சாமித்தோப்பு பூவண்டர் தோப்பில் வழக்கம் போல் தன்னை சந்திக்க வந்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் அய்யா வைகுண்டர். அவர், யதார்த்தமாக பார்வையை திருப்பியபோது சில இளைஞர்கள் வேகமாக அவரை நோக்கி ஓடி வந்தனர். பொதுமக்களிடம் உபதேசிப்பதை நிறுத்தி விட்டு, அவர்கள் எதற்காக ஓடி வருகிறார்கள் என்பதை அறிய மவுனமானார்.
ஓடி வந்த இளைஞர்கள் வைகுண்டர் முன்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றனர்.
“ஏன் இந்த ஓட்டம்? அவ்வளவு அவசரமான காரியமா?” அய்யா கேட்டார்.
“அப்படித்தான் அய்யா. திருவிதாங்கூர் மன்னர், தங்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். உங்களைக் கைது செய்வதற்காக சமஸ்தான ஆட்கள் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்...” என்று மூச்சு கூட விட முடியாமல் சொன்னார்கள் வந்தவர்கள்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் அய்யாவை காண வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அய்யா முகத்திலோ எந்த சலனமும் தெரியவில்லை. எப்போதும் தவழும் மகிழ்ச்சி மாத்திரமே அவர் முகத்தில் தெரிந்தது.
சிறிது நேரம் மவுனமாக நகர்ந்தது.
அதன்பிறகு அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று அய்யாவைக் காண வந்தவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.
அதுவரை மவுனமாக இருந்த அய்யா வைகுண்டர், திடீரென்று எழுந்து ஓட ஆரம்பித்தார். தென் திசை கடல் நோக்கி அவரது ஓட்டம் அமைந்திருந்தது. அய்யாவின் இந்தச் செயல், இறைவனாக அவரைப் பார்த்த பொதுமக்களுக்கு விநோதமாக தெரிந்தது. அவரது செய்கையைக் கண்டு மனம் வெதும்பினர்.
ஆதிக்க ஜாதியினரோ, 'தன்னை இறைவனின் அவதாரம் என்கிறான்... ஆனால், கைது செய்ய வருபவர்களைக் கண்டு அஞ்சி ஓடுகிறானே...' என்று ஏளனம் செய்தனர். அய்யா வழியை பின்பற்றியவர்களையும் கிண்டலடித்தனர்.
“பதறி இவன் போறான் படை வருகுது என்று சொல்லிக்
கதறி மிக ஓடுகிறான் கள்ள சுவாமி இவனும்
சாமி என்றால் நருட்குத் தோற்று மிக ஓடுவானோ...
நாம் இவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே...
பேயனுட பேச்சை பிரமாணமாயக் கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லாம் என்று சொல்லி
நீசக்குலத்தோர் நெடுந்தூரம் வைதனர் காண்...”
- என்று, மேற்கண்ட சம்பவம் பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சமஸ்தான படைவீரர்கள் வைகுண்டரை கைது செய்ய பூவண்டர் தோப்புக்குள் புகுந்தனர். அங்கே அவர் இல்லாததால் கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அய்யாவுக்காக ஏற்படுத்தப்பட்ட குடிலையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
அதோடு அவர்களது அட்டகாசம் நின்று விடவில்லை. அய்யாவைத் தேடி வந்தவர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலரது கை, கால்கள் ஊனமாக்கப்பட்டன.
இந்த களேபரங்கள் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அய்யா வைகுண்டர் பூவண்டர் தோப்புக்கு திரும்பி வந்தார். அங்கே நடந்த கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்தார்.
அப்போதுதான் ஒருவர் அய்யா அருகில் வந்தார்.
வந்தவர், அய்யாவிடம் கேட்டார், “அய்யா... நாங்கள் எல்லாம் உங்களை நம்பித்தானே இங்கே வந்தோம். ஆனால், திடீரென்று எழுந்து ஓடி விட்டீர்களே... அதற்கு நாங்கள் என்ன பொருள் எடுத்துக் கொள்ள?” என்றார் அவர்.
அவரது தோளில் கை வைத்து, அவரது கண்களில் இருந்து சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டு அய்யா இப்படி கூறினார்.
“அவசரப்பட்டு தவறாக முடிவெடுத்து விடாதீர்கள். நான் கலியை அழித்துத் தர்மயுகத்தை நிலைநாட்டப் போகும் நேரம் நெருங்கிவிட்டது. அதை என் தந்தையிடம் சொல்லி வரவே தென் திசைக் கடல் நோக்கி ஓடினேன். கடலுக்குள் புகுந்து தந்தையிடம் சொல்லி விட்டு திரும்பி வந்துள்ளேன்...” என்றார்.
இதற்கு பிறகுதான், திடீரென்று அய்யா எழுந்து ஓடியதற்கான காரணத்தை எல்லோரும் தெரிந்து கொண்டனர். அவரைத் தவறாக எண்ணிய அவரது மக்கள், அதற்காக வருந்திக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் பூவண்டர் தோப்பில் வழக்கமான பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் அதிக அளவில் வந்தார்கள். அப்போது, அவர்கள் எதிர்பார்க்காத மற்றுமொரு சம்பவமும் அங்கே அரங்கேறியது.
அய்யா வந்து விட்டார் என்பதை அறிந்த சமஸ்தான படைவீரர்கள் மீண்டும் ஆயுதங்களோடு பூவண்டர் தோப்புக்குள் நுழைந்தனர். அய்யாவைக் காண வந்த அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அய்யா மீதும் அடி விழுந்தது. அதைப் பார்த்தவர்கள், படைவீரர்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். ஆனால், அய்யா அவர்களை அமைதிப்படுத்தினார். “பொறுமையாக இருப்பவர்கள்தான் பெரியோர் ஆக முடியும்” என்றார். இதையடுத்து அனைவரும் அமைதி ஆனார்கள்.
“பொறுத்து இருந்தவரே பெரியோரே ஆகுமக்கா
அறுத்திடவே என்றால் அபுருவமோ என்றவனுக்கு
வம்பு செய்வதைப் பார்த்து வதைக்க வந்தேன் அக்குலத்தை
அன்பு குடி கொண்ட அதிக மக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்
மறுத்து உரையாடாமல் மக்களென்ற சான்றோர்கள்...”
-என்று, அதுபற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
இதைத் தொடர்ந்து, அய்யா வைகுண்டரை கைது செய்தனர் படைவீரர்கள். அய்யாவின் கைகளில் விலங்கு மாட்டிய போது அனைவரும் கண்ணீர் சிந்திக் கதறினர். ஆனால், ஆதிக்க ஜாதியினரோ, ‘நமக்கு தொந்தரவு செய்த எதிரி தொலைந்தான்’ என்று ஆனந்தக் கூத்தாடினர்.
முதலில் சுசீந்திரத்தில் தங்கியிருந்த மன்னன் சுவாதித் திருநாள் முன்பு அய்யா வைகுண்டரை ஆஜர் செய்தனர். அவன், அய்யாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சில நாட்கள் சுசீந்திரத்தில் ஓய்வெடுத்த மன்னன், அதன் பின் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான்.
ஆனாலும், அய்யாவைப் பழி வாங்கும் முடிவில் உறுதியாக இருந்தான். அதனால், அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக திருவனந்தபுரத்திற்கு இழுத்துக் கொண்டு வரவும் உத்தரவிட்டான்.
ஓடி வந்த இளைஞர்கள் வைகுண்டர் முன்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றனர்.
“ஏன் இந்த ஓட்டம்? அவ்வளவு அவசரமான காரியமா?” அய்யா கேட்டார்.
“அப்படித்தான் அய்யா. திருவிதாங்கூர் மன்னர், தங்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். உங்களைக் கைது செய்வதற்காக சமஸ்தான ஆட்கள் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்...” என்று மூச்சு கூட விட முடியாமல் சொன்னார்கள் வந்தவர்கள்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் அய்யாவை காண வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அய்யா முகத்திலோ எந்த சலனமும் தெரியவில்லை. எப்போதும் தவழும் மகிழ்ச்சி மாத்திரமே அவர் முகத்தில் தெரிந்தது.
சிறிது நேரம் மவுனமாக நகர்ந்தது.
அதன்பிறகு அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று அய்யாவைக் காண வந்தவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.
அதுவரை மவுனமாக இருந்த அய்யா வைகுண்டர், திடீரென்று எழுந்து ஓட ஆரம்பித்தார். தென் திசை கடல் நோக்கி அவரது ஓட்டம் அமைந்திருந்தது. அய்யாவின் இந்தச் செயல், இறைவனாக அவரைப் பார்த்த பொதுமக்களுக்கு விநோதமாக தெரிந்தது. அவரது செய்கையைக் கண்டு மனம் வெதும்பினர்.
ஆதிக்க ஜாதியினரோ, 'தன்னை இறைவனின் அவதாரம் என்கிறான்... ஆனால், கைது செய்ய வருபவர்களைக் கண்டு அஞ்சி ஓடுகிறானே...' என்று ஏளனம் செய்தனர். அய்யா வழியை பின்பற்றியவர்களையும் கிண்டலடித்தனர்.
“பதறி இவன் போறான் படை வருகுது என்று சொல்லிக்
கதறி மிக ஓடுகிறான் கள்ள சுவாமி இவனும்
சாமி என்றால் நருட்குத் தோற்று மிக ஓடுவானோ...
நாம் இவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே...
பேயனுட பேச்சை பிரமாணமாயக் கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லாம் என்று சொல்லி
நீசக்குலத்தோர் நெடுந்தூரம் வைதனர் காண்...”
- என்று, மேற்கண்ட சம்பவம் பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சமஸ்தான படைவீரர்கள் வைகுண்டரை கைது செய்ய பூவண்டர் தோப்புக்குள் புகுந்தனர். அங்கே அவர் இல்லாததால் கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அய்யாவுக்காக ஏற்படுத்தப்பட்ட குடிலையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
அதோடு அவர்களது அட்டகாசம் நின்று விடவில்லை. அய்யாவைத் தேடி வந்தவர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலரது கை, கால்கள் ஊனமாக்கப்பட்டன.
இந்த களேபரங்கள் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அய்யா வைகுண்டர் பூவண்டர் தோப்புக்கு திரும்பி வந்தார். அங்கே நடந்த கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்தார்.
அப்போதுதான் ஒருவர் அய்யா அருகில் வந்தார்.
வந்தவர், அய்யாவிடம் கேட்டார், “அய்யா... நாங்கள் எல்லாம் உங்களை நம்பித்தானே இங்கே வந்தோம். ஆனால், திடீரென்று எழுந்து ஓடி விட்டீர்களே... அதற்கு நாங்கள் என்ன பொருள் எடுத்துக் கொள்ள?” என்றார் அவர்.
அவரது தோளில் கை வைத்து, அவரது கண்களில் இருந்து சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டு அய்யா இப்படி கூறினார்.
“அவசரப்பட்டு தவறாக முடிவெடுத்து விடாதீர்கள். நான் கலியை அழித்துத் தர்மயுகத்தை நிலைநாட்டப் போகும் நேரம் நெருங்கிவிட்டது. அதை என் தந்தையிடம் சொல்லி வரவே தென் திசைக் கடல் நோக்கி ஓடினேன். கடலுக்குள் புகுந்து தந்தையிடம் சொல்லி விட்டு திரும்பி வந்துள்ளேன்...” என்றார்.
இதற்கு பிறகுதான், திடீரென்று அய்யா எழுந்து ஓடியதற்கான காரணத்தை எல்லோரும் தெரிந்து கொண்டனர். அவரைத் தவறாக எண்ணிய அவரது மக்கள், அதற்காக வருந்திக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் பூவண்டர் தோப்பில் வழக்கமான பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் அதிக அளவில் வந்தார்கள். அப்போது, அவர்கள் எதிர்பார்க்காத மற்றுமொரு சம்பவமும் அங்கே அரங்கேறியது.
அய்யா வந்து விட்டார் என்பதை அறிந்த சமஸ்தான படைவீரர்கள் மீண்டும் ஆயுதங்களோடு பூவண்டர் தோப்புக்குள் நுழைந்தனர். அய்யாவைக் காண வந்த அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அய்யா மீதும் அடி விழுந்தது. அதைப் பார்த்தவர்கள், படைவீரர்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். ஆனால், அய்யா அவர்களை அமைதிப்படுத்தினார். “பொறுமையாக இருப்பவர்கள்தான் பெரியோர் ஆக முடியும்” என்றார். இதையடுத்து அனைவரும் அமைதி ஆனார்கள்.
“பொறுத்து இருந்தவரே பெரியோரே ஆகுமக்கா
அறுத்திடவே என்றால் அபுருவமோ என்றவனுக்கு
வம்பு செய்வதைப் பார்த்து வதைக்க வந்தேன் அக்குலத்தை
அன்பு குடி கொண்ட அதிக மக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்
மறுத்து உரையாடாமல் மக்களென்ற சான்றோர்கள்...”
-என்று, அதுபற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
இதைத் தொடர்ந்து, அய்யா வைகுண்டரை கைது செய்தனர் படைவீரர்கள். அய்யாவின் கைகளில் விலங்கு மாட்டிய போது அனைவரும் கண்ணீர் சிந்திக் கதறினர். ஆனால், ஆதிக்க ஜாதியினரோ, ‘நமக்கு தொந்தரவு செய்த எதிரி தொலைந்தான்’ என்று ஆனந்தக் கூத்தாடினர்.
முதலில் சுசீந்திரத்தில் தங்கியிருந்த மன்னன் சுவாதித் திருநாள் முன்பு அய்யா வைகுண்டரை ஆஜர் செய்தனர். அவன், அய்யாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சில நாட்கள் சுசீந்திரத்தில் ஓய்வெடுத்த மன்னன், அதன் பின் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான்.
ஆனாலும், அய்யாவைப் பழி வாங்கும் முடிவில் உறுதியாக இருந்தான். அதனால், அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக திருவனந்தபுரத்திற்கு இழுத்துக் கொண்டு வரவும் உத்தரவிட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக