சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். அவர்களது கண்களில் மிரட்சி... மிரட்சி... மிரட்சி மாத்திரமே!
"இப்படி கொடுமை செய்கிறார்களே... இறைவனே... உனக்கே இந்த சோதனையா?" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு பல பெண்கள் அழுதனர்.
“கை கட்டி, கூனி குறுகிப் போன எங்கள் வீர நெஞ்சை நிமிர வைத்த கோமானே... உங்களுக்கு இப்படியொரு கோலமா?” என்று மனதிற்குள் குமுறி குமுறி அழுதனர், இளைஞர்கள்.
இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு, மேலாடை இல்லாமல் இழுத்துச் செல்லப்பட்டார், மானிடனாக அவதரித்த இறைமகன். ஆம்... அய்யா வைகுண்டர்தான் அவர்!
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன தெரியுமா?
1. மேல் ஜாதியினரிடம் அடிமைப்பட்டு கிடந்த ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தார்.
2. மேல்தட்டு மக்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை அணி திரட்டுகிறார்.
3. தாழ்த்தப்பட்ட 18 ஜாதி மக்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குள் ஒற்றுமையை வளர்க்கிறார். எல்லோரும் சமம் என்கிறார்.
4. மேட்டுக்குடியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக திறந்த மார்பாக வலம் வர வேண்டிய தாழ்த்தப்பட்ட பெண்கள், இவரது அறிவுரையால் சேலை உடுத்தி மறைத்துக் கொள்கிறார்கள்.
5. இவரது தலைமையில் திரளும் கீழ் ஜாதியினர் மேட்டுக்குடியினரை மதிப்பதில்லை. அத்துடன், மார்பு வரி, தலைமுடி வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் செலுத்துவதில்லை.
6. உயர் ஜாதியினர் வசிக்கும் தெருக்கள் வழியாக செல்லும்போது குடை பிடிக்காமல், காலில் அணிந்த செருப்பை கையில் தூக்கிக் கொண்டு குனிந்து செல்பவர்கள், இவரது பேச்சைக் கேட்டு அவ்வாறு நடக்க மறுக்கிறார்கள்.
மேல் ஜாதியினரைக் கண்ட மாத்திரத்தில் கை கட்டி, துண்டை (டவல்) இடுப்பில் தரித்து, கூனி குறுகிச் நின்றவர்கள், தரையை முத்தமிடும் 8 முழ வேஷ்டி கட்டியும், தலையில் பெரிய தலைப்பாகை அணிந்தும் வலம் வருகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் முத்துக்குட்டி என்கிற அந்த வைகுண்டர்தான்.
- இப்படியெல்லாம், அய்யா வைகுண்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அவருக்கு தண்டனை வழங்குவதற்காக திருவனந்தபுரத்திற்கு இப்படியொரு அவலக் கோலத்தில் இழுத்துச் செல்லப்படுகிறார். அய்யாவை இழுத்து வரச் சொன்னவன், சுவாதித் திருநாள் மகாராஜா.
திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்ட அய்யா வைகுண்டர் அங்குள்ள சிங்காரத்தோப்பில் சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சாதாரண மனிதன் என்றால் முதல் கொடுமை முயற்சியிலேயே இறந்து போய் இருப்பான். ஆனால், வைகுண்டர் இறைமகன் ஆயிற்றே... திரண்டு வந்த கொடூரங்கள் எல்லாம் அய்யாவை பார்த்த மாத்திரத்தில் மிரண்டு திரும்பின.
சிறையில் வைகுண்டரைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகளை திருவிதாங்கூர் சமஸ்தான வீரர்கள் மன்னனின் உத்தரவின் பேரில் மேற்கொண்டனர். முதல் முயற்சியாக பாலில் விஷத்தை கலந்து கொடுத்தார்கள்.
எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே அய்யா! பாலை வாங்கிக் குடித்தார். முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாக உற்சாகமானாரேத் தவிர மயங்கி கீழே சரியவில்லை.
அடுத்ததாக காற்று புகாத இருட்டு அறையில் பூட்டி வைத்து பல நாட்கள் அவரை பட்டினிப் போட்டனர். ஆனால், வைகுண்டருக்கு எதுவும் ஆகவில்லை. முன்பு போலவே இருந்தார். சொல்லப் போனால், அவரது வலிமை அதிகமாகிக் கொண்டே போனது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த தண்டனையும் அய்யாவிடம் பலிக்கவில்லை என்பதை அறிந்த சுவாதித் திருநாள் மகாராஜா இன்னும் ஆத்திரமானான். “அவன் இறந்துவிட்டான் என்ற செய்திதான் இனி என் காதில் கேட்க வேண்டும். அவனை என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ, எனக்குத் தெரியாது...” என்று ஒரேயடியாக சொல்லி விட்டான்.
இது போதாதா வீரர்களுக்கு?
அடுத்தக்கட்டமாக அய்யாவின் மீது கொடூரமான தண்டனைகள் திணிக்கப்பட்டன.
முதல் கொடூர தண்டனையாக அய்யாவை தீயிலிட்டு கொளுத்த உத்தரவிடப்பட்டது. இதையட்டி, விறகு கட்டைகளை ஓரிடத்தில் குவித்து, அதில் நெய்யை டன் கணக்கில் ஊற்றி தீ வைத்தனர். அய்யாவை அதற்குள் தள்ளிவிட்டனர். ஒருபுறம் அக்னிக்குள் புகுந்த அய்யா மறுபுறம் தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வருவதுபோல் வந்தார்.
“நெய்யூற்றி கட்டை அடுக்கி தீயை வைத்து
நீந்திக்கொள் என்றானே சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்க நாள் ஆச்சுதென்று
குழி போட்டு நின்றேனே சிவனே அய்யா”
- என்று, அந்த சம்பவத்தை தனது அகிலத்திரட்டில் குறிப்பிடுகிறார் அய்யா வைகுண்டர்.
அதைப் பார்த்த சமஸ்தான வீரர்கள் ஆடிப் போய்விட்டனர். உண்மையில் இவர் மனிதர்தானா? இல்லை... இறைமகன்தானா? என்று கூட யோசித்தனர்.
ஆனால், அவரைக் கொல்ல வேண்டும் என்பது மன்னர் இட்ட கட்டளை ஆயிற்றே... என்று எண்ணியவர்கள், அடுத்த தண்டனை கொடுக்க தயாரானார்கள்.
ஜன்னல் இல்லாத அறையில் அய்யாவைத் தள்ளி, அந்த அறைக்குள் மிளகாய் வற்றலை டன் கணக்கில் கொட்டி தீ வைக்க வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. அதுவும் நிறைவேற்றப்பட்டது. தீக்குள் இருந்து மீண்ட அய்யா, இந்த தண்டனையில் எப்படியும் மூச்சுத்திணறி இறந்து போய் இருப்பார் என்று கணக்கு போட்டனர் வீரர்கள். ஆனால் நடந்ததோ, வழக்கம்போல் வேறுதான்! எந்தவித பாதிப்புமே இல்லாமல் வெளியே வந்தார் வைகுண்டர்.
“அரங்கதனில் அடைத்து வத்தல்போட தீ வைத்தும்
அசையாமல் இருந்தேனே சிவனே அய்யா”
என்று, அந்த சம்பவம் பற்றி அவரே குறிப்பிடுகிறார்.
இதையெல்லாம் அறிந்த மன்னர் சுவாதி திருநாள் இன்னும் கோபமானான். இந்த வைகுண்டர் இன்னும் உயிரோடு இருந்தால், தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியாது என்று அறிந்தவன், அய்யாவை புலிக்கு இரையாக்க உத்தரவிட்டான்.
பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது இன்னும் கொடூரமானது. அய்யாவின் விசுவாசிகளும் அங்கே திரண்டிருந்தனர். அய்யாவுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற பிரார்த்தனையை முணுமுணுத்துக் கொண்டிருந்தன அவர்களது உதடுகள்.
பல நாள் பட்டினி போடப்பட்ட புலிக் கூண்டை வீதிக்கு கொண்டு வந்து வைத்த சமஸ்தான வீரர்கள், அதற்குள் அய்யாவை பிடித்து தள்ளினர். அதுவரை சீறிக்கொண்டும், உறுமிக்கொண்டும் பாய்ந்த புலி, அய்யாவை பார்த்த மாத்திரத்தில் அடங்கிப் போனது.
கோபம் கொண்ட வீரர்கள் ஈட்டியால் புலியின் பின்புறத்தில் குத்த... புலியின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. ஒரு வீரன் குத்திய ஈட்டியை கவ்விப் பிடித்த புலி, அதை வேகமாக தள்ளிவிட்டது. புலி வேகமாக தள்ளிவிட்ட ஈட்டி, அந்த வீரனுக்கு அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதிக்க ஜாதிக்காரன் வயிற்றில் பாய்ந்தது. அடுத்த நொடியே அவன் உயிரை விட்டான். ஆனால், அய்யாவை அந்த புலி ஒன்றும் செய்யவில்லை. அவரது காலடியில் போய் படுத்துக் கொண்டது.
“ஈட்டியெடுத்து இனிக்குத்த வேணும் என்று
எட்டிக் கடுவாய் ஈட்டிதனைப் பிடித்து
விட்டிடவே அருகில் நின்றதொரு வேதியனை
குத்திச்சே ஈட்டி குடல் பீற...”
என்று அகிலத்திரட்டில் இதுபற்றி குறிப்பிடுகிறார் அய்யா.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அய்யாவின் விசுவாசிகள் உற்சாகம் ஆனார்கள். அவர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.
அய்யா வைகுண்டரை ஒன்றும் செய்ய முடியாது என்று பலவாறு யோசித்து ஒரு முடிவுக்கு வந்த சுவாதித் திருநாள் மகாராஜா, வேறு வழியின்றி அவரை விடுதலை செய்தான். அய்யாவின் 112 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.
"இப்படி கொடுமை செய்கிறார்களே... இறைவனே... உனக்கே இந்த சோதனையா?" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு பல பெண்கள் அழுதனர்.
“கை கட்டி, கூனி குறுகிப் போன எங்கள் வீர நெஞ்சை நிமிர வைத்த கோமானே... உங்களுக்கு இப்படியொரு கோலமா?” என்று மனதிற்குள் குமுறி குமுறி அழுதனர், இளைஞர்கள்.
இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு, மேலாடை இல்லாமல் இழுத்துச் செல்லப்பட்டார், மானிடனாக அவதரித்த இறைமகன். ஆம்... அய்யா வைகுண்டர்தான் அவர்!
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன தெரியுமா?
1. மேல் ஜாதியினரிடம் அடிமைப்பட்டு கிடந்த ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தார்.
2. மேல்தட்டு மக்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை அணி திரட்டுகிறார்.
3. தாழ்த்தப்பட்ட 18 ஜாதி மக்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குள் ஒற்றுமையை வளர்க்கிறார். எல்லோரும் சமம் என்கிறார்.
4. மேட்டுக்குடியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக திறந்த மார்பாக வலம் வர வேண்டிய தாழ்த்தப்பட்ட பெண்கள், இவரது அறிவுரையால் சேலை உடுத்தி மறைத்துக் கொள்கிறார்கள்.
5. இவரது தலைமையில் திரளும் கீழ் ஜாதியினர் மேட்டுக்குடியினரை மதிப்பதில்லை. அத்துடன், மார்பு வரி, தலைமுடி வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் செலுத்துவதில்லை.
6. உயர் ஜாதியினர் வசிக்கும் தெருக்கள் வழியாக செல்லும்போது குடை பிடிக்காமல், காலில் அணிந்த செருப்பை கையில் தூக்கிக் கொண்டு குனிந்து செல்பவர்கள், இவரது பேச்சைக் கேட்டு அவ்வாறு நடக்க மறுக்கிறார்கள்.
மேல் ஜாதியினரைக் கண்ட மாத்திரத்தில் கை கட்டி, துண்டை (டவல்) இடுப்பில் தரித்து, கூனி குறுகிச் நின்றவர்கள், தரையை முத்தமிடும் 8 முழ வேஷ்டி கட்டியும், தலையில் பெரிய தலைப்பாகை அணிந்தும் வலம் வருகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் முத்துக்குட்டி என்கிற அந்த வைகுண்டர்தான்.
- இப்படியெல்லாம், அய்யா வைகுண்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அவருக்கு தண்டனை வழங்குவதற்காக திருவனந்தபுரத்திற்கு இப்படியொரு அவலக் கோலத்தில் இழுத்துச் செல்லப்படுகிறார். அய்யாவை இழுத்து வரச் சொன்னவன், சுவாதித் திருநாள் மகாராஜா.
திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்ட அய்யா வைகுண்டர் அங்குள்ள சிங்காரத்தோப்பில் சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சாதாரண மனிதன் என்றால் முதல் கொடுமை முயற்சியிலேயே இறந்து போய் இருப்பான். ஆனால், வைகுண்டர் இறைமகன் ஆயிற்றே... திரண்டு வந்த கொடூரங்கள் எல்லாம் அய்யாவை பார்த்த மாத்திரத்தில் மிரண்டு திரும்பின.
சிறையில் வைகுண்டரைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகளை திருவிதாங்கூர் சமஸ்தான வீரர்கள் மன்னனின் உத்தரவின் பேரில் மேற்கொண்டனர். முதல் முயற்சியாக பாலில் விஷத்தை கலந்து கொடுத்தார்கள்.
எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே அய்யா! பாலை வாங்கிக் குடித்தார். முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாக உற்சாகமானாரேத் தவிர மயங்கி கீழே சரியவில்லை.
அடுத்ததாக காற்று புகாத இருட்டு அறையில் பூட்டி வைத்து பல நாட்கள் அவரை பட்டினிப் போட்டனர். ஆனால், வைகுண்டருக்கு எதுவும் ஆகவில்லை. முன்பு போலவே இருந்தார். சொல்லப் போனால், அவரது வலிமை அதிகமாகிக் கொண்டே போனது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த தண்டனையும் அய்யாவிடம் பலிக்கவில்லை என்பதை அறிந்த சுவாதித் திருநாள் மகாராஜா இன்னும் ஆத்திரமானான். “அவன் இறந்துவிட்டான் என்ற செய்திதான் இனி என் காதில் கேட்க வேண்டும். அவனை என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ, எனக்குத் தெரியாது...” என்று ஒரேயடியாக சொல்லி விட்டான்.
இது போதாதா வீரர்களுக்கு?
அடுத்தக்கட்டமாக அய்யாவின் மீது கொடூரமான தண்டனைகள் திணிக்கப்பட்டன.
முதல் கொடூர தண்டனையாக அய்யாவை தீயிலிட்டு கொளுத்த உத்தரவிடப்பட்டது. இதையட்டி, விறகு கட்டைகளை ஓரிடத்தில் குவித்து, அதில் நெய்யை டன் கணக்கில் ஊற்றி தீ வைத்தனர். அய்யாவை அதற்குள் தள்ளிவிட்டனர். ஒருபுறம் அக்னிக்குள் புகுந்த அய்யா மறுபுறம் தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வருவதுபோல் வந்தார்.
“நெய்யூற்றி கட்டை அடுக்கி தீயை வைத்து
நீந்திக்கொள் என்றானே சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்க நாள் ஆச்சுதென்று
குழி போட்டு நின்றேனே சிவனே அய்யா”
- என்று, அந்த சம்பவத்தை தனது அகிலத்திரட்டில் குறிப்பிடுகிறார் அய்யா வைகுண்டர்.
அதைப் பார்த்த சமஸ்தான வீரர்கள் ஆடிப் போய்விட்டனர். உண்மையில் இவர் மனிதர்தானா? இல்லை... இறைமகன்தானா? என்று கூட யோசித்தனர்.
ஆனால், அவரைக் கொல்ல வேண்டும் என்பது மன்னர் இட்ட கட்டளை ஆயிற்றே... என்று எண்ணியவர்கள், அடுத்த தண்டனை கொடுக்க தயாரானார்கள்.
ஜன்னல் இல்லாத அறையில் அய்யாவைத் தள்ளி, அந்த அறைக்குள் மிளகாய் வற்றலை டன் கணக்கில் கொட்டி தீ வைக்க வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. அதுவும் நிறைவேற்றப்பட்டது. தீக்குள் இருந்து மீண்ட அய்யா, இந்த தண்டனையில் எப்படியும் மூச்சுத்திணறி இறந்து போய் இருப்பார் என்று கணக்கு போட்டனர் வீரர்கள். ஆனால் நடந்ததோ, வழக்கம்போல் வேறுதான்! எந்தவித பாதிப்புமே இல்லாமல் வெளியே வந்தார் வைகுண்டர்.
“அரங்கதனில் அடைத்து வத்தல்போட தீ வைத்தும்
அசையாமல் இருந்தேனே சிவனே அய்யா”
என்று, அந்த சம்பவம் பற்றி அவரே குறிப்பிடுகிறார்.
இதையெல்லாம் அறிந்த மன்னர் சுவாதி திருநாள் இன்னும் கோபமானான். இந்த வைகுண்டர் இன்னும் உயிரோடு இருந்தால், தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியாது என்று அறிந்தவன், அய்யாவை புலிக்கு இரையாக்க உத்தரவிட்டான்.
பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது இன்னும் கொடூரமானது. அய்யாவின் விசுவாசிகளும் அங்கே திரண்டிருந்தனர். அய்யாவுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற பிரார்த்தனையை முணுமுணுத்துக் கொண்டிருந்தன அவர்களது உதடுகள்.
பல நாள் பட்டினி போடப்பட்ட புலிக் கூண்டை வீதிக்கு கொண்டு வந்து வைத்த சமஸ்தான வீரர்கள், அதற்குள் அய்யாவை பிடித்து தள்ளினர். அதுவரை சீறிக்கொண்டும், உறுமிக்கொண்டும் பாய்ந்த புலி, அய்யாவை பார்த்த மாத்திரத்தில் அடங்கிப் போனது.
கோபம் கொண்ட வீரர்கள் ஈட்டியால் புலியின் பின்புறத்தில் குத்த... புலியின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. ஒரு வீரன் குத்திய ஈட்டியை கவ்விப் பிடித்த புலி, அதை வேகமாக தள்ளிவிட்டது. புலி வேகமாக தள்ளிவிட்ட ஈட்டி, அந்த வீரனுக்கு அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதிக்க ஜாதிக்காரன் வயிற்றில் பாய்ந்தது. அடுத்த நொடியே அவன் உயிரை விட்டான். ஆனால், அய்யாவை அந்த புலி ஒன்றும் செய்யவில்லை. அவரது காலடியில் போய் படுத்துக் கொண்டது.
“ஈட்டியெடுத்து இனிக்குத்த வேணும் என்று
எட்டிக் கடுவாய் ஈட்டிதனைப் பிடித்து
விட்டிடவே அருகில் நின்றதொரு வேதியனை
குத்திச்சே ஈட்டி குடல் பீற...”
என்று அகிலத்திரட்டில் இதுபற்றி குறிப்பிடுகிறார் அய்யா.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அய்யாவின் விசுவாசிகள் உற்சாகம் ஆனார்கள். அவர்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.
அய்யா வைகுண்டரை ஒன்றும் செய்ய முடியாது என்று பலவாறு யோசித்து ஒரு முடிவுக்கு வந்த சுவாதித் திருநாள் மகாராஜா, வேறு வழியின்றி அவரை விடுதலை செய்தான். அய்யாவின் 112 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக