அய்யாவைகுண்டரை அன்புக்கொடி மக்கள் அய்யா என்றே அழைத்தனர். இன்றும்
அவ்வாறே சொல்கின்றனர். தன்னை நாடிவந்த அன்புக்கொடி மக்களை அய்யாவைகுண்டரும்
அய்யா என்றே அழைத்தார். எதிர்படுகின்ற மனிதனை அய்யாவைகுண்டரின்
பிரதிபிம்பமாகவே (கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல) அன்புக்கொடி மக்கள்
கருதுகின்றனர். அதனால்தான் அய்யா என்று ஆச்சாரமாக (அய்யா வாங்க, அய்யா
உட்காருங்க) ஒருவருக்கொருவர் பேசிக்களிக்கின்றனர்.
அன்புக்கொடிமக்கள்
எச்செயலையும் அய்யா உண்டு என்று கூறி தொடங்குவதையும் அய்யா உண்டு
என்றுகூறி நிறைவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பதியின் முகப்பிலும்
இல்லத்து முன் அறைகளிலும், புத்தகங்களின் முற்சொல்லிலும் அன்புக்கொடி
மக்கள் அய்யாதுணை என்று பொறிப்பதைப் பார்க்க முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக