புதன், 10 செப்டம்பர், 2014

தானநிறைவு வாசகம்

கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன்
தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன்
சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
பிரமனை அடுத்ததுக்காக பு+வண்டன்மாவர் காவிக்கொள்ள
பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
ஆண்டியும் ஆண்டிச்சியுங்கூடி அழித்துவரும்போது
அன்புள்ள பக்தரை ஆல்போல் தழைக்க வைப்பதும்
எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக