வியாழன், 27 நவம்பர், 2014

திருநாமத்தின் மகிமைகள்

செந்தாமரை மலரில் ஒளிர்கின்ற திருநாமம் அய்யா வழி பக்தர்களின் நெற்றி புருவங்களின் மத்தியிலிருந்து ஜோடி வடிவில் திருநாமமாக இடப்படுகிறது. பள்ளியறையை வணங்கிய பக்தர்கள் பதியில் உள்ள பள்ளியறையின் இடது பக்கத்தில் நிற்கின்ற பணிவிடை பட பிள்ளைகளிடம் சுருளைக் கொடுத்து "அய்யாவுக்கு அன்பாக தரப்படுகிறது'' என்று கூற வேண்டும்.
 
பின்னர் பணிவிடைப் பிள்ளைகளால் பக்தர்களுக்கு திருநாமம் இடப்பட்டு, இனிமம் வழங்கப்படுகிறது. திருநாமம் இடப்பயன்படுத்தும் திருமண பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை நிற திருமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதையே அனைத்து அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
முற்காலத்தில் சில கோவில்களில் திருநீற்றை பூசுவது தீண்டாமையாக கருதப்பட்டது. இதை மாற்றக் கருதிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' ஆதலால் அய்யா வைகுண்டரின் பதிகளிலும், தாங்கல்களிலும் பணிவிடைப் பிள்ளை களால் அன்பர்களுக்கு திருநாமம் இடப்படுகிறது.
 
அத்திருநாமம் இடும்பொழுது பெருவிரலும் ஆட்காட்டி விரலும் இணைந்து இடப்படுகிறது. அதில் பெருவிரல் "நான்'' என்பதையும் குறிக்கின்றது. இம்முறையே "தொட்டு திருநாமம்'' என்று அழைக்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் பக்தர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது. திருநாமம் அணிந்த அன்பர்களின் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
 
நோயின்றி சுகத்துடன் வாழ முடிகின்றது. தீராத நோய்கள், வலிகள் குணமாகின்றது. தீயசக்திகள் நம்மை விட்டு அகலுகின்றது. கவலைகள் இன்றி இன்பத்துடன் வாழ வழிவகுக்கிறது. தேர்வில் வெற்றி பெற முடிகிறது.
 
தீர்க்க முடியாத துன்பம் தரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகிறது. திருநாமம் இடுவதால் நேர்மையாகவும், உண்மையாகவும், வீரமாகவும், அன்பாகவும் வாழ முடிகின்றது. இத்தகைய சிறப்புகளைத் தருகின்ற திருநாமத்தை தினமும் நம் நெற்றியில் தாங்கி அய்யா வைகுண்டரின் திருவருளைப் பெறுக!

புதன், 26 நவம்பர், 2014

முத்திரி கிணறு :

நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில், சுசீந்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஈத்தங்காடு என்னும் ஊர். இங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால் சாமித்தோப்பை அடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த அழகிய கிராமம், இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள சுவாமி அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப்பதியாகத் திகழ்கிறது.
முத்திரி கிணறு :
அய்யா வைகுண்டரின் தருமபதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்ட பிறகே தருமபதிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்காக அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய பொதுக்கிணறுதான் இந்த முத்திரிக் கிணறு.
முத்திரி என்றால், ‘உத்தரவாதம் தருதல்’ அல்லது ‘நியமித்தல்’ என்று பொருள். அய்யா வைகுண்டரின் தருமபதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் முத்திரிக் கிணறு இருக்கும்.
தர்மபதி:
முத்திரிக் கிணற்றில் புனித நீராடிவிட்டு, அய்யா வைகுண்டரின் தருமபதியை நோக்கிச்சில அடிகள் எடுத்து வைத்ததும், தகதகக்கும் பொன்வாசல் பளிச்சிடும். உள்ளே நுழைந்த உடன் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை “சிவசிவ சிவசிவா அரகர அரகரா” என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும்.. முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம்.
கொடிமரத்தைக் கடந்து தியான மண்டபத்தை அடைந்ததும், அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.
பொதுவாக, கோயில்களில் தெய்வங்களை அழகுத் திருமேனிகளில் பார்த்துப் பழக்கப் பட்டிருப்போம். ஆனால், இங்கே அய்யா வைகுண்டரின் திருமேனி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு நாற்காலியில் அய்யா வைகுண்டர் இருப்பதாக பாவித்து, அவர் பயன் படுத்திய பொருட்களை மாத்திரமே வைத்து வழிபடுகிறார்கள்.
நிலைக் கண்ணாடி:
நாற்காலிக்குப் பின்புறம் ஆளுயர நிலைக்கண்ணாடி இருக்கிறது. ‘நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு. அதனாலேயே இப்படியரு வழிபாட்டு முறை! நிலைக் கண்ணாடி முன்பு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்தவரும் அவரே! ‘கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்’ என்பதும் அய்யா வைகுண்டரின் வாக்கு.
உருவ வழிபாடு வேண்டாம் என்பது அய்யா வைகுண்டரின் விருப்பம் என்பதால், அதன்படியே சாமித்தோப்பு உள்ளிட்ட அய்யா வைகுண்டரின் எல்லாத் தருமபதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.
பள்ளியறை தரிசனம் முடித்ததும், மறுபடியும் தியான மண்டபம் வழியாக வந்து, தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.
தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப் படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை.
தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். தேங்காயை இங்கே உடைப்பது உயிர்ப் பலி கொடுப்பதற்குச் சமம் என்பதால், அப்படிச் செய்வதில்லை. கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.
அப்படியென்றால், தருமபதிக்கு வரும்போது என்னதான் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களா?
வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை, அவற்றைக் கொண்டு வருவோருக்குத் திரும்பத் தரப்படமாட்டாது. மாறாக, இப்படி எல்லா பக்தர்களும் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் வழிபாட்டுக்குப் பிறகு, பிரசாதமாக அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.
‘காணிக்கை வேண்டா(து)ங்கோ…’
என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… ‘உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்’ என்பதுதான்.
‘தருமம் செய்து தழைத்திருங்கோ…’ 
என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தரும் பக்தர்கள் இங்கு நிறையப் பேர்.
அய்யா வைகுண்டரைத் தேடி வந்து வழிபட்டால், நாம் நினைத்ததைச் சத்தியமாய் நிறைவேற்றித் தருவார் நம் அய்யா. அனைவரும் சாமித்தோப்பு சென்று அய்யா வைகுண்டரின் திருப்பாதம் பணிந்து வணங்கி, அவர் அருள்பெற்று வருவோம்!
அய்யா உண்டு

அய்யாவின் சிறைவாசமும் அற்புதங்களும்

அய்யாவின் போதனைகள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் ஈர்த்தன. நாளுக்கு நாள்
அய்யாவை நாடிவருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
வைதீக இந்து சமயத்தில் பெருகியிருந்த மூடத்தனத்தில் இருந்து மக்களை மீட்க
வேண்டும் என்பதே அய்யாவின் நோக்கமாக இருந்தது. பேய்களுக்குப் பயந்தும்,
மந்திரவாதிகளுக்கு அஞ்சியும் இருந்த மக்களை அய்யா அழைத்தார். வைகுண்டர்
பிறந்ததால் பேய்கள் அழிந்துவிட்டன என்றும் மந்திரவாதிகளின் சக்தி ஒழிந்து
விட்டது என்றும் கூறினார். யாருக்கும் எந்த நிலைக்கும் அஞ்சாமல் இருக்க
வேண்டும். அடிமைத்தனம் வேண்டவே வேண்டாம். தன்மானம் காப்பதே தர்மம்
என்றெல்லாம் மொழிந்தார்..
தன்னைக் காண வந்தோரின் நோய்களை திருமண்ணும் நீரும் கொடுத்துக்
குணப்படுத்தினார். ஆடம்பரத் திருவிழாக்கள் வேண்டாம், அமைதியாக இறைவனை
வணங்கினாலே போதும் என்றுரைத்தார். கிராமத் தெய்வங்களை வணங்குதல்
வேண்டாம். திருமால் மட்டுமே தெய்வம் அவனையே வணங்குங்கள் என்று

அறிவுறுத்தினார்.
அய்யாவின் போதனைகள் மேல்தட்டு மக்களான வைதீக இந்துக்களின் கோபத்தைத்
தூண்டிவிட்டது.. மேலும் கிறித்தவ மதமாற்றமும் நின்றுபோனதால்,
கிறித்தவர்களும் அய்யாவின் மேல் கோபத்தில் இருந்தனர். தன்னை இறைவனின்
அவதாரம் என்று சொல்லி மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக மன்னனிடம்
புகார் அளிக்கப் பட்டது. அய்யாவைப் பற்றிக் கேள்விப் பட்ட மன்னன்
சுவாதித் திருநாள் சுசீந்திரம் வந்து தங்கினான். தன் மந்திரியிடம்
அய்யாவைப் பற்றி விசாரித்தான். மந்திரியும், "நமக்கு வரி செலுத்தி
அடிமைத்தனம் செய்யும் சாணார் குலத்தில் வைகுண்டராய்த் தோன்றியதாய்
சொல்லிக் கொள்கின்றான். மெய்க்கொண்ட பூமியெல்லாம் வேறொருவர் ஆளாமல் தாமே
முடிசூடி ஆள்வோம் என்றும் சொல்லிக் கொள்கின்றான்" என்றுரைத்தான். ஒரு
ஜோசியனை வரவழைத்து தன்னிலும் பெரியவன் யாரெனக் கேட்டான் மன்னன் .
ஜோசியனும் "மண்ணுலகையெல்லாம் ஒரு குடையில் ஆள மகாவிட்ணு மானுடனாய்த்
தோன்றுவார். அவர் தோன்றும் காலமும் இதுவே" என்றான். "அவர் பிறக்கும்
குலம் யாது?" என மன்னன் வினவ "அது பெரிய வம்சாவழி கொண்ட குலமாக
இருக்கும்" என்று ஜோசியன் உரைத்துச் சென்றுவிட்டான்.
இதனால் மகாவிட்ணு போற்றுதற்குரிய நம்பூதிரி குலத்தில் பிறப்பார் என்றும்
சாணார் குலத்தில் மகாவிட்ணு அவதரிப்பது நடக்க இயலாத ஒன்று என்றும் முடிவு
செய்த மன்னன் வைகுண்டரை கைது செய்து அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அய்யாவைக் கைது செய்ய படைகள் புறப்பட்டன.. மக்கள் வெகுண்டெழுந்தனர்.
எல்லாம் இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த அய்யா பொறுமை காக்கும்படி தம்
மக்களுக்கு அறிவுறுத்தினார். "பொறுத்திருங்கள். உங்களை பூலோகம்
ஆளவைப்பேன். நன்மையைச் சொல்லி, நல்லவழி நடந்து சிரிக்கப் போவது எந்த சாதி
என்று பார்த்து விடலாம்" என்றுரைத்தார்.
படை வீரர்கள் வந்து அய்யாவைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளி,
துப்பாக்கியால் அடித்துக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர்.
வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் அய்யாவின் புன்னகை கண்டு அமைதியானது.
"சாணார் குலத்தில் சாமி அவதரிப்பானோ?" என்ற கேலியை உதாசீனம் செய்த அய்யா
இறைவனின் கட்டளைப் படி அமைதியாக சென்றார்.
தளபதி கௌடன் என்பவன் அய்யாவை மிகவும் கேலி செய்தான். அடித்தான். "அவன்
அடித்த அடியையெல்லாம் ஆபரணமாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என்று
அகிலத்திரட்டில் பாடுகின்றார் அய்யா.
கலிநீசன் என்று அய்யாவால் அழைக்கப் பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன்
சுவாதித் திருநாளின் முன்னிலையில் அய்யா குற்றவாளியாக நிறுத்தப் பட்டார்.
அய்யா தனது சக்தியை எல்லாம் மறைத்து சாதாரண மனிதனாக அவன் முன்னால்
நின்றார். இவனை சோதனை செய்வோம் என்று எண்ணிய மன்னன் தன் கையில் இருப்பது
என்ன என்று கேட்க "இறைவனின் எண்ணம் எதுவோ அது இருக்கும்" என்று
பதிலுரைத்தார் அய்யா. இதனால் அவர் கள்ளசாமி என்று முடிவு செய்த மன்னன்
ஆத்திரமுற்றான். அய்யாவை சரடன் என்னும் கொடிய தளபதியிடம் அழைத்துச்
செல்லக் கட்டளையிட்டான்.
சரடனும் அய்யாவை நிந்தித்து, ஓர் பாத்திரத்தில் சாராயத்தை ஊற்றி அதில்
ஐந்து வித விடங்களைக் கலந்து பால் என்று சொல்லி அய்யாவுக்கு அளித்தான்.
அறியாதவரா அய்யா? ஆயினும் இறைவனின் திருவுளப்படி எல்லாம் நடைபெற வேண்டும்
என்று சொல்லி அதைக் குடித்தார். ஆயினும் எதுவும் ஆகவில்லை. எனவே திகைத்த
சரடன் அய்யாவை சிறைக்குள் தள்ளக் கட்டளையிட்டான்.
கடுஞ்சிறைக்குள் அய்யா தள்ளப்பட்டார். கடுவாய் ஒன்றைப் பட்டினி போட்டு
அதையும் அய்யா இருந்த சிறையறையில் தள்ளினார்கள்..
கொடிய பசியோடு வந்த கடுவாயோ அய்யாவின் அருகில் சாந்தமாய் அமர்ந்தது..
இதைக் கண்ட நம்பூதிரி ஒருவன் சேவகனின் ஈட்டியை வாங்கி கடுவாயைக் குத்தி
அதை வெறியேற்றினான். வெறிகொண்ட கடுவாய் அந்த ஈட்டியைத் தன் வாயால்
கவ்விக் கொண்டது. நம்பூதிரி அதை பலங்கொண்டு இழுக்கத் தனது பிடியை
விட்டது. இதனால் தடுமாறி கீழே விழுந்த நம்பூதிரியின் மார்பில் அந்த ஈட்டி
இறங்கியது. இதனால் மரணமடைந்தான்.
இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. நம்பூதிரி ஒருவன் இதைப் போன்ற கொடியமரணம்
எய்துவது மன்னனுக்கு உகந்ததல்ல என்று அவையோர் மன்னனுக்கு உரைத்தனர்.
இதனால் மன்னன் பயந்து போனான். "நீர் பிறந்த சாணார் குலத்துக்காக மட்டும்
வேண்டுமானால் போராடிக் கொள்ளலாம். அவர்களுக்குரிய உரிமையை மட்டும்
தருகின்றேன். மீதமுள்ள சாதியரோடு நீர் பேசக்கூடாது" என்று ஓர் ஓலையில்
எழுதி அய்யாவுக்கு அனுப்பினான். அய்யாவோ "சான்றோர் குலத்தில் பிறந்ததால்
அவர்களுக்காக மட்டும் பிறந்தவனல்ல.. மானுடர் அனைவருக்காகவும் பிறந்தேன்.
அனைவருக்காகவும் சேதிகள் உரைப்பேன்" என்று பதிலுரைத்தார்.
இதனால் மன்னன் அய்யாவை விடுதலை செய்யத் திட்டமிட்டு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்டான். "நீ நினைத்தபடி அல்ல... எம் அதிகாரத் தந்தை இறைவன்
கட்டளைப் படியே சிறைக்கு வந்தோம்.. நீ குறித்த நாளில் அல்ல... இறைவன்
சொல்லும் நாளிலேயே வெளியே வருவோம்" என்றுரைத்து வெளியேறாமல் சிறைக்குள்

இருந்தார்.
மாசி மாதத்தில் இறைவன் குறித்த திருநாளில் அய்யா சிறையில் இருந்து
வெளியேறினார். அவரை சான்றோர்கள் வாகனத்தில் அமர்த்தி சாமித் தோப்புக்கு
அழைத்து வந்தனர். இந்நிகழ்வை இன்று அய்யா வழி மக்கள் கொண்டாடி
வருகின்றனர்.
சிறைவாசம் செய்து மீண்ட அய்யா செய்த சில அற்புதங்களைப் பற்றி

தவமும் போதனைகளும்

ய்யாவின் தவமும் போதனைகளும்
முத்துக்குட்டி கடலுற்சென்று வைகுண்டம் கண்டு மீண்டு வைகுண்டப்
பண்டாரமாய் தென்னகம் நோக்கி நடக்கலானார். தன் தாய்க்கு மட்டுமே
வைகுண்டத்தின் காட்சியைக் காண்பித்து அதை யாருக்கும் உரைக்க வேண்டாம்
என்று கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தனது பிறப்பிடத்திற்கு அவர் சென்ற போது அவரை எதிர்த்தவர்கள் பலர்.
ஆயினும் பூவண்டர் எனும் இடையர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்குக்
கொடுத்தார். அய்யாவும் அத்தென்னந்தோப்பை மகிழ்வுடன் ஏற்றார். அனைத்தையும்
துறந்து வைகுண்டப் பண்டாரம் அத்தோப்பில் தனது தவவாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதிகாரத்தந்தை அவதார மகனுக்கு இட்ட கட்டளையே இந்த தவ வாழ்க்கை என்று கூறி
ஆறு ஆண்டுகள் தவம் செய்தார்.
முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தரும யுகம் தோன்றுவதற்காகவும்,
இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்கவும், மூன்றாம் இரு ஆண்டுகள்
பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும்
என்றுரைத்தார். இதனை அவரே
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
என்று பாடுகின்றார்.
அய்யாவின் முதல் இருஆண்டுகள்  தவ வாழ்க்கை ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில்
நிகழ்ந்தது. இரண்டாம் இரு ஆண்டுகள் தவவாழ்க்கையை வீராசனம் இட்டுத்
தரைமேல் நிகழ்த்தினார். மூன்றாம் இருஆண்டுகள் தவமோ கடுமையான மௌனதவம்.
இதனை ஓர் பீடத்தை அமைத்து அதன் மேல் அமர்ந்து நிகழ்த்தினார்.
அய்யா தனது தவ வாழ்க்கையின்போது பச்சரிப் பாலை மட்டுமே அருந்தினார்.
வைகுண்டர் உரைத்த ஆறு ஆண்டுகள் தவவாழ்க்கை முடிவுற்றது.. அய்யா தவமிருந்த
காலத்தில் அவரைத்தேடி பதினெட்டு சாதி மக்களும் வந்து கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட அய்யா இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று
எண்ணங்கொண்டார்.
அந்த சமயத்தில் பொதுக்கிணற்றில் வருணாசிரமத்தைச் சாராத இந்த பதினெட்டு
சாதியினருக்கும் தண்ணீரெடுக்க அனுமதியில்லை.. எனவே தனது பூவண்டன்
தோப்பில் ஓர் கிணற்றை ஏற்படுத்தினார். அது முந்திரி கிணறு என்றழைக்கப்
பட்டது. அந்த கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு
பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.
தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்று அய்யா போதித்தார்.
"தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்று பாடினார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப் பட்டிருந்த
காலம் அது. தாழ்த்தப் பட்டோர் சிறு தெய்வ வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தார்கள். இதை அய்யா எதிர்த்தார். திருமால் ஒருவனே தெய்வம்,
அவனை விடுத்து வேறு பேய் பிசாசுகளை வணங்க வேண்டாம் என்று
அறிவுறுத்தினார். ஆதிக்க சாதிகளின் ஆலயத்துக்குள் நுழைவோர் மேலாடை
கழற்றி, இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிக்ழ்த்தினர். ஆனால் அய்யா தனது
பதிக்கு வரும் அன்பர்களை மேலாடை அணிந்து வரச்செய்தார். தலைக்குத் பாகைக்
கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.
ஆதிக்க சாதிகளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் போன்று
தாழ்த்தப்பட்டோரும் திருவிழாக்களைக் கொண்டாடி வந்தனர். வழிபாட்டின்
பேரில் பணத்தை விரயம் செய்யாதீங்கோ என்றுரைத்த அய்யா கடவுளின் பெயரால்
பணத்தைக் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றுரைத்தார்.
உருவ வழிபாட்டை அய்யா மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன்
என்றும் அவன் அனைவருள்ளும் இருக்கின்றான் என்றும் உரைத்த அய்யா தனது
பதியின் பள்ளியறையில் ஓர் கண்ணாடியை மட்டும் நிறுவினார். உன்னிலே
இறைவனைக் காண் என்பது அதன் மறை பொருள்.
நியாயம் தவறாமல் நேர்மையோடு யாருக்கும் அஞ்சாத வாழ்க்கை வாழ்வதே
இறைவனுக்குப் பிரியமானது என்றுரைத்த அய்யா அதன்படி வாழும்படி தன்
மக்களுக்குப் போதித்தார்.
அய்யா தனது வழியை அன்பு வழி என்று அழைத்தார். தன் மக்களை அன்புக்கொடி
மக்கள் என்றழைத்தார். இது போன்று புதுமையான கருத்துக்களை அய்யா
மொழிந்ததால் நாள்தோறும் அவரைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்
அதிகரித்தது. அதே சமயத்தில் வைதீக மதத்தின் ஆடம்பர வழிபாட்டு முறைகளுக்கு
அய்யாவின் உரைகள் ஓர் சம்மட்டியாக விழுந்தது.
தன்னைத் திருமாலின் அவதார மகன் என்றுரைத்தது ஆதிக்க சாதியினருக்குப்
பிடிக்கவில்லை. மகாவிட்ணுவின் அவதாரம் என்று கூறி மக்களைத்
திசைதிருப்புகின்றார் என்ற குற்றச்சாட்டு அய்யாவின் மேல் சுமத்தப்
பட்டது.
மேலும் கிறித்தவர்களாக மதம் மாறத்துவங்கிய காலக்கட்டத்தில் மதமாற்றத்தைத்
தடுத்து நிறுத்தியதும் அய்யாவின் செயல்தான். ஆனாலும் தனது போதனைகளில். இதனால்
கிறித்தவப் பாதிரிமார்கள் ஆத்திரம் அடைந்தனர். அய்யாவைப் பற்றிய
அவதூறுகளைப் பரப்பத் துவங்கினார்.. ஆனாலும் அய்யா எதைப் பற்றியும் கவலை
கொள்ளவில்லை. தனது பணியை செவ்வனே செய்தார்.
தாழ்த்தப்பட்ட பதினெட்டு சாதியினருக்குள்ளும் ஏற்றதாழ்வுகள் இருந்தன.
இதனை முதலில் களைய வேண்டும் என்று எண்ணிய அய்யா சமபந்தி போஜனத்தை
ஆரம்பித்து வைத்தார். முதலில் மறுத்த பலரும், அய்யாவின் அருளுரைகள்
கேட்டுத் திருந்தி ஒற்றுமையாக உணவருந்தினர்.
அச்சமயத்தில் ஏற்கெனவே உரைத்தது போல் தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள்
மேலாடை அணிய அனுமதியில்லை.. இதனை எதிர்க்க அய்யா நிகழ்த்திய தோள்சீலைப்
போராட்டத்தைப் பற்றி அடுத்த மடலில் காண்போம்.

அய்யாவின் முற்பிறப்பும் அவதார நோக்கமும்

கடலுள் மறைந்த அய்யா மூன்றாவது நாள் திரும்பி வந்தார். புத்தம் புது
உடலோடு.. தன்னை அணைக்க வந்த அன்னையைத் தடுத்து "நான் உன் மகன் அல்லேன்.
கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன்" என்றுரைத்த
போது அதனை அன்னையார் நம்பவில்லை... எனவே தனது முற்பிறவியைப் பற்றிய
உண்மையை அய்யா அவர்கள் தன் தாயாருக்கு இயம்ப வேண்டியதாயிற்று.
அமரர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் குரோணி என்னும்
அசுரனைப் படைத்தார். இவ்வசுரன் அனைத்துலகத்தையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான். வைகுண்டத்தை வெற்றி கொள்ள
குரோணி சென்றபோது கோபங்கொண்ட திருமால் குரோணியைக் கொன்றார். அவனது உடலை
ஆறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை
உணர்த்துவதற்காக குரோணியின் உடல் ஒவ்வொரு அசுரனாகப் பிறந்தது.
சதிர்யுகம், நெடியுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபாரயுகம் என்னும்
ஐந்து யுகங்களிலும் அசுரனாகப் பிறந்தான். திருமால் பல்வேறு அவதாரங்களை
எடுத்து குரோணியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆறாவது யுகமான கலியுகத்தில், குரோணி மாயையாக உடலற்றுப் பிறந்தான்.
அதன்படி மக்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி அதன் மூலம்
அதர்மத்தை வளர்த்த கலிநீசன்தான் குரோணியின் ஆறாவது துண்டு.
கலிநீசனின் செய்கைகளைக் கண்காணிக்க சம்பூரண தேவன் என்பவனைத் திருமால்
பூலோகத்துக்குச் செல்லக் கட்டளையிட்டார். சம்பூரண தேவனுக்கு எமலோகத்தைச்
சேர்ந்த பரதேவதையின் மேல் காதல் இருந்தது. அவளுக்கு ஏற்கெனவே மணமாகி
இருகுழந்தைகள் இருந்தன. ஆனாலும் அவளும் சம்பூரண தேவன் மீது காதல்
வயப்பட்டாள்.
எனவே சம்பூரணதேவன் திருமாலிடம் தன் காதலியும் தன்னோடு பூலோகம் வரவேண்டும்
என்று வரம் வேண்டினான். அமரனாகப் பிறந்த சம்பூரணதேவனுக்கு அவள்
பொருத்தமற்றவள் என்றும், மாற்றான் மனைவி என்றும் திருமால்
அறிவுறுத்தினார். ஆனால் சம்பூரண தேவன் திருமாலிடம் மிக உருக்கமாக
வேண்டிக் கொண்டான். எனவே அவனைத் தவம் செய்ய பணித்தார். "உன் தவத்தின்
வலிமை கண்டு உனக்கு வரம் தருவேன்" என்றுரைத்தார்.
எனவே சம்பூரண தேவனும், பரதேவதையும் தவம் புரிந்தார்கள். அவர்களது தவம்
பூரணம் அடையும் வேளையில் சிவபெருமானும், திருமாலும் அவர்களுக்கு வரம்
வழங்க வந்தனர். அவர்களை வரவேற்க அமரர் குல அதிபதியான இந்திரனும் வந்தான்.
இந்திரனைக் கண்டதும் இந்திரபதவியின் மேல் மோகம் கொண்டான் சம்பூரண தேவன்.
தன் காதலியுடன் பூலோகம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தவம்
தேவேந்திர பதவி வேண்டும் என்ற பேராசையில் முடிந்தது.
இதனைக் கேட்ட திருமால் கோபம் கொண்டார். அவர்கள் இருவரையும் பூமியில்
பிறக்க ஆணையிட்டார்.
பரதேவதை ஏற்கெனவே தனது கணவன் மற்றும், குழந்தைகளுக்குத் துரோகம்
இழைத்ததால், கலியுகத்தில் அந்தக் கணவனோடு சேரவேண்டும் என்றும்,
குறிப்பிட்ட காலத்தில் தன் கணவனை இழப்பாள் என்றும் சாபமிட்டார். ஆயினும்
சம்பூரணதேவன் உனக்காகப் பிறப்பான். உன்னை மணப்பான். என்றும் கூறினார்.
சம்பூரண தேவனுக்கும் அவன் பேராசைப் பட்டதால் அதற்குத் தண்டனை நிச்சயம்
உண்டு என்றும் பூலோகத்தில் பிறந்து 22 வயது வரை சாதாரண மானுட வாழ்க்கை
வாழ வேண்டும் என்ரும், கணவனை இழந்த பரதேவதையை மணக்க வேண்டும் என்றும்
கூறினார். அச்சமயத்தில் தீராத நோய்க்கு ஆளாகி மரணத்தில் விளிம்பில்
நிற்கும்போது தானே சம்பூரண தேவனின் உடலில் இறங்கி அவனை மீட்டுக்
கொள்வதாகவும், அவ்வுடல் மூலம் தர்மத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறினார்.
அய்யா அவர்கள் தானே அந்த சம்பூரண தேவன் என்றும், கடலில் தன்னை திருமாலின்
தூதர்கள் வைகுண்டம் அழைத்துப் போனார்கள் என்றும் அங்கே திருமால் தனக்கு
கலியை அழிக்கும் வழியைப் போதித்தார் என்றும் உரைத்தார். அங்கிருந்து
திருமால் தன்னை அவரது மகன் என்று உரைத்தமை பற்றிக் கூறிய அய்யா அவர்கள்
அவர் எப்போதும் தம்மோடு இருப்பதாகவும் கூறித் தன்னை வைகுண்டர் என்று
பூலோகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அய்யா தெரிவித்தார்.
தன் அன்னையாருக்குக் கடலில் வைகுண்டத்தின் காட்சியைக் காணச்செய்து இதை
யாருக்கும் உரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதே சமயத்தில் அய்யா இன்னொரு உண்மையையும் எடுத்துரைத்தார். பொன்னுமாடன்
நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த குழந்தை பிறந்த சிறு
நேரத்திலே இறந்து விட்டதாகவும் அச்சமயத்தில்தான் சம்பூரணதேவன் அவ்வுடலுள்
செலுத்தப் பட்டதாகவும் கூறினார். இதனைத் தாயாரும் ஒப்புக் கொண்டார்.
பிறந்த குழந்தை சிறிது நேரம் சலனமில்லாமல் கிடந்ததையும், பின்னர்
அழுததையும் அன்னை நினைவு கூர்ந்தார்.
அய்யா வைகுண்டர் திருமாலிடம் கலிநீசன் வாங்கி வந்த வரத்தைப் பற்றி
உரைத்தார். அதன்படி கலியை அழிக்கவும் ஆட்டுவிக்கவும் பண்டார வடிவங்கொண்டு
திருமாலே வைகுண்டராக அவதரித்தார். பண்டார உருக்கொண்டு அன்னைக்கு
உபதேசித்துப் பின்னர் தென் திசை நோக்கி நடக்கலானார்.
தென் திசை நோக்கி நடந்த அய்யா என்ன செய்தார்? என்னவெல்லாம் போதித்தார்?
அடுத்த மடலில் காணலாம்.

அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.

தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் ஒரு சம்பிரதாயம் கன்னியாகுமரியில் ஒரு சாராரிடம் உள்ளது. தன்னைத்தானே எப்படி வணங்கிக் கொள்வது? கருவறைக்குள் நிலைக்கண்ணாடியை வைத்து அதில் தெரியும் தங்கள் உருவத்தையே வணங்குகிறார்கள். அவர்கள் - அய்யா வழியினர்.
கன்னியாகுமரி சாஸ்தான் கோவில்விளையில் வாழ்ந்து, சரித்திரமாய் மறைந்த அய்யா வைகுண்டர் கட்டமைத்த தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவோரே அய்யாவழி மக்கள். மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டப்படும் வைகுண்டர், திருமாலின் அவதாரமாக கருதி வணங்கப்படுகிறார்.
மஹாவிஷ்ணு தசாவதாரம் எடுத்தவர். அதோடு, கலி மாயையில் சிக்கி வேதனைக்குள்ளாகும் மாந்தர்களை காக்க நாராயணன் எடுத்த மற்றொரு அவதாரமே வைகுண்டவதாரம் என்று அய்யாவழி மக்கள் நம்புகிறார்கள்.
1809-ல் குமரி மாவட்டத்தின் சாஸ்தான் கோவில்விளை என்று அழைக்கப்படும் சாமித்தோப்பில் பொன்னுமாடன்-வெயிலாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் வைகுண்டர். மகனுக்கு ‘முடிசூடும் பெருமாள்’ என பெயரிட்டனர் பெற்றோர்.
மாடன், சூடன் என்று மட்டுமே பெயரிட உரிமைபெற்ற ஒரு சாதியில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயரிட்டதை மேல்சாதியினர் அங்கீகரிக்க மறுத்தனர். கொடுமைகளையும், மிரட்டலையும் சகிக்காத பொன்னுமாடன் ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார்.
முத்துக்குட்டி, இளவயதிலேயே சமூக ஆர்வம் மிக்கவராக இருந்தார். மேல் சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினார். ஆண்டாண்டு காலமாக அடங்கி ஒடுங்கி கிடந்த மக்களுக்கு உணர்வூட்டும் விதமாக போதனைகள் செய்தார். தலையிலே முண்டாசு கட்டி, நெற்றியில் நாமம் இட்டு, முட்டுக்கு கீழே முழு வேட்டி கட்டி வழிபடும் உரிமையை பெற்று தந்தார். இதனால் முத்துக்குட்டி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அனைத்தையும் தன் உறுதியால் விரட்டினார். இந்த நிலையில் தன்னைவிட வயது முதிர்ந்த, ஒரு பெண் குழந்தைக்கு தாயான திருமால் வடிவு என்ற பெண்ணை மணம் புரிந்தார் முத்துக்குட்டி. இந்த இல்லற வாழ்வில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
முத்துக்குட்டியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராஜவம்சம், அவரை மருந்துவாழ்மலைக்கு விருந்துக்கு அழைத்து விஷம் கொடுத்தது. சிறிது சிறிதாக உயிர் எடுக்கும் அந்த விஷத்தால் கடும் காய்ச்சலுக்கு உள்ளானார் முத்துக்குட்டி. பல்வேறு மருத்துவங்களாலும் குணம் தெரியவில்லை. இதனால் துடித்துப்போன தாயார் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும், நாராயணனின் அருள்வேண்டி உருகி நின்றனர்.
ஒருநாள் இரவில் ஒளிவடிவாய் தோன்றிய நாராயணன், ‘திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் மாசித் திருவிழாவுக்கு உன் பிள்ளையை அழைத்து வா’ என்று ஆணையிட்டார். உடல்நிலை மிகவும் தொய்வடைந்த நிலையில் பெண்கள் இருவரும் தொட்டில் கட்டி முத்துக்குட்டியை தோளில் சுமந்து சென்றனர். கூடங்குளம் அருகில் நவலாடி என்ற இடத்தில் உணவருந்துவதற்காக தோள்சுமையை இறக்கியபோது முடங்கிக் கிடந்த முத்துக்குட்டி எழுந்தார், நடந்தார். நேராக திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்றார். தாய்க்கும் மனைவிக்கும் இந்த அற்புதம் மயக்கத்தையே கொடுத்தது.
விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கிய முத்துக்குட்டியை சிறிது நேரத்தில் காணவில்லை. இறக்கும் நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவர் கடலுக்குள் நடந்து சென்று மறைந்தது அங்கே கூடியிருந்த மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. முத்துக்குட்டி கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணினார்கள். ஆயினும் வெயிலாள் மட்டும் கரையில் மகனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்.
கடலுக்குள் சென்ற முத்துக்குட்டியை, நாராயணரின் தூதுவர்கள் லெட்சுமி கோயில் கொண்டிருந்த மகர மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திருமால் மூன்று நாட்கள் கலிகாலம் பற்றி போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி, பூவுலகை ரட்சிக்க தன் பிரதிநிதியாய் வெளியில் அனுப்பிவைத்தார். கடலுக்குள் இருந்து ஒளியாய் வெளிவந்த மகனை கட்டி அணைத்து முத்தமிட்டார் வெயிலாள்.
ஆனால், ‘அம்மா. நான் வைகுண்டராக வந்திருக்கிறேன். இனி நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்’ என்று தன் நிலையை விளக்கினார், மகன். இதைக்கேட்ட மக்களும் வெயிலாளைப் போலவே திகைத்து நின்றனர்.
பின்னர் சாமித்தோப்பு வந்த வைகுண்டர், மக்களுக்கு ஆன்மிக போதனைகளை செய்யத் தொடங்கினார். Ôஇந்த உலகத்தில் சாதியின் பெயரால் மோதல்கள் உருவாகிவிட்டன. மதத்தின் பெயரால் சண்டைகள் பெருகிவிட்டன. இருப்பவன், இல்லாதவன் என்று ஏகப்பட்ட பிரச்னைகள்- மனிதர்கள் திசைமாறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவை எல்லாம் கலியின் அடையாளங்கள். இவற்றை ஒழிக்கவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்’ என்று மக்களுக்கு போதிக்கத் தொடங்கினார். மனிதருக்குள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை பெற்று தந்தார். சாதிக்கொடுமைக்கு எதிரான அவரது பிரசாரம், திருவிதாங்கூர் அரசுக்குக் கோபமூட்டியது. அவருக்கு தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டது. புலிக்கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார் வைகுண்டர். பல நாட்களாகப் பசியும் பட்டினியுமாகக் கிடந்த புலி, வைகுண்டரை பார்த்ததும் அமைதி யாய் அவர் காலடியில் வந்து படுத்தது. ராஜ கொடுமைகளைத் தன் சக்தியால் முறியடித்த வைகுண்டர், பின்னர் குமரிக்கு வந்து பதிகள் அமைத்து மக்களுக்கு போதனைகள் செய்தார்.
அவர் அருளிய ‘அகிலதிரட்டு அம்மானை’ இன்று அவர் வழிவந்த மக்களுக்கு புனித நூலாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேலானோர் இன்று அய்யாவழியை பின்பற்றி வருகின்றனர். அய்யாவழி வழிபாட்டு தலங்கள் ‘பதிகள்’ என்று அழைக் கப்படுகின்றன. அய்யா வைகுண்டரின் பாதம் பட்ட சாமித்தோப்பு தலைமைபதி, சின்னமுட்டம். முட்டபதி, சொத்தவிளை அம்பலபதி, நாராயணன்விளை. பூப்பதி, தென்தாமரைகுளம்பதி, கோவளம், துவாரகாபதி ஆக விளங்குகின்றன. இது தவிர தமிழகம் முழுமைக்கும் ஏழாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் உள்ளன. இந்த தாங்கல்கள் அய்யாவின் தத்துவங்களை விளக்கும் கல்விக்கூடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை, எளிமையை வலியுறுத்துகிறது அய்யாவழி வழிபாட்டு முறை. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தொழ வேண்டும் என்பது நியதி.
காலை உகப்பெருக்கு, மதியம் உச்சிப்படிப்பு, இரவு உகப்பெருக்கு ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டிய முக்கிய நடை முறைகள். ‘பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று’ என்று அய்யா வைகுண்டரின் தத்துவத்துக்கு ஏற்ப எல்லா பதிகளிலும் 5 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அய்யாவழி மக்கள் நாமம் இடப் பயன்படுத்தும் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக் கப்படுகிறது. புருவ மத்தியில் இருந்து தீபவடிவில் நெற்றியில் மேல்நோக்கி இந்நாமம் இடப்படுகிறது.
அய்யாவழி மக்களின் தலைமைபதியாகிய சாமித்தோப்பு பதியில் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மாசி 20-ம் நாள் அய்யா வைகுண்டரின் அவதாரத்திருநாள்; சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பதியில் உள்ள முத்திரிபதம் என்னும் தீர்த்த கிணறு, சிறப்பு பெற்றதாகும். ஆராதனை, அபிஷேகம் இல்லாத அய்யா வழிபாட்டு முறைக்கு இத்தீர்த்த பதத்தை தெளிப்பதன் மூலம் அனைத்து சிறப்பும் நிறைவு பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.
இந்த தீர்த்தம் அருமருந்து என்றும் போற்றப்படுகிறது. முண்டாசு கட்டி தீப நாமமிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பதிகளுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் சாமித்தோப்பு தலைமைபதியின் கருவறைக்குள் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன்மேல் அகிலத்திரட்டு மூலச்சுவடி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டில் மாற்றப்படும். ஏனென்றால் பழைய கட்டில் முற்றிலும் கிழிந்திருக்கும். இக்கட்டிலில் அய்யா வைகுண்டர் வந்து உறங்குவதாக அய்யா வழி மக்கள் நம்புகிறார்கள்.
குமரி கடலோரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல கிராமங்கள், அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும் நினைவு கூறுகின்றன.
பிரதி எடுக்க
எழுத்தின் அளவு

அய்யாஉண்

அய்யா உண்டு தாழ கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அன்பு கொடி மக்களுக்கு வணக்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வைகுண்ட அவதாரத்தின் நோக்கம் பற்றிய அகிலதிரட்டின் உண்மையான கருத்துகளை அய்யாவின் சான்றோர் மக்களுக்கு தெரிவிப்பர்தே இந்த பகுதியின் நோக்கமாகும். 1.,அனைத்து அய்யாவழி குடும்பக்களுக்கும் அகிலதிரட்டினை சேர்ப்பது, 2.,அனைத்து தாங்கல்களிலும் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மகாவிஷ்ணுவின் அவதார செய்தி கூட்டங்களை நடத்துவது, 3.,அகிலதிரட்டு தர்மபள்ளிளை அனைத்து தாங்கல்களிலும் நிறுவுவது, 4.,அய்யாவழி குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவது, அய்யாவழி அன்புகொடி மக்கள் அனைவரும் ஒன்றினைவோம் முன்னேற்றம் காண்போம். அய்யாஉண்டு

அய்யாவழி ஆகமமான அகிலதிரட்டு அம்மானையில் காலத்தால் முற்பட்டது தமிழ் என்பதை காணலாம்:

அலகைதுளைத்து தீ நரகத்திலே ஆனியரைந்து அவனிதனில் குலையக் குலைத்துத் தீ நரகில் கொண்டெ போடச்சொல்வேனே.

மாய தோற்றத்தில் மயக்க முற செய்து குடும்பத்தை குலைந்து, செயலிழக்க வைத்து அவனி வாழ்வு முடியும் போது பொல்லாத நரக குழியில் போய் விழவைபேன்.


உலகில் மனுக்கள் தமிழாலே உவமை உரைத்து விட்டாற்போல் கலகமுடனே என்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை

முற்காலத்தில் மக்கள் உதாரணத்திர்கு தமிழ் மொழியில் இருந்துதான் சிறப்பான உதாரணம் கொடுத்திருக்கின்றார்கள், அப்படிப் பட்ட தமிழ் மொழி இன்று ஆங்கில மோகத்தால் அடிமை பட்டுகிடக்கின்றது. இப்படிப் பட்ட எம் தாய் மொழியான தமிழை புறக்கணிப்போரை,


வாயுவே பூப்போல் மலர் எடுத்து வீசி நிற்கும் ஆயும் கலை தமிழும் அறிவும் ஒன்று போல் பரவும்.

தென்றல் வீசுகின்றபோது மலர் எடுத்து மேனியை தடவுவது போல் இருக்குமாம். இது ஒரு இனிமையான சூழல் இது போன்றதே தமிழும், அறிவும், கலையும் ஒன்றை ஒன்று சார்ந்து என்றும் நிலைத்து நிற்கும்.


மேகம் குடை நிழற்ற மேலவர்கள் போற்றி நிற்க யோக முனிமார் ஓதித் தமிழ் கூற.

முற்காலத்தில் தவமுனிமார்கள் எல்லாம் தமிழில் மந்திரங்கள் ஓதி இறைவனை துதிக்கும் போது, கார் மேகங்கள் திரண்டு வந்து குடை பிடிக்குமாம். வானலோகத்தார்கள் எல்லாம் வந்து கண்டு போற்றி நிற்ப்பார்களாம். அத்தகைய இனிமையும், பழமையும் கொண்டது தமிழ் மொழியாம்.


ஆராய்ந்து பாட அடியோன் சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் என் நாவினில்.

முற்காலத்தில் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு இறைவனை நினைத்து தொடங்க வேண்டும், என்பதை உலகிற்கு உணர்த்தியது தமிழ் மொழியே.

அய்யாவழி ஆகமமான அகிலதிரட்டு அம்மானையில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பது:

7. கல்விக்கு உகந்த கருணாகரர் ஆனவரே செல்விக்கு உகந்த சென்மமது கொண்டவரோ.

எங்களுக்கு அருள்தரும் கருணாகர்ர் ஆனவரே அய்யா நாங்கள் கல்வி செல்வம் பெற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த அய்யா வைகுண்டர் நீர்தான் அய்யா.


கல்லாதர் தமக்குக் கசப்பு இனிமேல் கண்டாயோ கல்லாதர் கருவறுத்து சுவாமி அதிகபதி வலம் வருவோம்

கல்லாத காரணத்தல் இந்தமக்கள் அடிமைகளாக நட்த்தப்பட்டனர். இனிமேல் கல்லாதவர்களே இல்லை எண்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அதிகபதி எனும் பரம்பொருள்ளிடம் வேண்டுவோம்.


பெற்றோர்கள் கண்டு கொள்வார் பேச அரிய என்மகனே கற்றோர்கள் கண்டு கொள்வார் கண்ணே திருமகனே

லட்ச்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் தன்பிள்ளையை பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள் அது போல் கற்றவர்கள் எத்தஸ்கைய சூள்நிலை களையும் எதிர் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள்.


கல்லாத புல்லர் கருவொளிந்து நல்லோராய் கடக்கக் கருதாதே கற்றோரை கைவிடாதே

கீழ்மக்கள், மேல் மக்கள் என்ற பேதமையை கல்விதான் மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது, எனவே கற்றவர்கள் அனைவரும் அரவனைத்து உலகில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திடவேணும்

சற்றோலே வாழ்வு சகடனுக்கே வருகில் கற்றோரே ஆகிடினும் கண்டு அறிவேன் போ நீ என்பான்

சகடயோகம் ஒருவருக்கு வரும் போது என்ன நிலையில் இருப்பாரோ அத்தகைய நிலைப் பாட்டை கற்றவர்கள் அடைவார்கள். எனவே கல்விதான் அனைத்தையும் உருவாக்கும் சக்தி ஆகும்.


மலையாய் வளர்ந்து வைகுந்தர் வருகையிலே அலைபோல் இளகி அவனிதனில் பாய என்று.

இப்படிப்பட்ட இறுக்கமான சூழ் நிலையில் இருந்து விடுபட வைகுண்டர் இந்த பூமியில் அவதரிப்பார். அதன்ப்பின்னர் இறுக்கமான நிலை மாறி கல்வி கடல் அலைபோல் பூமியில் பெருகி ஓடும்.


கல்வி இளகாமல் கல்போல் இருந்ததனால் பல்லுயிர்கள் வாழும் பாரில் ஒருபங்காக

முற்காலத்தில் கல்வி என்பது குருகுலங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது, குருகுலம் மன்னர்களை சார்ந்தே இருந்தது, எனவே கல்வி எல்லோரும் கற்க்க முடியாத இறுக்கமான சூழ் நிலை உலகில் உருவாகி இருந்தது.



வடக்குவாசல்

தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றதில் இந்த நானும் ஒருவன்தான்.. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்

அன்பில் நிறைந்த அய்யா அங்கே அற்புதம் நிகழ்த்துவதில் ஆயிரம் கோடி அற்புதங்களை சொல்லலாம் அய்யா அங்கே இருப்பது உண்மை உலகில் மனுவாய் வந்த இறைவன் இங்கே இருந்து அருள் உரைக்கிறார் உண்மை. .....

அய்யா வைகுண்டர்.

உங்களுக்காய் வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா,இரு மனதாய் எண்ணாதே பின் எனக்கு உத்தரம் சொல்வாயே..!
(விளக்கம்)
என் மக்களே உங்களை கொடுமை படுத்திய இந்த கலியிடம் இருந்து உங்களை காப்பாற்ற அனைத்து சக்திகளையும் என்னுள் அடக்கி நானே உங்களுக்காக இந்த கலியில் அகப்பட்டு,அடிபட
்டு சோதனைகளை அனுபவித்து,இந்ந கலி எண்ணத்தை கருவறுக்க நானே 6வருடம் தவசு பண்ணி இந்த யுகத்தையும் முடித்து உங்களையும் தூய்மை படுத்தி நீங்கள் என்னை வந்து அடைய சூட்சம புத்திகளையும் (இறைவழி அடையும் முறை)சொல்லி நல்ல மனுக்களை தேர்ந்தெடுத்து உங்களுக்கு என் ஆட்சியான தர்ம யுகத்தில் வாழவைக்கவே வந்தேன் இது உண்மை. இதை விடுத்து வந்திருப்பது (முப்போருள்) இறைவனான வைகுண்டம் என்று அறியாமல் நான் முனிவன் என்றோ,யோகி என்றோ,சித்தனென்றோ,சாதாரண மனிதன் என்றோ நினைத்து இருபுத்தியால்(சந்தேகபுத்தி) என்னை மறந்து யாரோ என்று நினைத்து உன் மனது படி அநியாய பாவங்களை செய்தால் இந்ந கலியுகத்தை அழித்து உன்னிடம் நடுதீர்ப்பு கேட்பேன் நீ சொல்ல முடியாமல் தவிப்பாய் உன்னை கடுநரகத்தில் தள்ளி கதவடைப்பேன்(அருள்நூல்)அய்யா வைகுண்டர்.

அகில வரிகள்...

நாலு மூணு கணக்கு நடுதீர்த்த ஞாயமதும்
மேலெதிரி இல்லாமல் வினையில்லாது ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊழ்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே.

- அகிலம் -

விளக்கஉரை :-

ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்
லாம் தெளித்துப்பார்த்து,
அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும்,
இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விபரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதி வைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப்பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகின்ற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழ்வார்கள் என்று அய்யா இந்த அறிய வரலாற்றை அருளுகிறார்.
- அய்யா உண்டு -

அகிலத்திரட்டு உரை!!

பேயை எரித்து புதுமை மிகச் செய்ததுவும்

ஆயர் குலத்தை ஆளாக்கி கொண்டதுவும்

சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்

நீண்டபுகழ் தர்மம் நிறுத்தி அரசாண்டதுவும்

பத்தும் பெரிய பாலருக்காக வேண்டி

சத்தழியும் பாவி தடியிரும்பிலும்
இருந்து

படுத்தின பாடெல்லாம் பாலருக்காகப் பொறுத்து

உடுத்ததுணி களைந்து ஒருதுகிலைத் தான்வருந்தி

தேவ ஸ்திரிகளையுஞ் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்

பாவக் கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டு

நாலு பிறவி நானிலத்திலே பிறந்து

பாலு குடித்தாண்டி பருபதத்தின் மேல்தாண்டி

மனுக்கண் காணாமல் மறைந்தொரு மூன்றுநாளாய்

தானுந் தவமதுவாய் சாயூச்சியமே புரிந்து

நல்லோரை எழுப்பி நாலுவரமுங் கொடுத்து

பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து

வானம் இடியால் மலைகள் இளகிடவும்

கானமது நாடாய் கண்டதுஞ் சூரியனும்

தெற்கு வடக்காய்த் திசைமாறி நின்றிடவும்

ஒக்கவே நாதன் உரைக்கிறார் அன்போரே.

- அகிலம் –

விளக்கம் :-

சாமிதோப்பு வடக்கு வாசலில், அய்யா தவநிலையாக இருந்துகொண்டே
பேய்களை எரித்து. உலகில் பெரும் புரட்சி செய்ததையும், துவாபரயுகத்தில் யாதவகுலத்தோரை எல்லாம் ரட்சித்த விதத்தையும், இந்தக் கலியுகத்தில் சான்றோர்களை எல்லாம் தம்பால் அரவணைத்து பாதுகாத்துக் கொண்டு இருப்பதையும் , வானளாவிய தர்ம சிறப்புகளையெல்லாம் நிலைநிறுத்தி, இந்த நிலவுலகைப் பரிபாலனம் செய்வதையும், முதிர்ந்த நிலையுடைய உயர்வான தம் மக்களுக்காக வேண்டி, மடிந்து போவதையே தம் முடிவாக கொண்ட கலியரசனாகிய பாதகன் இட்ட மிக பெரிய இரும்பு சங்கிலிகளோடு சிறையில் இருந்து கொண்டே அந்த கலி படைகள் செய்த கோரமான கொடுமைகளை எல்லாம் தாங்கிய வண்ணம் இருந்ததையும், ஏகாபரனாகிய இறைவனின் இயல்பான சூக்கும வடிவத்தை விலக்கிவிட்டு நிலவுலக மனிதனை போன்றதொரு தோற்றத்தை வருவித்துக்கொண்டு துவாபரயுகத்தின் இறுதியில் அடுத்து வர இருக்கும் கலியுகத்தில் தேவலோகதாரையெல்லாம் பூவுலகில் பிறவி செய்யவும் அவர்கள் மூலமாக கலியுகத்தை தர்ம சாம்ராச்சியமாக மாற்றவும் எண்ணம்கொண்டு அயோக அமிர்தகங்கை அருகில் தேவலோகதாரை பூவுலகில் பிறப்பிக்க பயன்படுத்திய சப்தமாதர்களையும் கலியுகத்தில் பிறப்பித்து, பாருலக மக்கள் எல்லாம் பயன்பெறும் வகையில் அந்த சப்தமாதர்களை ஆட்கொண்டதையும், மீண்டும் இந்த பாவம் சூழ்ந்த கலியுகத்தில் பற்பல தொல்லைகளை அனுபவித்து இல்லறதோனாவும், பிரம்மசாரியாகவும், பெரும் தபோதனனாவும், துறவியாகவும் நான்கு நிலைபாடுவுடையவராக நானிலத்தில் காட்சியளித்துகொண்டே, ஆண், பெண், என்ற உணர்வுகளை தாண்டி, பிறவி நிலையை கடந்து, மனிதர்களால் உற்றுநோக்கியோ, உணர்ந்தோ கொள்ளமுடியதா நிலையில் மூன்று நாட்களாக அனைத்தும் தாமகிய தவமுமாகி, நல்லோர்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்து, அவர்களுக்கு அன்பு, பண்பு, ஈகை, தியாகம், ஆகிய நான்கு வரங்களையும் அருள் பாலித்து, பொல்லாத பாதகர்களையெல்லம் நரகத்தில் மூழ்கிடச்செய்வதும் , ஆகாயத்தில் இருந்து விழும் இடியால், மலைகள் இளகி போவதையும், சூரியன் தெற்கும் வடக்குமாக திசைமாறி உதிக்கப்போவதையும் இத்தகையது அத்தனையும் அய்யா இயல்பாக இதன் மூலம் சொல்லுகிறார் அன்பர்களே!!!!!

- அய்யா உண்டு -

சகாதேவ சீடரின் தன்னடக்கம்

அகிலதிரட்டு உரை:-


அய்யா உரைக்க அன்போர்களே தங்கள்முன்னே
மெய்யாய் எழுதி விவரிப்பேன்நான்
என்பதெல்லாம்
ஆனை நடைகண்டு அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பக்தியென்ன
குயில் கூவகண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகம் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பதொக்கும்..


விளக்க உரை :-


அண்டசராசரங்களைப் படைத்து, அவை அனைத்துக்கும் பெற்றவனாய் இருந்துகொண்டிருக்கும் தந்தையாகிய தயாபரன், வல்லாத்தான் வைகுண்டப் பரம்பொருள் சொல்வதைக்கேட்டு, அதை அப்படியே அன்பர்களின் முன்னிலையில், அடியேன் எழுதி சமர்ப்பிப்பேன் என்பது யானையைப் போல் நடப்பதற்கு அன்றில் பறவை ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும்.

எறும்புகளின் அணிவகுப்பு, போர்வீரர்களின் அணிவகுப்புக்கு இணையாக முடியுமா ?
குயில் கூவுகின்ற தென்று அதைப்போல் கூவை குரல் கொடுத்தால் அது சரியாக இருக்குமா ?
மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி தன்னையும் மயில்போல் பாவித்துக்கொண்டு ஆடினால் நன்றாக இருக்குமா ?
தேனீக்கள் சேமித்து வைத்து இருக்கும் தேனைச் சுவைத்த கடந்தைகள், தாமும் அந்த ஈக்களை போல்தானே இருக்கிறோம், ஆகவே நாமும் அந்த ஈக்களைப்போல் தேனைச் சேமிக்கலாம் என்றெண்ணி கூடுகட்ட முனையும் கடந்தையின் கதைப்போல, இவ்வுலகைப்படைத்து அதில் ஏழு யுகங்களை நடத்தி அவ்யுகத்தில் இருந்தோருகேல்லாம் நியாயம் நடுகேட்டு, நடுதீர்ப்பு வழங்க வந்த லோகநாயகனாகிய அய்யாவின் ஒப்பரிய சரிதையை, எழுத்தென்றால் என்னவென்று அறியாத நான் எழுத முடியுமா !!!!

- அய்யா உண்டு -

அகிலதிரட்டு உரை:-

எம்பிரான் ஆன இறையோன் அருள்புரிய
தம்பிரான் சொல்ல தமியேன் எழுதுகிறேன்
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள்செயலால்
பழுதொன்றும் வராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாவாய் இக்கதைக்கு
தோசம் அகல குழாமல் வல்வினைகள்
காலைக் கிரகம் கர்மசஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கவ்வை வினைதீர
காரும் அடியேன் மனதில் குடிகொளவே
தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகாது இருக்கும் தர்மஅன்பு உள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே..


விளக்க உரை:-


கடவுள் அடியேனுக்கு அருளிய கிருபையினால்அந்
தக் கடவுளே எளியோனாகிய என்னிடம் சொல்வதை உணர்ந்து இயன்ற மட்டும் எழுதுகிறேன். வறியவனாகிய நான், எழுதுவேன் என்பதெல்லாம், அதை அருளும் இறைவன் இந்தச்சிறியோன் மேல் கொண்டுள்ள நம்பிகையே ஆகும். என் எழுத்தில் பிழையேதும் ஏற்பட்டால் லோகமாதாவாக இருந்து கொண்டிருக்கும் தயாபரகியானாகிய அய்யாவே காத்தருள வேண்டும்.

ஆதிப்பரப்பிரம்மாகிய அய்யாவிலிருந்து வெளிப்படும் நாதமும், அழகும் இந்தச் சரிதைக்கு இயல்பாக அமைய வேண்டும். கேடுகள் விலகவும், கொடிய வஞ்சனைகள் அகலவும், கால மாறுதல்களை ஏற்படச் செய்யும் கோள்கள், முன்பிறவி பிறாப்தத்தால் விளைவிக்கும் துன்பங்கள் தொலையும், சர்வசக்தி வாய்ந்த ஜெகத் குருவாகிய அய்யாவே ரட்சித்து அருள வேண்டும்.

என் மனதினுள் துன்பம் என்பதே அணுகாத நிலையில் எம் அகலத்தில் எல்லாமுமாகிய அய்யா நீவிர் குடி கொள்ள வேண்டும். இந்த உலகத்தைத்
தர்மச்சீமையாக்கி, அந்தத் தர்ம ராச்சியத்தை அரசுபாலிப்பதற்காக, இந்தப் பாவக்கலியுகத்தில் ஆதிமூலப் பரம்பொருளாகிய இறைவன், அய்யா வைகுண்ட பரம்பொருளாக வருகை தந்திருக்கும் வான்புகழும் வரலாற்றை, அழிவில்லா நிலை பொருந்திய தர்மவான்களான அன்பர்களின் முன்நிலையில், தக்க நெறிமுறைகளோடு இந்த அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தை அய்யாவே அருளுகிறார்.

இந்த ஆகமத்தை அருளி, எனக்குக் குருவாக இருந்து எழுத வைக்கும் அய்யா வைகுண்டப் பரம்பொருளையும் இப்பேறு பெற என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த தாயையும், தந்தையையும் பணிவோடு வணங்குகிறேன்.

- அய்யா உண்டு -

அய்யாசிவசிவசிவஅரகராஅரகராஅரகரா

யாருக்கெல்லாம் நாமம் கொடுக்கும் தகுதி உள்ளது????????
யாரெல்லாம் நாமமிட்டால் நொம்பலங்கள் தீரும்.... அய்யா சீசன்மாருக்கு இவ்வாறு சொல்லுகிறார்..
.........
எறும்பு முதல் எண்ணாயிரப்பட்ட மிருகப்பிறவி செய்து இருப்பதால், வாய்பேசாத மிருகத்தை தள்ளி எந்தெந்த சாதி வாய்பேசுமோ அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும் அவரவர் தேவிமார் முகம் பார்த்து பேசினதே அல்லாது வேறு தேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்று ஆண்பிள்ளைகளும்;
அவரவர் ஆம்படையானத்தள்ளி இன்னொரு முகம் பார்த்து பேசவில்லை என்று ஐந்து தேவிமார்களும் கொடி மரத்தில் ஐந்து நேரம் சத்தியம் செய்து நாமம் கொண்டு இடச்சொல்ல,............ இந்தப்படி தானம் பண்ணிச் சத்தியம் செய்து நாமம் கொண்டிட நொம்பலம் இதமாகிப்போகும். இதை சீசர் எல்லோரும் நகர் எல்லாம் இந்த ஒழுங்கைத் தெரியச் சொல்லவும். இன்னும் கணக்கு நிரம்பயிருக்கிறது! அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா..

எறும்பு முதல் யானை உள்ள எண்ணாயிரம் மிருகப்பிறவி செய்திருக்கிறேன், இவற்றில் வாய்பேசாத மிருகத்தை (நல்லது கெட்டது ஆராயதெரியாத, ஆறாம் அறிவு இல்லாத, சிந்தனை செய்யும் ஆற்றல் இல்லாதவைகளை தள்ளி) எந்தெந்த சாதி வாய் பேசுமோ - வாய் தானாக பேசாது, அதை மனம் இயக்கினால்தான் பேசும், மனம் தானாக இயங்காது அனுபவ அறிவும் சிந்தனை சக்தியும் வேண்டும், அப்படிப்பட்ட ஆறறிவுள்ள மனிதர்களில் யார் ஒருவர் அவரவர் தேவிமார் (மனைவிமார், அவரவரின் உடைமையைத்தவிர பிறரின் பொருட்களின் மீது ஆசை கொள்ளாதவர்கள்) முகம் - (ஆசை) பார்த்து பேசியது (இச்சைகொள்ளல்) அல்லாது வேறொருவரின் முகம் பார்த்து பேசாத ஆணும் பெண்ணுமே பிறருக்கு நாமம் இடும் தகுதி உள்ளவர்கள்... அய்யா வைகுண்டர்.
ஆக, அன்பு குடிகொண்ட அறிவு உள்ள கண்ணு மக்கா! புரிகிறதா? அய்யா யாருக்கெல்லாம் அந்த தகுதியை கொடுத்துள்ளார் என்று! "கண்டதெல்லாம் தெய்வம் என்று கைஎடுத்தால் பலனும் உண்டோ?" இது இங்கேயும் பொருந்தும்........... அய்யா உண்டு, ஆட்டுவானும் நீயே! இங்கே ஆடுவதும் நீயே! வைகுண்டா சரணம்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

அகிலத்திரட்டு அம்மானை அருளியது யார்?

காவிஷ்ணு தன் ஒவ்வொரு அவதாரத்தையும் மகாலெட்சுமியிடம் சொல்வதுதான் அகிலத்திரட்டு அம்மானை.அகிலத்திரட்டு அம்மானை நூலை மகாவிஷ்ணு அருளி அரிகோபாலன் சீடர் (சகாதேவன் சீடர்) மூலமாக வெளிப்படுத்தியத்தை கொட்டங்காட்டில் பாதுகாக்கப்பட்ட ஆதி ஏட்டின்பிரதியில்
“ ராத்திரி தூக்கம் நான் உறங்கும் வேளையிலே
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் என்னை எழுப்பி செப்பினார் அம்மானை
காப்பில் ஒரு சீரும் கனிவாய் மிக திறந்து
தாப்பிரியமாக சாற்றினார் எம்பெருமாள்”
இங்கே எம்பெருமாள் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.அதன்படி நாதன் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.மகாவிஷ்ணு அரிகோபாலன் அருகில் இரவில் வந்து அவரை எழுப்பி அகிலத்திரட்டு அம்மானை முதல் வரியை எடுத்துரைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
“மகனே எந்தன் வாய்மொழியை வகுக்க காண்டமதுக்கு
உகமோர் அறிய உரை ஊனு முதல் காப்பாக
அதில் மேல் நடப்பு உன் அகமே நானிருந்து
சரி சமனாய் வகுப்பேன் நாதனும் தானே எழுது காண்டம்” என்றார்.
நான் சொல்லுகிற காண்டத்திற்கு உலக மக்கள் அறியும்படி முதல் காப்பு நீ சொல்.அதன்பின்பு உன் உள்ளத்திலே உன் உள்ளத்திலே இருந்து நான் சொல்லுவேன் நாதனாகிய மகாவிஷ்ணு எழுதும் காண்டம் என்றார். அதாவது மகாவிஷ்ணுவாகிய நான் உன் மூலமாக நான் எழுதுகிறேன் என்று பொருள்.
“நான் உரைக்க நீ எழுதி நாடு பதினால் அறியும்”
மகாவிஷ்ணுவாகிய நான் உன் உள்ளத்தில் இருந்து சொல்ல சொல்ல நீ எழுது,அதை நாடு பதினாலும் (எல்லா லோகாத்தார்களும்) அறிந்து கொள்வார்கள்.
“பாரேழும் அளந்த பச்சமால் மாயவரும்
முன்னர் கயிலையிலே முதல்நூல் முறைப்படியே
இன்னாள் என்னிடத்தில் எடுத்து உரைத்ததையும்
அய்யா சொன்னதையும் அடியேன் எழுதுகிறேன்”
ஈரேழு பதினாலு உலகத்தையும் அளந்த பச்சைமால் நாராயணர் முன்பு கயிலையங்கிரியில் எழுதி வைத்ததையும் இப்போது என்னிடத்தில் சொன்னதையும் (அய்யா மகாவிஷ்ணு) அடியேன் (அரிகோபாலன்) எழுதுகிறேன் பொருளாகும்.
பக்கம் 359ல்,
“ஒப்பார் ஒருதர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத் திரட்டம்மானை இதே”
உலகில் மனிதர்கள் தன்னுடைய விருப்பத்திற்கு அகிலத்திரட்டு அம்மானையையை எழுதக்கூடாது.அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை இது என்று மகாவிஷ்ணுவே குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அகிலத்திரட்டு அம்மானையை அருளியது மகாவிஷ்ணு என்றும் அவர் அருளால் அரிகோபாலன் (சகாதேவன் சீடர்) எழுதினார் என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.
நிகழ்காலத்தில் முத்துக்குட்டி தான் வைகுண்டர் என உலக பதிவுகள் இருப்பதால் முத்துகுட்டி ஞான நிலை அடைந்து அகிலத்திரட்டை எழுதினார் என்ற ஒரு கருத்து இருப்பதால்,வைகுண்டர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிடாமல் மகாவிஷ்ணு எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிட்டால் மகாவிஷ்ணுவின் பக்தர்களும் இந்நூலை அறிந்து கொள்ள ஒரு ஒரு வாய்ப்பாக

அய்யாவழிக்காரர்கள் என்றால் யார்?

அய்யா என்றால் தந்தை என்று பொருள்.தந்தை என்றால் அனைத்து உயிர்க்கும் தந்தை.”தேசமயம் ஏகம் திருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர் அய்யா”.உலகத்தை படைத்தவனை வணங்குவது தான் அய்யாவழி,வழிபாடு.அய்யா என்றால் மகாவிஷ்ணு நாராயணரை குறிக்கும்.நாராயணரின் அவதார பாதையை வைத்து புனிதநூல் அகிலத்திரட்டு அம்மானை உள்ளது. அய்யாவழிக்காரர்கள் என்றால் நாராயணரை தெய்வமாக வணங்கி அவர் காட்டிய அறவழியில் வாழ்பவர்கள் என்று பொருள்

ய்யாவுக்கு கலிநீசன் செய்த சோதனைகள்

ரி சாமி என்கிறானே நாமும் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என என்னிய மன்னன் தனது கை விரலில் இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழற்றி தன் கையில் வைத்து கொண்டான் பின் வைகுண்டரை நோக்கி நீ உண்மையான சாமி என்றால் என் கையில் இருப்பதை கூறடா என்றான் எல்லாம் அறிந்த வைகுண்டர் "' தாழ்ந்துயிரு என் மகனே சட்டைக்குள்ளே நான் பதுங்கி ''' என்ற தனது தந்தையாகிய நாராயனரின் உபதேசத்துக்கு ஏற்ப தன் சக்திகளை வெளிக்காட்டாமல் இருந்தார் மேலும் இப்போது இவனிடம் இதை உரைத்தால் நம்மை அறிந்து அவர்களுடன் நம்மையும் சேர்க்க பார்பான் ஆகவே நாம் நினைத்த காரியம் நிரைவேறாமல் போகும் என்று எண்ணி அமைதியாக இருந்தார் பின் மன்னனை நோக்கி இறைவனின் என்னப்படி எது இருக்குமோ அது இருக்கும் என்று உரைத்தார் கோபங்கொன்ட மன்னன் இவனா சாமி இவன் கள்ளசாமி இவனை கொடுமையான சரடனின் அழைத்து செல்லுங்கள் என உத்தரவிட்டான் பின்னர் வைகுண்டரை கொடிய சரடன் முன் கொண்டு நிறுத்தப்பட்டார் கொடிய சரடன தன்னிடமிருந்த சாராயத்தில் ஐந்து கொடிய விஷங்களை கலந்து நல்ல பால் எனக் கூறி வைகுண்டரை குடிக்க சொன்னான் தொடரும் அய்யா உண்டு

அய்யாவை கலிநீசன் செய்த சோதனைகள்

விஷமென்பதை அறிந்த நாராயனர் சிரிதும் அச்சமின்றி முழுவதும் பருகினார் அந்த விஷமானது வைகுண்டரை வெகு நேரமாகியும் ஒன்னும் செய்யவில்லை விஷத்தால் பாதித்த படாத வைகுண்டர் எவ்வாறு விஷத்தின் கொடுமையிலிருந்து தப்பினார் என்று எண்ணாத சரடன் மேலும் ஒரு சோதனை செய்வோம் நினைத்தார் விஷத்தை உண்ட வைகுண்டர் மாளாமல் இருப்பதை உனர்த்த சரடன் வைகுண்டரை மேலும் ஒரு சோதனை செய்ய என்னினான் அதன்படி வைகுண்டரை கொடிய டாணா சிறையில் வைக்க சேவர்களுக்கு உத்தரவிட்டான் மிகவும் தூர்னாற்றம் வீசக்கூடிய அந்த சிறையில் வேகுண்டரை அடைத்தான் அந்த அறையில் மனிதர்களின் கழிவுகளும் மிருகங்களின் கழிவுகளுமே அங்கு முகுதியாக காணப்பட்டன பூச்சிகளும் அட்டைகளும் பல்வேறு வகையான புழுக்களும் கொட்டிக் கிடந்தன அதில் பெரும்பாலான பூச்சிகளும் புழுக்களும் அய்யாவின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன கொடிய நகரத்தை போன்ற அக்குழியில் வைகுண்டர் தனக்கு நேர்ந்த அனைத்து சோதனைகளையும் சான்றோருக்காய் பொருத்துக் கொண்டு அமைதியாக இருந்தார் வைகுண்டரின் அமைதியை கண்ட நீச மன்னன் அவரை மேலும் பல்வேறு சோதனைகள் செய்ய திருவணந்தபுரம் சிங்காரதோப்பு சிறைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டான் தொடரும் அய்யா உண்டு

அய்யா துணை

சாட்டு நீட்டோலைதன்னை நாக்கு மூக்கொடியாமல் தாக்கி எழுதச் சொன்னேன் சிவனே அயயா. பனை ஓலையின் நாக்கு மூக்கு பகுதிகளை அறுத்தெறியாமல் இந்த சாட்டோலையை வேகமாக எழுதச் சொன்னேன் சிவனே அய்யா. அய்யாஉண்டு

அய்யா துணை

ஆறுசெஞ்சடை சூடிய வையனே!

அலையிலேதுயி லாதி வராகவா!

நீறுமேனி நிரந்தரம் பூசிவாநீ!

சிவாசிவ மைத்துன ராகவா!

வீறுசத்தி மணவாள ரானவா!

வீரலட்சுமி மன்னரரி ராகவா!

ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா!

எமையாட்கொள்ளும் நாராயணா போற்றியே!.
நாராயணா பொற்றியே!.

அய்யா துணை

மகனே உனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ

அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடத்து அல்லாமல்

யுகமே அழியு முன்னாக ஒருசொல் இதிலே குறைவானால்

தகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே

நல்லோர் மகனே சொல்லுவதுகேள் நாணோ உரைத்த விஞ்சையெல்லாம்

வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட

எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பெ னுன்னாலே

சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே

கொடுக்கும் வரங்கள் உனக்கீந்தேன் கொடுத்த வரத்தைப் பறிப்பதற்கு

உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை

அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவரானை

நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே

தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது

எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே

அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைததுச்

சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே

தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது

நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது

பூசா பலன்கள் செல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர

மாயா திருக்கு மகனேவும் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே

செல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி

வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்

கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும்

வெல்ல எளிதோ உனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்

இந்தப் படியே நாரணரும் இயம்பு மகவு ஏதுரைக்கும்

கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க

எந்தப் படியோ நான்றமியேன் எதோ அறியப் போறேனைனச்

சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்

அய்யா உண்டு

கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக கண்ணுக்குத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா

ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும் பதியுங்கண்டேன் சிவனே அய்யா

கோரைக்குருத்துக்குள்ளே தாரணிதன்னிலுள்ள குடிகளும் வாழக்கண்டேன் சிவனே அய்யா

திரைக்கடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும் கண்டேனையா சிவனே அய்யா

ஈரத்தின்மேல் கிடந்த ஆடையை அட்டைகண்டு எடுத்து விழுங்கக்கண்டேன் சிவனே அய்யா

போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனயிடத்தில் புழு வெட்டிக்கொத்திக் கண்டேன் சிவனே அய்யா

முடுக்கன்மார் பெற்றமக்கள் தூக்கம்வைத்த பாயதிலே மூச்சோடி போகக்கண்டேன் சிவனே அய்யா

அய்யா துணை

தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா

அதுகுட்டிபோட்டு இருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து

பார்தனில் அக்குருவும் பதிபோட்டடு இருக்கின்றாரே

இரவுபகல் எப்போதும் அவர்குயிரை போட்டாற்றுவதில்லை

அஞ்சாம் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்

நஞ்சுதின்று நாளாச்சு நான்மறைப்போறேனடா

வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப் பிடித்திடுங்கோ

வையகத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம் வருகுதப்பா

கந்தன்திருவேலனே என்னை ஆண்டியெனறறிய மாட்டான்

கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா

கோலநடுமாலயனும் சாலங்கட்டி ஆடுகிறேன்

காளிவெள்ளம் வருகிறது கப்பல்செய்து வைத்திருங்கோ

நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா

நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

கங்கைபால் வற்றுமப்பா கிழவன் பன்டாரம் சொல்லுகின்றேன்

வெட்டவெளிதனில் மக்காள்வேலி பயிராகுதப்பா

ஊரோட்டம் தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா

மாரிவெள்ளம் அழிக்குதடா மாயான்டி சொல்லுகிறேன்

கூத்தாடிக்கூத்தாடி நாள்கொள்ளி வைத்துப் போவேனடா

கொள்ளிவைக்கும் குமரனடா கொப்பன்நந்தி யீசனடா

பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாரேன்

திங்கள், 24 நவம்பர், 2014

வைகுண்ட சுவாமி

வதார புருஷர்கள், காலத்தின் குழந்தைகள். இவர்கள் மக்களின் சமூக, சமய நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கும் மகாத்மாக்களாக மண்ணில் மலர்கிறார்கள்.  அவர்கள் தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கிறார்கள். குணமென்னும் குன்றில் வீற்றிருக்கிறார்கள். யான், எனது என்னும் செருக்கறுத்து வையத்துள் வாழ் வாங்கு வாழ்வதால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். பகவான் வைகுண்டர், கி.பி., 1809ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் என்னும் ஊரில் பொன்னு நாடர், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முத்துக்குட்டி என்பதாகும். தன் வீட்டிலேயே திருமால் கோயில் வைத்து வைணவராகத் தம் ஆன்மிக வாழ்வைத் தொடங்கிய அவர், 1833 மார்ச் முதல்நாள் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் கடலுள் மூழ்கி ஞானம் பெற்று, மூன்று நாள் கழித்து (மாசி 20-ம்தேதி) வைகுண்டசுவாமியாக வெளிப்பட்டார். பின்னர் தீவிர சமய வாழ்வில் ஈடுபட்டார். சாதியில் பெயரால் ஒரு மத மக்கள் பிரியக்கூடாது என்றும்; ஒரு மதத்தின் உட்பிரிவுகளுக்குள் பகைமை கூடாது. இதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, சாதி சமய ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார் வைகுண்டர். அவர் வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும், சைவத்தையும் தழுவி, சிவ சிவ அரஹர என்ற வழி பாட்டுப் பாடலை இயற்றி மக்களிடையே பழக்கத்துக்குக் கொண்டு வந்தார்.
ஒரு முறை இவர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டு 110 நாட்கள் சிறைவாசம் செய்து பல அற்புதங்கள் புரிந்து பின் விடுதலை பெற்றார். அவருக்கு ஏற்பட்ட சிறைச் சோதனைகள் பல.அதனால் அவர் புகழ் பெருகிவிட்டது. விடுதலைக்குப் பின் அவர் பணி தீவிரமடைந்து ஓர் இயக்கமாகவே உருவாகிவிட்டது. வைகுண்டரைப் பின்பற்றுவோர் அய்யா வழியினர் என்ற புதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். கல்வி வளம் பெறாத ஏழை எளிய மக்களிடையே ஆன்மிகப் பணிபுரிந்த வைகுண்ட சுவாமி தனக்குத் துணைப் பணியாளர்களாக ஐந்து சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பாண்டவர் எனப் பெயரிட்டு அழைத்தார். அவர்களில் தர்மசீடர் எனப் புகழ் பெற்ற சிவனாண்டி என்பவரும், அரிகோபாலன் சீடர் என்ற இயற்பெயர் உடைய சகாதேவன் சீடரும் வைகுண்டர் கொள்கைகளைப் பரப்பப் பெரிதும் உழைத்துள்ளனர். தர்மசீடரின் திருவுருவம் கோயிலிலேயே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கவிஞராகத் திகழ்ந்தவர் அரிகோபாலன் சீடர். இத் தொண்டர்களின் துணையோடு வைகுண்டர் நாட்டுமக்கள் மனதில் சமய உணர்வை நிறைக்கவும், ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் துவையல் பந்தி என்ற துறவுக் குழுவை அமைத்தார். அக்காலத்திலேயே சாதி பேதங்களை மறந்து 700 குடும்பங்கள் துவையல் பந்தியில் பங்கேற்றனர். முற்றிலும் சைவத் துறவு நிலையை மேற்கொண்ட இக் குடும்பங்கள் வைகுண்ட சுவாமியின் தலைமையில் கன்னியாகுமரிக்கு 2 கி.மீ. வடக்கே கடற்கரையில் அமைந்துள்ள வாகைப்பதி என்ற இடத்தில் தனிக்குடியிருப்பு அமைத்து துறவுப் பயிற்சி பெற்றன. இவர்களே பின்னாளில் வைகுண்டர் நெறி பெரு வளர்ச்சி பெறக் காரணமாயினர். ஏழை எளிய மக்களின் பக்தி வளர்ச்சியோடு கல்வி வளர்ச்சிக்கும் பணிபுரிய விரும்பிய வைகுண்டர் நிழல் தாங்கல் என்ற புதிய அமைப்பொன்றை உருவாக்கினார். நிழல் தாங்கல் என்பது மரநிழலில் அமைந்த வழிபாட்டு இடமாகவும், கல்வி நிலையாகமாவும் திகழ்ந்தது. மக்களுக்கு இதிகாச-புராணங்களும் சமய உண்மைகளும் கற்பிக்கப்பட்டன. இவ்வமைப்பின் மூலம் அய்யாவழி ஆல்போல் தழைத்துவிட்டது.
வைகுண்டர் ஒப்பற்ற தவஞானியாக விளங்கினார். சாமித்தோப்பில் ஆறு ஆண்டுகள் அருந்தவம் புரிந்தார். தவ ஆற்றலால் செய்த அற்புதங்கள் பல. மண்ணும் தண்ணீரும் கொடுத்தே மக்களின் நோய் நொடி தீர்த்தார். குறை களைந்து நிறைபுகழ் எய்தினார். இந்து சமய மக்களின் கட்டுக்கோப்புக் குலைந்துவிடாமல் இருப்பதற்காகவும் ஆன்மிக வளர்ச்சிக்காவும் சுவாமிகள் பல இடங்களில் பெரிய கோயில்களையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அக்கோயில்கள் பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இப்பதிகளும், தாங்கல்களும் 150 வருடங்களாக இந்து சமயத்தின் அரண்களாகவும், வைகுண்டர் நெறியின் கேந்திரங்களாகவும் விளங்கி வருகின்றன. இந்து சமயத்தின் ஒரு மறுமலர்ச்சி இயக்கமாக விளங்கும் வைகுண்டர் நெறியை பல லட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர். வைகுண்டர் 1851 ஜூன் 2ல் சமாதியானார். தம் இறுதியை இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். வைகுண்டரின் வரலாற்றுப் புராணமாக அவர் சீடர் அரிகோபாலன் படைத்துள்ள அகிலத் திரட்டு அம்மானை 1841ல் படைக்கப்பட்டது. அந்நூல் 1851 ஜூன் 2ம் தேதி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை யாவரும் வியக்கும்படி விளக்கிக் காட்டுகிறது. இந்நூல் மற்றொரு வகையிலும் தனிச்சிறப்பு உடையது. தமிழில் உள்ள அம்மானைகளில் பெரியது. சுவைகளில் தன்னிகரற்றது. வைகுண்டர் சமாதியடைந்த பின் அவர் பென்மேனிக் கூட்டைப் பொதிந்து மணிக்கோயில் செய்து நாராயணசுவாமி கோயிலாகப் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கோயிலில், அவர் பயன்படுத்திய திரும்பிரம்பு, சுரைக்குடுக்கை, கடயம் என்ற கைக்காப்பு முதலியன புனிதமாகக் காக்கப்பட்டு வருகின்றன. சுவாமித் தோப்பில் உள்ள நாராயணசுவாமி கோயிலில்,வைணவக் கோயில் சம்பிரதாயங்கள் யாவும் வழுவாமல் பின்பற்றப்படுகின்றன. தமிழில் பெரிய அம்மானை இக்கோயில் தலபுராணமாக அமைந்திருப்பது போல தமிழகத்தில் பக்தர்களால் சுமக்கப்படும் வாகனங்களில் பெரியதான இந்திர விமான வாகனம் இங்குதான் உள்ளது. மாசி 20 ல் நடக்கும் வைகுண்டர் ஜெயந்தி விழாவும், ஆவணி, தை, வைகாசி மாதங்களில் நடைபெறும் பதினொரு நாள் திருவிழாக்களும் முக்கிய விழாக்களாகும். சுவாமித் தோப்பு அய்யா வழிபாடுசக்தி மிக்க வழிபாடாக விளங்குகிறது.

அகில வரிகள்...

நாலு மூணு கணக்கு நடுதீர்த்த ஞாயமதும்
மேலெதிரி இல்லாமல் வினையில்லாது ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை
காரணமாய் எழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக ஊழ்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறார் அன்போரே.

- அகிலம் -

விளக்கஉரை :-

ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்
லாம் தெளித்துப்பார்த்து,
அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும்,
இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விபரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதி வைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப்பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகின்ற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழ்வார்கள் என்று அய்யா இந்த அறிய வரலாற்றை அருளுகிறார்.
- அய்யா உண்டு -

அய்யா வைகுண்ட பரம்பொருள் 6 வருடம் தவம் இருந்த புண்ணிய இடம் நம் வடக்கு வாசல்....


தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றவர்கள் எத்தனையோ பேர், .. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.

அய்யா தவம்

தலைமைப்பதியாக திகழும் சுவாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார். முற்காலத்தில் பகவான் வைகுண்ட அய்யா தவம் புரியத் தீர்மானித்தார்.

அதனால் சுவாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார். மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன. தலைமைபதியாம் சுவாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார்.

அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர். வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தாண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப் பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

"நான்'' என்றால் பகவானா கிய அய்யா வைகுண்டரை குறிக்கின்றது. நிலைகண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிகமகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. அத்தகைய சிறப்புடைய வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் தவநிலையில் இருக்கிறார்.

வடக்கு வாசலை நம்பி வெற்றி பெற்றதில் இந்த இளையபெருமாளும் ஒருவன்தான்.. அதுபோல அய்யாவை நம்பி பிடியுங்கள் மக்களே " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார். பக்தர்களின் வாழ்வில் மேன்மையும் புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்குவாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்குவாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.

சதிர யுகம்:

நீடிய யுகத்தின் முடிவை தொடர்ந்து சதிர யுகம் என்ற இரண்டாம் யுகத்தை வகுத்தார் சிவபெருமான்.அந்த இரண்டாம் யுகமதில் குறோணியின் ஆறு துண்டுகளில் ஒரு துண்டை எடுத்து அதனை குண்டோமசாலி என்ற அசுரனாகவும் ,அத்துண்டுக்குரிய உதிரத்தை எல்லாம் அவனுக்கு துணையாக அசுர குலமாக பிறவி செய்தார் ஈசன்.அந்த குன்டோமசாலி என்ற அசுரன் குறோணியின் கெட்ட எண்ணங்களில் சிறிதும் மாறாதவனாக இருந்தான்.அவனுடைய உயரம் நானூறாயிரம் முழங்களாகவும் ,முந்நூறு கைகளையும்,முந்நூறு கால்களையும் கொண்டு யானையின் துதிக் கையை போன்ற தோலினை கொண்டவனாகவும் இருந்தான்.



இறை சிந்தனையே இல்லாத அவன் எந்நேரமும் அட்டை போலவே சுருண்டு கிடந்தான்.வயிறு பசிக்கும் போதெல்லாம் தன்னுடன் படைக்கப்பட்ட அசுரர்களையே அள்ளி உட்கொண்டான்.அப்படியே அவன் இனமும் அழிந்து போனது.நீண்ட நாளாக உறங்கிய அசுரன் குண்டோமசாலி திடீரென விழித்து பசியால் துடிக்க உன்ன உணவில்லாமல் பெரும் சத்தத்தை எழுப்பினான். அதைகேட்டு அதிர்ந்த திருமால் சிவனிடம் உரைத்து கேட்கையிலே சிவன் ,சதிர யுகத்தில் படைக்கப்பட்டுள்ள குண்டோமசாலியனை பற்றிக் கூறினார்.அவனை அழிக்கும் காலம் நெருங்கியது என்றெண்ணி மாயவர் அவனை அழிக்க திட்டமிடுகிறார்.



அதன்பின் மேலோக தேவர்களை எல்லாம் இரைகளாக்கி ,மறையதனை கயிறாக்கி ,வாயுவை தோணியாக்கி,வருணனை நிரப்பாக்கி கடலை ஓடையாக்கி அதில் மூவரும் ஏறி தோணியை தள்ளினார்கள்.பின்னர் மாயவர் தூண்டிலை போட அதில் உள்ள தேவர்களை இரை என்று எண்ணிய குண்டோமசாலி இரையை உண்பதாக எண்ணி தூண்டிலை கவ்வி தன் உயிரை இழந்தான்.இத்துடன் இறைவன் படைத்த இரண்டாவது யுகமான சதிர யுகம் முடிவுக்கு வந்தது.

அய்யா வைகுண்டா் அவதாரம்


அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது

வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்

இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்

பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை

நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை

தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை

மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர்நடக்கும் கலியுகத்தை அழித்து ரின்ப நிலையான தர்மயுகத்தை மலரச் செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.

அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.

பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரானஅரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில்பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள்நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.

அய்யாவழி வரலாறு

அய்யாவழி"
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).

அய்யாவழி

அய்யாவழி, (அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.

அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும்[1] மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக[2] சமய[3] ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.
அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.

தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு்விடுமுறையை விடுமுறை அளித்து வருகின்றது

அய்யா உண்டு

ன்பர்களே இன்றும் அய்யா வழியை பற்றி சரியாக அறியாதவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்யா வழி என்பது நாடார் மக்களின் வழியா? என்பதாகும் . என்னிடமும் பல நண்பர்கள் அய்யா வழியின் வரலாற்றை கேட்ட பின்பு இக்கேள்வியை கேட்டுள்ளனர்.
ஏன் இந்த கேள்வி வைகுண்டர் உலகில் சாணார் (நாடார்) குலத்தில் பிறந்தது அவர் தவறா? உலகில் ஜாதி முறையை வைத்தது மனிதன் செய்த தவறாகும்.உலகில் அதர்மம் அதிகமாகும் பொது இறைவன் அவதாரம் எடுக்கிறார் என்பது உலக மக்களின் நம்பிக்கை. அவ்வாறு அவதாரம் எடுக்கும் போது மனிதன் உருவாக்கிய ஏதேனும் ஒரு ஜாதிலேதான் பிறக்க முடியும்.
அந்தப்படியே அய்யா வைகுண்டரும் மிகவும் தாழ்ந்து கிடந்த சாணர் குலத்தில் பிறந்து அவர்களின் குறைதீர்த்தார். ஜாதி என்னும் கொடிய கலியில் சிக்கி பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மக்களை காக்க அதே தாழ்ந்த ஜாதியிலேயே இறைவன் வைகுண்டமாய் பிறந்தார். ஜாதியை அளிக்க பிறந்த வழி அய்யா வழியாகும்,அதனை ஜாதி வழி என்பது தவறான ஒரு கருத்து ஆகும். ஜாதிக்காக அய்யா வழி உருவாக்க பட்டிருந்தால் ஆரம்ப காலத்திலேயே பெரும் அழிவை கண்டிருக்க வேண்டும் .

"சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"

"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு கூறிய இறைவன் எப்படி ஜாதியை,ஜாதி வழியை தோற்றுவிப்பார்?
சத்திரியனாக வந்த ராமனையும்,இடையனாக வந்த கிருஷ்ணனையும்,பிராமணனாக வந்த வாமனனையும்,யூதராக வந்த இயேசுவையும் ஏற்று கொள்ளும் மனம் ஏன் சாணாராக வந்த வைகுண்டரை ஏற்க மறுக்கிறது?

அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அய்யா வழி தோன்றிய ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் நாடார்களே தாங்கல் வைத்து வணங்கினர். அனால் தற்போது அனைத்து ஜாதி மக்களும் அய்யாவை ஏற்று வணங்க தொடக்கிவிட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அய்யா உண்டு

அய்யா வழி பழக்க வழக்கங்கள்

ய்யாவைகுண்டரை அன்புக்கொடி மக்கள் அய்யா என்றே அழைத்தனர். இன்றும் அவ்வாறே சொல்கின்றனர். தன்னை நாடிவந்த அன்புக்கொடி மக்களை அய்யாவைகுண்டரும் அய்யா என்றே அழைத்தார். எதிர்படுகின்ற மனிதனை அய்யாவைகுண்டரின் பிரதிபிம்பமாகவே (கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல) அன்புக்கொடி மக்கள் கருதுகின்றனர். அதனால்தான் அய்யா என்று ஆச்சாரமாக (அய்யா வாங்க, அய்யா உட்காருங்க) ஒருவருக்கொருவர் பேசிக்களிக்கின்றனர்.

அன்புக்கொடிமக்கள் எச்செயலையும் அய்யா உண்டு என்று கூறி தொடங்குவதையும் அய்யா உண்டு என்றுகூறி நிறைவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பதியின் முகப்பிலும் இல்லத்து முன் அறைகளிலும், புத்தகங்களின் முற்சொல்லிலும் அன்புக்கொடி மக்கள் அய்யாதுணை என்று பொறிப்பதைப் பார்க்க முடிகிறது.

தாரை நாமம்:

அய்யா வைகுண்டர் மரபின் சின்னம் என்று இதனைக் கூறலாம். ஞானியரின் யோகநிலையில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப்பூ மேல் (நெற்றிப்பொட்டு என்பர்) தீப ஒளி நிற்பதைப் போல (இறைவன்) வீற்றிருப்பான் என்பதன் அடையாளமே தாரைப்பூமேல் நாமம் என்ற சின்னமாகும்.

விளக்கு நேமித்தல்:

அன்புக்கொடி மக்கள் அதிகாலையிலும் அந்திவேளையிலும் திருவிளக்கேற்றி வைத்து உகப்பாட்டு என்ற வழிபாட்டு பாடல் படித்து இறைவணக்கம் செய்கின்றனர். இச்செயல் விளக்கு நேமித்தல் என்று சொல்லப்படுகிறது. கிருத்தவர்களின் ஜெபம் செய்தல், இசுலாமியரின் தொழுகை நடத்துதல், உயர் சாதியினரின் சாம்புராணி திரி கொளுத்தி வணங்குதல் போன்றவற்றுக்கு மாற்றாக விளக்கு நேமித்தல் உள்ளது.

திருநாமம்:

அன்புக்கொடி மக்கள் வெள்ளைநிற மண்ணை எண் ஒன்றின் வடிவில் நேராக நெற்றியில் அணிந்து கொள்வதை திருநாமம் பூசுதல் என்று சொல்லுகின்றனர். அன்புக்கொடி மக்களின் நெற்றியைத் தொட்டு பணிவிடைக்காரர்கள் திருநாமம் இடுகின்றனர். குறுக்காகப் பூசும் வீபூதிப் பூச்சு, சந்தணப்பொட்டு, குங்குமப்பொட்டு, வைணவர்களின் திருமண் அணிதல் போன்றவற்றுக்கு மாற்றாக இது உள்ளது.

பிச்சைப் பாங்கு:

அகிலத்திரட்டில் பிச்சை எடுத்தலைப் பற்றியும், பிச்சை கொடுத்தலைப் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலான அய்யாவழிப் பதிகள் பிச்சை எடுத்து ஈட்டிய பொருள் கொண்டே இயங்குகின்றன. பதியில் நேமித்த பொருட்களை (பூஜையில் வைத்த) பணிவிடை நிறைவுற்ற பின் தருமம் செய்வர். உதாரணத்துக்கு தலைக்கு ஒரு வாழைப்பழம் வீதம் வழங்குவதாகக் கொள்வோம். இவ்வாறு பதியில் ஒரு தனி மனிதன் பெறும் தலைவீதப் பாங்கு பிச்சைப்பங்கு என்று அழைக்கப்படுகிறது.

இனிமம்:

அன்புக்கொடி மக்களுக்கு பணிவிடைக்காரர்களால் வழங்கப்படும் இறைவனுக்கு நேமித்த பொருட்கள் (வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சங்கனி, தேங்காய், பூ இன்ன பிற) இனிமம் என்று சொல்லப்படுகிறது.

பணிவிடைக்காரர்:

அய்யாவழிப் பதியில் பூஜை செய்பவர்களை பணிவிடைக்காரர் என்றே அன்புக்கொடி மக்கள் அழைக்கின்றனர்.

வருங்காலம் அறிதல்:

அய்யாவழிச் சாமியார்கள் (ஆண், பெண் இருபாலாரும்) இறைவனை வணங்கி அருள்பெற்ற நிலையில் கூடியிருக்கும் அன்புக்கொடி மக்களின் கவலையைப் போக்குமுகமாக ஆறுதல் மொழி, வழிகாட்டல், எதிர்காலம் உரைத்தல் போன்றவற்றைச் சொல்வதுண்டு. இந்த நிகழ்வை அன்புக்கொடி மக்கள் கணக்கு கேட்டல் அல்லது கணக்கு பாடுதல் என்று குறிப்பிடுகின்றனர்.

திருஉளச்சீட்டு:

திருமணப் பொருத்தம் பார்க்க அன்புக்கொடி மக்கள் திருச்சரடு (தாலி) சேர்க்க திருமனசு இரங்கினால் இந்தச் சீட்டு வரவும் என்றும் திருச்சரடு சேர்க்க திருமன இரங்காவிடில் இந்த சீட்டு வரவும் என்றும் சீட்டுகள் எழுதி பணிவிடையில் வைக்கின்றனர். பணிவிடை நிறைவுக்குப் பின்னர் பணிவிடைக்காரர் எடுத்துக் கொடுக்கும் சீட்டை அய்யா வைகுண்டர் எடுத்துக் கொடுத்ததாகக் கருதி அதன்படிச் செயல்படும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது.

ஏட்டில் கயிறு போட்டு பார்த்தல்:

எதிர்கால நிகழ்வினை அறிய அகிலத்திரட்டு அம்மானை என்ற ஏட்டுப்பிரதியில் (புத்தகத்திலோ) நூல் கயிறு போட்டுப்பார்க்கும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது. கயிறு விழுந்த பக்கத்தில் உள்ள பாடல் வரிகளைக் கொண்டு எதிர்காலம் இப்படியிருக்கலாம் என்று தீர்மானிக்கின்றனர். அம்பலப்பதியில் பிரதி செவ்வாய் தோறும் ஏட்டில் கயிறு போட்டுப் பார்த்தல் நடைபெறுகிறது. முட்டப்பதியிலும் ஏட்டில் கயிறு போட்டுப்பார்க்கும் முறை உள்ளது.

குழந்தைவளர்ப்பு:

அன்புக்கொடி மக்கள் தலைமைப்பதி பள்ளியறை முன்னிலையில் தாங்கள் பெற்ற குழந்தையைக் கிடத்தி (ஆண்டவன் பாதத்தில் கிடத்துவதாகக் கருதி) கணவனும் மனைவியுமாக விரும்பிய பெயரை 5 முறை கூப்பிட்டு குழந்தைக்குப் பெயரிடும் வழக்கமும் அன்புக்கொடி மக்களிடையே உள்ளது.

அன்புக்கொடி மக்கள் பதியில் கிடைத்த உண்பானையே குழந்தைக்கு முதலில் ஊட்டுகின்றனர். சிலர் குழந்தைக்கு முதலில் அன்னம் ஊட்டுவதை பணிவிடைக்காரர் மூலம் செய்வர். குழந்தைகளுக்கு பிறந்தமுடி எடுக்கும் வைபவத்தையும் பதியில் வைத்தே நடத்தி தருமம் செய்கின்றனர். பெண்குழந்தைகளுக்கு பதியில் வைத்து காது குத்தி கம்மல் போடுகின்றனர்.

பூப்புனித நீராட்டு:

குமரிமாவட்ட மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா எடுப்பதைச் சடங்கு என்று கூறுவர். அய்யாவழி மரபில் அவரின் 5 சீடர்களின் வாரிசுதாரர்கள் அல்லது பதி பணிவிடைக்காரர்களில் ஒருவர் அய்யா வைகுண்டருக்கு பணிவிடை வைத்து உகப்பாட்டு படித்து ஆதியாம் வைந்தராசர் எனத்தொடங்கும் விருத்தப்பாக்களை பாடி அன்புக்கொடி மக்களின் பெண்குழந்தைகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைபவத்தை நடத்தி வைப்பது வழக்கம்.

திருமணம்:

அன்புக்கொடி மக்கள் திருமணப் பொருத்தம் அறிய பதியில் ஏட்டில் நூல்வைத்துப் பார்த்தல், திருஉளச்சீட்டு எழுதி வைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். திருமணத்தின்போது அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை வைக்கின்றனர். மவுனிக்கலியாண என்று தொடங்கும் திருமண வாழ்த்துப் பாடல் படிக்கின்றனர். மணமக்கள் மணமேடையில் தெற்குத்திசை நோக்கி அமர்கின்றனர்.

மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை திருச்சரடு சேர்த்தல் என்று சொல்கின்றனர். தாலியில் உள்ள சுட்டியில் (லாக்கட்) தாமரை நாமம் பொறிக்கப்பட்டிருக்கும். மணமக்கள் மணமேடையை ஐந்துமுறை வலம் வருகின்றனர். அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற நிகழ்வுகள் கிடையாது.