண்டார். மகா மேருவின் எடை பலமாக தேரின் மேல் யார் கண்களுக்கும் புலப்படமால் அமர்ந்தார்.
துஷ்ட வீரர்கள் வழக்கம் போல் எட்டு திக்கிலும் இடப்பட்ட மாமிச படையல்களை ஏற்றுக்கொண்டு தேரின் வடம் பிடித்தார்கள். இது நாள் வரையிலும் மிகச்சாதரணமாக தேரினை இழுக்கும் இவர்களுக்கு இன்று தேரினை அசைக்கக்கூட முடியவில்லை. மீண்டும் ஆடு கிடாய் வெட்டி பலி இட்டார்கள். இரத்த பலி ஏற்றபின்னும் அவர்களால் தேரை தொட்டு இழுக்க முடியவில்லை.
எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த தோல்வியை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.உடனே அவர்கள் தங்களது வல்லமைக்கு காரணமான அஷ்ட மாகாளியை பதம் பணிந்து தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியையும் பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர். இந்த நிலைமைக்கு காரணம் அய்யா நாராயணர் என்பதை அறிந்த மாகாளி துஷ்ட வீரர்களே கலியுகத்தில் நகர் சோதனைகளை பார்த்து தர்மம் நிச்சயிக்க அய்யா நாராயணர் வைகுண்டமாய் அவதரித்துள்ளதால் இனிமேல் உலகில் யாருடைய மூப்பும் செல்லாது. வல்லாத்தான் வைகுண்டரே எல்லாமும் ஆனபடியால் என்னால் இதனை மாற்ற முடியாது. எனவே நீங்கள் ஐந்து பேரும் சென்று வல்லாத்தான் வைகுண்டரின் அடியை போற்றுங்கள் .
அவரது வலது பக்கம் உங்களை ஏற்று வாழவைப்பார் என்று கூறி அனுப்பினாள். அதன்படி அவர்கள் அய்யா வைகுண்டரை அணுகி அவர் பதம் பணிந்து அவர் கட்டளை படி நாடு போற்ற அயாவின் ஏவலாளிகள் ( சீவாயிமார்கள்)ஆனார்கள். அவர்கள் அய்யா வழி மக்களுக்கு காவலாளிகளாகவும் இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.எனவே தான் இன்றும் பதிகளிலும், தாங்கள் களிலும் அய்யாவின் பள்ளியறைக்கு வெளியில் வலது பக்கமாக சீவாயி மேடை அமைக்கபட்டிருப்பதை காண்கிறோம். அவர்களுக்கு புலால் உணவுகளை நியமிக்க கூடாது. குலுங்காத தென்னை இளநீர் குலைகளையும், கதலி பழம் குலையையும் நியமிக்க வேண்டும்.
பேய்களை வதைத்து , மந்திரங்களை வலுவிழக்க செய்தது போல இதுவும் அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அவதார இகனைகளுள் ஒன்றாகும்.
மந்திரங்கள், பில்லி சூன்யங்கள் , பேய் மாறாட்டம் இவைகளால் அல்லல் படும் அன்பர்கள், அருல் நூலில் உள்ள "பஞ்ச தேவர் உற்பத்தி " என்ற பகுதியை மனமுருகி தொடர்ந்து பாட அய்யாவின் அருளால் இந்த விதமான தொல்லைகளில் ( மன சஞ்சலங்களில்) இருந்து நிரந்தர விடுதலை பெறலாம்.
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக