அகிலத்திரட்டு அம்மானை
அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும் வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள் அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே ஆயரே உம்முடைய அறிவின் படியாலே அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு சமயம் வழுவாத சாதித் திருமாலே என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும் நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும் மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே ஆனதா லீரேழு அவனி இருள்மூடி மான மழிந்து வரம்பழிந்து மானிடரும் ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம் நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும் ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று 20 பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம் வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார் அப்போது வானோர் எல்லோரு மேபயந்து செப்புவ தேதோ திருமாலே நாங்களினி சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால் எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான் ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம் ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம் அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும் சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில் 40 மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும் வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால் நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப் பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம் புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார் என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார் நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று 60 ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும் மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம் தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும் தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும் பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார் ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால் பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து பாடல் மறந்து பக்கத் துணைமறந்து அன்ன மறந்து அதிக மணமறந்து சொர்ண மறந்து சுகசோ பனமறந்து நலமறந்து தேக நளினமிக மறந்து மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச் சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய் 80 என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய் அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே என்று மகாமால் இப்படியே சொல்லிடவே அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும் மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள் ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள் நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள் வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில் ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில் மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும் நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும் சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான் ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய் நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து 100 சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில் வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார் பரலோகத்தார் மனுப்பிறப்பு அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள் சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும் எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார் வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார் நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால் கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண் என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல் படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில் நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே 120 அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார் எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத் தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன் இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப் பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன் ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை என்றாணை யாதி நாரா யணர்கூற நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து அய்யா வுமது அருளின் படியாலே மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில் படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார் சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும் நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம் வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில் பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச் 140 சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள் திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல் ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப் பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால் வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல் வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார் அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச் செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால் நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும் திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே 160 தர்மயுகச் சிறப்பு இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச் செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும் புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும் நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும் புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும் புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல் தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம் நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல் முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன் பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன் ஸ்ரீரங்க மீதில் சிறந்திருக்கு மப்பொழுது நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால் நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும் சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில் நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம் வல்ல வெண்ணரிகள் வளரும்வெண் காக்கைகளும் 180 ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள் வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண்பறவை பண்புற்ற பட்சி பலமிருக மூர்வனமும் இத்தனையும் நீசனுக்கு எற்றுக் கொடாதபடி புத்தி யறிவோடு புவனமதை விட்டேகிக் கானகமே நடந்து கதறி யெனைவருந்தி மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார் ஆனதா லூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை ஈனமில்லா மிருகம் ஏற்றவெள் ளானைகற்றா வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்தி வெண்மிருகம் வெண்பட்சி யான மேல்பட்சி யானதிலே பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி தென்பட்சி அன்பட்சி செந்தா மரையின்பட்சி இப்பட்சி யோடு இம்மிருக மூர்வனமும் அப்பட்சி யோடே அனைத்து மனுகூலமுமாய்க் கூடிக் குழையும் கொடிப்பிதிரு மொன்றதுபோல் தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும் விருச்சம் படைக்க வேணு மதுவிபரம் புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான் 200 என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய் வன்னமது பூகம் வாசமது விருச்சம் தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம் ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம் சோதி விருச்சம் சுபசோபன விருச்சம் தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம் ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும் வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில் சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம் வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய் சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய் சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும் வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும் ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும் தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள் ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள் மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய் 220 இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப் புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார் மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும் தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம் நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம் இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச் செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும் முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில் பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும் உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள் ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத் தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும் நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும் 240 காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண் ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும் அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண் முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப் பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய் இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால் அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில் அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக் கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு அம்மைமார் தவநிறைவு என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள் தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும் உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய் உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும் 260 ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள் ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால் பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும் முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும் மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள் காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள் என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார் நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில் செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார் அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும் ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே அண்ணரே கோவே ஆதிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள் தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய் 280 சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும் ஆமான பதவி அருளவே வேணுமையா என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும் அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும் செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள் இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள் வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல் தனதாக எங்கள் தயவில் குடியிருந்து கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல் காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப் பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும் 300 சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும் என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம் வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும் தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும் அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள் அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும் கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும் சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து வந்து மடவார் மறையொத்த மூவரையும் சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக் கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல் மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக் கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள் 320 சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி பாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல் ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல் வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல் ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல் சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு 340 வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித் தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும் பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும் கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும் சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும் பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில் சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார் அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும் இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும் சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும் கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய் மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே 360 தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம் இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன் இரந்து திரியும் ஈசருக் கல்லாது பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர் அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம் கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார் அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார் ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும் நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்தி லேபெருகி வானத் தமிர்த மதுபா லமுதருந்தி வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார் ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான் பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன் அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார் துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி 380 அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத் தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும் வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள் சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள் அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம் நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில் நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள் சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால் இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன் பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள் அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார் அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார் அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து 400 உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான் மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம் தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து தோசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல் நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச் சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக் 420 கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல் ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல் இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும் ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம் மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால் வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால் புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு 440 மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே கன்னிப் பருவமதில் கைமோச மானதினால் உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப் பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச் சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித் தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும் சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர் நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில் சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம் எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன் கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக் கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம் இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும் மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும் குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத் திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும் கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க 460 அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால் ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம் நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும் எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத் தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத் தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல் உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய் வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக் குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும் நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால் இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும் அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக் கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும் எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம் மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும் அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று 480 என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார் பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும் துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர் அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில் ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான் எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண் கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார் அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும் தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே 500 கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண் அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும் அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும் ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார் அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும் மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய் இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால் கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர் தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு 520 எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால் வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால் அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும் என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும் நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம் இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார் நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர் உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில் நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால் ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும் மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே செங்கருட வாகனவா தேவி மணவாளா நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும் 540 சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில் மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர் பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால் இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால் வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும் மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல் சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல் மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல் பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல் நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல் தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல் கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல் மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல் கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல் செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல் பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல் மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல் சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல் ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல் 560 அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல் தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல் இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச் சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும் என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார் வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார் அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார் செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில் வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும் கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும் சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு 580 வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று) எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம் கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம் சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம் என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய் இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய் வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும் வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார் உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும் திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில் பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள் திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க நாரா யணரும் நல்லசிவ னுமையும் சீராரும் நல்ல தெய்வத் திருமாதும் கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில் 600 ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது காளி சிறை மாகாளி யென்ற வடபத்தி ரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம் நன்றான கன்னி நாரா யணரிடத்தில் வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான் கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல் சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன் அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன் பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன் இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப் புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள் அப்போத னாதி அய்யாநா ராயணரும் செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார் கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே 620 ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான் பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும் வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும் திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார் வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய் நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன் மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால் மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள் புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள் தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப் பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது 640 மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச் சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில் இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம் நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண் கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம் என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும் மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும் கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால் மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும் இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய் 660 அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை வல்லப் பொருளே மறைகாணா தோவியமே காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால் ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும் முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப் பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும் குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள் 680 நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி மகாலெட்சுமி மகரமாதல் லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல் சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய் மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில் நிலையிலே நின்று நீவளரு கண்மணியே நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால் பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும் தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும் சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும் சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன் கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன் உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச் 700 செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத் தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத் நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத் தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன் கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால் சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும் வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள் அப்போது அய்யா ஆனந்த மேபெருகி செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும் பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில் நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும் 720 சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம் பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த் துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க் காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக் காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப் பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம் கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய் அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக் கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம் மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன் உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன் திடமான கோவே செய்ய மணிவிளக்கே என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய 740 என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச் சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள் வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச் செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச் சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப் பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள் தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க 760 தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள் சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள் பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும் சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள் 771 |
செவ்வாய், 30 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக