அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் அவதாரங்களை எடுப்பார். அதேபோல் இந்த கலியுகத்தில் பல்வேறு பிரச்சினைகளால் அதர்மம் தலைதூக்க, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தார். சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த ஒரே மூர்த்தியாக அவர் உருவானார்.
ஒரு மனிதனை போல் மண்ணுலக மாந்தர்க்கு காட்சி தந்த அய்யா வைகுண்டர் செய்த அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. அவரது தோற்றம், அவர் உருவாக்கிய வழிபாடு முறைகள் பற்றி விரிவாக காண்போம்:-
கன்னியாகுமரிக்கு மிக அருகில் உள்ள சாஸ்தான் கோவில் விளை (இப்போது சாமிதோப்பு என அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் 1809-ம் ஆண்டு பொன்னுமாடன்- வெயிலாள் தம்பதியினருக்கு மகனாக தோன்றினார் அய்யா வைகுண்டசுவாமிகள். பெற்றோர் அவருக்கு முடிசூடும் பெருமாள் என பெயரிட்டனர்.
அந்த கால திருவாங்கூர் மன்னராட்சி நிர்வாகம் கொடுத்த நெருக்கடி காரணமாக முடிசூடும் பெருமாள் என்ற பெயரை முத்துக்குட்டி என மாற்றி அழைக்கச் சொன்னார்கள். முத்துக்குட்டி 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுமார் 22 வயது இருக்கும் போது மிகவும் பயங்கரமான நோய் உருவானது. முத்துக்குட்டியின் தாய் மிகவும் கவலைப்பட்டார். அவரின் கனவில் நாராயணன் வந்தார்.
அந்த கால திருவாங்கூர் மன்னராட்சி நிர்வாகம் கொடுத்த நெருக்கடி காரணமாக முடிசூடும் பெருமாள் என்ற பெயரை முத்துக்குட்டி என மாற்றி அழைக்கச் சொன்னார்கள். முத்துக்குட்டி 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுமார் 22 வயது இருக்கும் போது மிகவும் பயங்கரமான நோய் உருவானது. முத்துக்குட்டியின் தாய் மிகவும் கவலைப்பட்டார். அவரின் கனவில் நாராயணன் வந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறினார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து சென்றார். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.
மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20–ந் தேதி சரியாக 4.3.1833 -ல் கடலிலிருந்து முத்துக்குட்டி மகர விஞ்சை பெற்று தெய்வீக விஷ்ணுவாய் திரும்பினார். தாய் பாசத்தோடு மகனே என அழைத்தார். ஆண்டு ஆயிரத்தெட்டுக்கு முன்னே அன்னை எனவே நீ இருந்தாய், இப்போ நான் விஷ்ணு மகனாய் வருகிறேன் என்றார் வைகுண்டர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக