வெள்ளி, 4 மே, 2018

அய்யா வைகுண்டர் பாடல்கள்

நல்லோரே ஆகவென்றால் ஞாயம் அதிலே நில்லுங்கோ


அய்யா துணை

சத்துருவோடுஞ் சாந்தமுடனே யிரு
புத்திரறோடும் பேசியிரு யென்மகனே
அன்போர்க்கும் யீந்திரு நீ ஆகாதபேர்க்கும் யீயு
சகலோர்க்கும் யீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கும் யீந்து வழியேகுவோர்க்கும் மீயு
மெலியோர்க்கும் மீயு மேண்மையா யென்மகனே
மெலியோர்க்கும் மீயு மேண்மையா யென்மகனேஆர்க்குமிக வீந்தால் அந்ததர்மமே கொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந்தர்மமது
தர்மந்தான் வாழ்வு சக்கரங்களல்லாது
திண்மையது கேடு செப்பங்கேளென்மகனே
சாதிபதினெட்டுந் தன்னால் கேடாகும் வரை
நீதியழியாதே நீசாபங் கூறாதே

அன்பாகி வந்தவரை அலைச்சல் செய்து ஏற்பதுண்டு வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு" ...அகிலம்

வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டியதில் மிக முக்கியமானதாகவும்,உயர்ந்ததாகவும்,சொல்லப்படுவது
" அன்பு" ...ஒன்றே! 
அன்பு ஒன்றே அனைத்து உயிர்களிடத்தும் உயிராக நிறைந்திருக்கிறது.
அனைத்து உயிர்களிடத்தும் நாம் "அன்பு" செலுத்துதல் வேண்டும் ......
இதனால் தான் "அன்பே கடவுள்" ",அன்பே சிவம்"... என்கிறோம்.
ஒருவரது வாழ்வில் பல கஷ்டங்கள்....அதாவது நோய்நொடி,நொம்பலங்கள் வந்தாலும் ...அவன் அன்புநெறி தவறாமல் அய்யாவை நினைத்து வாழ்ந்து வந்தால் அவனை சில காலம் அலைகழித்தாலும் கூட....அவனின் அன்பால் அய்யா தன்னுடன் இனைத்துக்கொள்வார்.
அதாவது தர்மயுக வாழ்விற்கு கூட்டிச்செல்வார்.
இதற்கு மாறாக ஒருவன் அன்பில்லாமல்,இறைவனை மனதில் கொஞ்சம் கூட நினைக்காமல் வம்பு,வசைகளை செய்து கொண்டு அரக்கர்களைபோல் மற்றவர்களை துன்புறுத்தி கொண்டு ...... வாழ்வில் உயர்நிலையில் இருந்து ஆட்சி புரிந்தாலும், துன்பமில்லாமல் வாழ்ந்தாலும் ...அவனது இறுதி காலத்தில் அவனை நரக குழியில் தள்ளி விடுவார்.
அய்யாஉண்டு.

அய்யாவின் தத்துவ முத்துக்கள்

இல்லறத்தை விட்டு தவம் வேறேதும் இல்லை காண்...
மானமாக வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே....
தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனே...
பொறுமை பெரிது பெரிய திருமகனே...
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே..
கோபமது உங்களுக்கு கொல்லும் வேலாய் இருக்குதப்பா....
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்..
எளியோரை கண்டு ஈந்து இரங்கியிரு...
இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே நன்றாகும்..
வலியோருக்கு ஒரு வழக்கு வைத்து பேசாதே...
மெலியோருக்கு ஒரு வழக்கு வீணாய் பறையாதே...
தெரியாதோருக்கு உபதேசம் செப்பியிரு என்மகனே..
கோளோடு இணங்காதே... குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே! பகட்டுமொழி பேசாதே!
நன்றி மறவாதே ! நான் பெரிதென்று எண்ணாதே!
தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா..
சத்தியத்தை மறந்து நீ மத்திபத்தை செய்யாதே..
சத்தியத்தில் குடியிருந்தால் சாமி துணையிருப்பார்...
அற்பம் இந்த வாழ்வு அநியாயம் விட்டு விடு...
அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதீங்கோ....
அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ..
வீணுக்கு தேடும் முதல் விருதாவில் போடாதீங்கோ...
அச்சுத்தேர் ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ....
ஆசையது உங்களுக்கு தோசமதாய் இருக்குதப்பா..
நல்லோரே ஆகவென்றால் ஞாயம் அதிலே நில்லுங்கோ..
நல்ல நினைவோர்கள் நாள் எத்தனை ஆனாலும் பொல்லாங்கு வாராது புவிமீதில் வாழ்ந்திருப்பார்...
அன்பு மலரெடுத்து அனுதினமும் பூசை செய்வாய்...
விசுவாசம் அதிலே விரோதம் நினையாதிங்கோ...
வாரம் சொல்லாதே!
வழக்கோரம் பேசாதே!
சட்டம் மறவாதே
தன்னளவு வந்தாலும்.
மோதி பேசாதிருங்கோ
மோகம் பாராட்டாதீங்கோ..
சத்துருவோடும் சாந்தமுடனே இரு...
அழிவென்ற பேச்சு அனுபோலும் நினையாதே...
ஆபத்தை காத்து அகலநீ தள்ளாதே..
பிழைப்பதற்கு வழிபார்த்து பலத்த தவம் செய்திடுங்கோ...
புத்தியினால் கெட்டவரே பிழைக்க மதி தேடிடுங்கோ..
நல்ல புத்தியாய் நடக்காவிடில் பிழைகள் வரும் உங்களுக்கு..
கேடு வரும் உனக்கு கேள்வி கேளாதிருந்தால் ...
தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் என்மகனே..
அய்யாஉண்டு.