புதன், 24 செப்டம்பர், 2014

திருமணம்:

அன்புக்கொடி மக்கள் திருமணப் பொருத்தம் அறிய பதியில் ஏட்டில் நூல்வைத்துப் பார்த்தல், திருஉளச்சீட்டு எழுதி வைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். திருமணத்தின்போது அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை வைக்கின்றனர். மவுனிக்கலியாண என்று தொடங்கும் திருமண வாழ்த்துப் பாடல் படிக்கின்றனர். மணமக்கள் மணமேடையில் தெற்குத்திசை நோக்கி அமர்கின்றனர்.
 
மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை திருச்சரடு சேர்த்தல் என்று சொல்கின்றனர். தாலியில் உள்ள சுட்டியில் (லாக்கட்) தாமரை நாமம் பொறிக்கப்பட்டிருக்கும். மணமக்கள் மணமேடையை ஐந்துமுறை வலம் வருகின்றனர். அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற நிகழ்வுகள் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக