ஞாயிறு, 21 டிசம்பர், 2014

முக்கோடி தர்மம் உகந்தழித்த அன்போரை தக்கோடி நரகமதில் தள்ளவென்றால் உன் மனந்தான்

உயர்ந்தவர்களாக வாழ்ந்தவர்களும் சில வேளைகளில் நான் என்ற 
ஆணவத்தில் அழிந்து போகிறார்கள். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாக
இருப்பதில்லை. அதுபோலவே தீயவர்களும் என்றும் தீயவர்களாகவே இருப்பதில்லை.
நல்லதும் தீயதும் தான் இந்த உலக வாழ்வு. ஒருவன் எவ்வளவு புண்ணிய 
செயல்களை செய்தாலும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் அவற்றால் எந்த 
பயனும் இல்லை. எனவே எல்லாரையும் விட இறைவன் மிக பெரியவன் என்று 
யார் நினைத்து செயல் புரிகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள்.

நானல்லால் நடப்பதுவும் வேறில்லை

உலகில் எத்னை கோடி அவதாரங்கள் நடந்தாலும் அத்தனையும் பரம்பொருள் ஒன்றிலிருந்து வந்த வெளிப்பாடுகளே தவிர அவை வேறு வேறானவைகள் அல்ல. இயற்கை என்ற இறை ஆற்றலே அனைத்தையும் இயக்குகின்றன. இயற்கையின் இயக்கத்திற்கு வேறாக மண்ணில் வேறு எந்த இயக்கமும் நிலை பெற்றிருப்பதில்லை. 

மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே மெய்யர் நன் மக்கள் சான்றோர்...

நமக்கு நாமே உண்மையாக இருப்பதே அழகு. உண்மையில் நிலையாய் இருப்பதே உறுதி. உண்மை நிலையானது. அழியாதது. உண்மையை அறிவது ஞானம். உண்மையை நம்புவது பக்தி. உண்மையாக நடப்பதே மதம் (தர்மம்). முள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறது. அதே போலத்தான் துன்பங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த இந்த உலகில் அனைவரிடமும் அன்பு பாராட்டி மெய்பொருளாம் ஞானத்தை அடையவேண்டும்.

7. கலி யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் எஞ்சிய கடைசி துண்டு தானே கலியாணக பிறவி எடுக்கிறது தீய குணம் உள்ள கலியன் ஈசரிடம் பல வரங்களைப் பெற்றுக் கொண்டு பூலோகபூலோகம் வருகின்ற வழியில் நாராயணர் அவனை வழியில் குருக்குட்டு அவன் பெற்ற வரங்களில் பாதியை பலமற்றதாக ஆக்குகிறார். மேலும் "ஆயுதங்களின்றி இருக்கின்ற பண்டரங்களைத் துன்புறுத்தவோ தொல்லை கொடுக்கவோ செய்தால் நான் என் படைத்தளங்களையும் சுற்றத்தாரையும் இழந்து நரகில் சென்றடைவேன் என்று கலியனிடம் சத்துயம் செய்ய வைக்கிறார் நாராயணர். பிறகு அய்யா வைகுண்டர் சான்றோர்கள் குலத்தில் பிறவி செய்து கலியனை வெற்றி கொள்கிறார்.

6. துவாபர யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் எஞ்சிய இரண்டு துண்டுகளில் ஒரு துண்டு நூறாக பிரிக்கப்பட்டு கௌரவர்கள் பிறக்கின்றனர். நாராயணர் கண்ணனாக பிறக்கிறார். திரேதா யுகதில் கும்ப கரன்னக பிறந்த உயிர் இந்த யுகத்தில் கஞ்சனாக பிறக்கிறது. கண்ணன் முதலில் கொடுமை பொருந்திய கஞ்சனை அழிக்கிறார். பிறகு பஞ்ச பாண்டவர்கள் உதவியோடு கௌரவர்களை அழிக்கிறார். பிறகு எழு தேவ கன்னியர்கள் மூலம் சான்றோரை தமது மகவாக பிறவி செய்கிறார். காளி தேவி சான்றோர்கள் உதவியுடன் தக்கனை அளிக்கிறாள். இதோடு இந்த யுகம் முடியுகிறது.

5. திரேதா யுகம்

இந்த யுகத்தில் குரோனியின் எஞ்சிய மூன்று துண்டுகளில் ஓன்று தீய குணம் உள்ள இராவணனாக பிரக்கிறது. நாராயணர் இராமராக அவதாரம் எடுத்து அவனை அழிக்கிறார். இந்த யுகம் முடிகிறது.

4. கிரேதா யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் எஞ்சிய நான்கு துண்டுகளில் ஒரு துண்டை இரண்டாக பிளந்து சூரபத்மன் சிங்க முக சூரன் என்னும் இரண்டு அரக்கர்களாக படைக்கபடுகிரர்கள். மீண்டும். நாராயணன் ஆறுமுகனாக வேடங்கள் கொண்டு இருவரையும் அழிக்கிறார். சூரபத்மனின் உயிர் இதே யுகத்திலில் மீண்டும் இரணியனாகப் பிறக்கிறது. நாராயணர் இரணியனுக்கு மகனாக பிரகலாதன் என்னும் பெயருடன் பிறக்கிறார். இரணியன் கட்டுக்கு மீறிய அட்டுளியத்தை ஒழிக்க நாராயணர் நரசிம்ம மாகவும் அவதாரம் எடுத்து இரணியனை அழிக்கிறார. இந்த யுகம் முடிகிறது.

3. நெடிய யுகம்

இந்த யுகத்தில் குரோணியின் ஐந்து துண்டுகளில் ஒரு துண்டு இரண்டு உயிர்களாக பிறவி எடுக்கிறது. அவ்வுயிர்கள் தில்லை மல்லலான் மல்லோசி வாகனன் என்னும் பெயர் பெறுகிறான். அவ்வாறு தோன்றிய இரு அரக்கர்களும் கொடுமை செய்ததால் நாராயணரால் கொல்லபடுகிறார்கள். இந்த யுகம் முடியுருகிறது.

2. சதுர யுகம்

குரோணியின் ஆறு துண்டுகளில் ஒரு துண்டு குண்டோமசலியன் என்னும் பெயருடன் பிறக்கிறது. இவனும் கொடுமை செய்கிறான். எனவே நாராயணர் குண்டோமசலியனை கொள்ள அவனை அவனுக்கு எதிரியாக தோன்றி அவனை அழிக்கிறார். இந்த யுகம் முடியுருகிறது.

1. நீடிய யுகம்

நீடிய யுகத்தில் குரோணி என்னும் அரக்கன் பிறக்கின்றான். அவனுடைய கொடுமையினால் நாராயணர் வரம் பெற்று குரோணியை ஆறு துண்களாக வெட்டி அழிக்கிறார். இந்த யுகம் முடியுருகிறது.

அகிலத்திரட்டு அம்மானை நூலில் யுகம் எட்டு வகைகளாக பிரிக்கபடுகிறது

1. நீடிய யுகம் 

2. சதுர யுகம் 

3. நெடிய யுகம்

 4. கிரேதா யுகம் 

5. திரேதா யுகம் 

6. துவாபர யுகம்

 7. கலி யுகம் 

8. தரும யுகம்.

அகிலத்திரட்டு அம்மானையை பற்றி

நாராயணர் இலட்சுமி தேவியிடம் வைகுண்டலோகத்தில் (அகிலத்தில் வைத்து இக்கதையைச் சொல்லுவதலும், நாராயணர் வைகுண்டலோகத்தில் (அகிலத்தில்) இருந்து கொண்டே எல்லா யுகங்களின் நிகழ்ச்சிகளையும் நடத்துவதாலும் அம்மானையாக இக்கதையை பாடியிருப்பதாலும் இந்நூலுக்கு அகிலத்திரட்டு அம்மனை என்னும் பெயர் இடப்பட்டுள்ளது