அய்யா வழி மக்கள் தன் வாழ்வில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய கடமைகள் சிலஇங்கே...........
- அதிகாலையில் துயிலெழுதல்.
- விழித்ததும் பல் தேய்த்து முகம் கழுவி,குளித்து விட்டு ,நெற்றியில் திருநாமம் அணிந்து 5 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பின் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
- சற்று நேரம் அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் படித்து விட்டு பின்,பள்ளி,கல்லூரி பாடங்களை படிக்க வேண்டும்.
- தாய்,தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
- நம்மால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து பெற்றோருக்கு உதவ வேண்டும்.
- நம்முடைய ஆடைகளை நாமே துவைத்து உடுத்துதல் வேண்டும்.
- கடமை தவறாமையும் ,காலந்தவறாமையும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
- நாம் வசிக்கும் இடம்,படுக்கும் இடம்,படிக்கும் இடம் அனைத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
- எல்லோரிடமும் அன்பாக நடந்திட வேண்டும்.
- ஒருபோதும் கோபங்கொள்ள கூடாது, கோள்வார்த்தைகள் பேசக்கூடாது,கேட்க கூடாது.
- நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
- பதிகள் மற்றும்,தாங்கல்களில் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.பிறருடைய நலனுக்காக அய்யாவிடம் வேண்டுதல் வேண்டும்.
- நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
- நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்,உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
- அன்பு,தர்மம்,பொறுமை இவற்றைக் கடைபிடித்து வாழ்வின் வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக