புதன், 24 செப்டம்பர், 2014

முக்காலம் சொன்ன அய்யா வைகுண்டர்!

ல நாள் பட்டினி போடப்பட்ட புலி, கூண்டுக்குள் பலமாக உறுமிக்கொண்டி ருந்தது. நடக்கப்போகும் விபரீதத்தைக் காண வழக்கம்போல் திரண்டிருந் தனர் பொதுமக்கள். சிறிது நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப் பட்டது.
குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம்சாட்டி இழுத்துவரப்பட்டார் அந்த மகான். கருணை வழியும் அவரது முகத்தில் துளியும் பயமில்லை. தெய்வீகப் பேரொளி அவரது முகத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. புன்னகை சிந்தியபடியே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்கத் தயாராக வந்தார்.
கூடியிருந்த மக்களில், அந்த மகானுக்கு ஆதரவானவர்கள் பலர் இருந்தார்கள். ‘கலியை அழிக்க அவதாரம் எடுத்த இறைவனையே இந்தக் கலிநீசன்கள் தீண்டப் பார்க்கிறார்களே…’ என்று அவர்கள் கலங்கினாலும், அந்த மகானுக்கு எதுவும் நேராது என்கிற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக