ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டரின் கண்ணாடி தத்துவம்!

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில்.. ஜோதி ரூபமாக பாவித்து மண்ணறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி உள்ளது .
‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு.
நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து,
இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே!
‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’
கண்ணாடியை அவ்வப்போது துடைத்து தூய்மையாக வைத்திருந்தால்தான் அதில் நம் உருவம் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
அதுபோல், இறைவன் குடிகொண்டுள்ள நம் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான், அந்த நல்ல உள்ளத்தில் இறைவன் குடியேறுவான்
அய்யா உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக