புதன், 26 நவம்பர், 2014

அய்யா வைகுண்டர்.

உங்களுக்காய் வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா,இரு மனதாய் எண்ணாதே பின் எனக்கு உத்தரம் சொல்வாயே..!
(விளக்கம்)
என் மக்களே உங்களை கொடுமை படுத்திய இந்த கலியிடம் இருந்து உங்களை காப்பாற்ற அனைத்து சக்திகளையும் என்னுள் அடக்கி நானே உங்களுக்காக இந்த கலியில் அகப்பட்டு,அடிபட
்டு சோதனைகளை அனுபவித்து,இந்ந கலி எண்ணத்தை கருவறுக்க நானே 6வருடம் தவசு பண்ணி இந்த யுகத்தையும் முடித்து உங்களையும் தூய்மை படுத்தி நீங்கள் என்னை வந்து அடைய சூட்சம புத்திகளையும் (இறைவழி அடையும் முறை)சொல்லி நல்ல மனுக்களை தேர்ந்தெடுத்து உங்களுக்கு என் ஆட்சியான தர்ம யுகத்தில் வாழவைக்கவே வந்தேன் இது உண்மை. இதை விடுத்து வந்திருப்பது (முப்போருள்) இறைவனான வைகுண்டம் என்று அறியாமல் நான் முனிவன் என்றோ,யோகி என்றோ,சித்தனென்றோ,சாதாரண மனிதன் என்றோ நினைத்து இருபுத்தியால்(சந்தேகபுத்தி) என்னை மறந்து யாரோ என்று நினைத்து உன் மனது படி அநியாய பாவங்களை செய்தால் இந்ந கலியுகத்தை அழித்து உன்னிடம் நடுதீர்ப்பு கேட்பேன் நீ சொல்ல முடியாமல் தவிப்பாய் உன்னை கடுநரகத்தில் தள்ளி கதவடைப்பேன்(அருள்நூல்)அய்யா வைகுண்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக