வெள்ளி, 15 மே, 2015

வாழப்படிப்பு

1.சாஸ்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய
    சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
  1. பத்திரத்தாள் பெற்றமக்கள் நம்முடைய பைந்தொடிமார் கன்னிமக்கள்
    கோத்திரத்தோடே நன்றாய் தழைத்துவாழ
3.விழிமடைவார் படைத்தலைவர் நம்முடைய
    வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
  1. கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய
     கண்ணுச்சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
5.வில்லு கொண்டே எய்துவிட்டேன் நம்முடைய
    விசயன் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
6.பார்த்துவிட்டேன் இரண்டுகண்ணுங்கொண்டு நம்முடைய
   பத்தினி மக்கள் நன்றாய் தழைத்துவாழ
7.மலைக்கன்னிமார் தங்காவில் பெற்ற நம்முடைய
    மக்கள் வலியசீமை கட்டி அரசாளவாழ
8.தர்மருட குலத்தி லுள்ள நம்முடைய
   தெய்வச்சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
9.கோத்தி ரத்து சான்றோர்கள் நம்முடைய
    குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்துவாழ
10.கோட்டைத்தளம் மதிலிடித்து வாழநம்முடைய மக்கள்
     கோடிச் சீமைக்கட்டி அரசாள வாழ
11.ஆல்போல தழைத்து வாழ நம்முடைய
     ஐவர் மக்கள் சீமைகட்டி அரசாள வாழ
12.பயலுடைய தரமறுத்துப் பண்டாரஞ் சீமையான
     மக்கள் நன்றாய் தழைத்து வாழ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக