அய்யாவின் போதனைகள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் ஈர்த்தன. நாளுக்கு நாள்
அய்யாவை நாடிவருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
வைதீக இந்து சமயத்தில் பெருகியிருந்த மூடத்தனத்தில் இருந்து மக்களை மீட்க
வேண்டும் என்பதே அய்யாவின் நோக்கமாக இருந்தது. பேய்களுக்குப் பயந்தும்,
மந்திரவாதிகளுக்கு அஞ்சியும் இருந்த மக்களை அய்யா அழைத்தார். வைகுண்டர்
பிறந்ததால் பேய்கள் அழிந்துவிட்டன என்றும் மந்திரவாதிகளின் சக்தி ஒழிந்து
விட்டது என்றும் கூறினார். யாருக்கும் எந்த நிலைக்கும் அஞ்சாமல் இருக்க
வேண்டும். அடிமைத்தனம் வேண்டவே வேண்டாம். தன்மானம் காப்பதே தர்மம்
என்றெல்லாம் மொழிந்தார்..
தன்னைக் காண வந்தோரின் நோய்களை திருமண்ணும் நீரும் கொடுத்துக்
குணப்படுத்தினார். ஆடம்பரத் திருவிழாக்கள் வேண்டாம், அமைதியாக இறைவனை
வணங்கினாலே போதும் என்றுரைத்தார். கிராமத் தெய்வங்களை வணங்குதல்
வேண்டாம். திருமால் மட்டுமே தெய்வம் அவனையே வணங்குங்கள் என்று
அறிவுறுத்தினார்.
அய்யாவின் போதனைகள் மேல்தட்டு மக்களான வைதீக இந்துக்களின் கோபத்தைத்
தூண்டிவிட்டது.. மேலும் கிறித்தவ மதமாற்றமும் நின்றுபோனதால்,
கிறித்தவர்களும் அய்யாவின் மேல் கோபத்தில் இருந்தனர். தன்னை இறைவனின்
அவதாரம் என்று சொல்லி மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக மன்னனிடம்
புகார் அளிக்கப் பட்டது. அய்யாவைப் பற்றிக் கேள்விப் பட்ட மன்னன்
சுவாதித் திருநாள் சுசீந்திரம் வந்து தங்கினான். தன் மந்திரியிடம்
அய்யாவைப் பற்றி விசாரித்தான். மந்திரியும், "நமக்கு வரி செலுத்தி
அடிமைத்தனம் செய்யும் சாணார் குலத்தில் வைகுண்டராய்த் தோன்றியதாய்
சொல்லிக் கொள்கின்றான். மெய்க்கொண்ட பூமியெல்லாம் வேறொருவர் ஆளாமல் தாமே
முடிசூடி ஆள்வோம் என்றும் சொல்லிக் கொள்கின்றான்" என்றுரைத்தான். ஒரு
ஜோசியனை வரவழைத்து தன்னிலும் பெரியவன் யாரெனக் கேட்டான் மன்னன் .
ஜோசியனும் "மண்ணுலகையெல்லாம் ஒரு குடையில் ஆள மகாவிட்ணு மானுடனாய்த்
தோன்றுவார். அவர் தோன்றும் காலமும் இதுவே" என்றான். "அவர் பிறக்கும்
குலம் யாது?" என மன்னன் வினவ "அது பெரிய வம்சாவழி கொண்ட குலமாக
இருக்கும்" என்று ஜோசியன் உரைத்துச் சென்றுவிட்டான்.
இதனால் மகாவிட்ணு போற்றுதற்குரிய நம்பூதிரி குலத்தில் பிறப்பார் என்றும்
சாணார் குலத்தில் மகாவிட்ணு அவதரிப்பது நடக்க இயலாத ஒன்று என்றும் முடிவு
செய்த மன்னன் வைகுண்டரை கைது செய்து அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அய்யாவைக் கைது செய்ய படைகள் புறப்பட்டன.. மக்கள் வெகுண்டெழுந்தனர்.
எல்லாம் இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த அய்யா பொறுமை காக்கும்படி தம்
மக்களுக்கு அறிவுறுத்தினார். "பொறுத்திருங்கள். உங்களை பூலோகம்
ஆளவைப்பேன். நன்மையைச் சொல்லி, நல்லவழி நடந்து சிரிக்கப் போவது எந்த சாதி
என்று பார்த்து விடலாம்" என்றுரைத்தார்.
படை வீரர்கள் வந்து அய்யாவைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளி,
துப்பாக்கியால் அடித்துக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர்.
வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் அய்யாவின் புன்னகை கண்டு அமைதியானது.
"சாணார் குலத்தில் சாமி அவதரிப்பானோ?" என்ற கேலியை உதாசீனம் செய்த அய்யா
இறைவனின் கட்டளைப் படி அமைதியாக சென்றார்.
தளபதி கௌடன் என்பவன் அய்யாவை மிகவும் கேலி செய்தான். அடித்தான். "அவன்
அடித்த அடியையெல்லாம் ஆபரணமாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என்று
அகிலத்திரட்டில் பாடுகின்றார் அய்யா.
கலிநீசன் என்று அய்யாவால் அழைக்கப் பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன்
சுவாதித் திருநாளின் முன்னிலையில் அய்யா குற்றவாளியாக நிறுத்தப் பட்டார்.
அய்யா தனது சக்தியை எல்லாம் மறைத்து சாதாரண மனிதனாக அவன் முன்னால்
நின்றார். இவனை சோதனை செய்வோம் என்று எண்ணிய மன்னன் தன் கையில் இருப்பது
என்ன என்று கேட்க "இறைவனின் எண்ணம் எதுவோ அது இருக்கும்" என்று
பதிலுரைத்தார் அய்யா. இதனால் அவர் கள்ளசாமி என்று முடிவு செய்த மன்னன்
ஆத்திரமுற்றான். அய்யாவை சரடன் என்னும் கொடிய தளபதியிடம் அழைத்துச்
செல்லக் கட்டளையிட்டான்.
சரடனும் அய்யாவை நிந்தித்து, ஓர் பாத்திரத்தில் சாராயத்தை ஊற்றி அதில்
ஐந்து வித விடங்களைக் கலந்து பால் என்று சொல்லி அய்யாவுக்கு அளித்தான்.
அறியாதவரா அய்யா? ஆயினும் இறைவனின் திருவுளப்படி எல்லாம் நடைபெற வேண்டும்
என்று சொல்லி அதைக் குடித்தார். ஆயினும் எதுவும் ஆகவில்லை. எனவே திகைத்த
சரடன் அய்யாவை சிறைக்குள் தள்ளக் கட்டளையிட்டான்.
கடுஞ்சிறைக்குள் அய்யா தள்ளப்பட்டார். கடுவாய் ஒன்றைப் பட்டினி போட்டு
அதையும் அய்யா இருந்த சிறையறையில் தள்ளினார்கள்..
கொடிய பசியோடு வந்த கடுவாயோ அய்யாவின் அருகில் சாந்தமாய் அமர்ந்தது..
இதைக் கண்ட நம்பூதிரி ஒருவன் சேவகனின் ஈட்டியை வாங்கி கடுவாயைக் குத்தி
அதை வெறியேற்றினான். வெறிகொண்ட கடுவாய் அந்த ஈட்டியைத் தன் வாயால்
கவ்விக் கொண்டது. நம்பூதிரி அதை பலங்கொண்டு இழுக்கத் தனது பிடியை
விட்டது. இதனால் தடுமாறி கீழே விழுந்த நம்பூதிரியின் மார்பில் அந்த ஈட்டி
இறங்கியது. இதனால் மரணமடைந்தான்.
இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. நம்பூதிரி ஒருவன் இதைப் போன்ற கொடியமரணம்
எய்துவது மன்னனுக்கு உகந்ததல்ல என்று அவையோர் மன்னனுக்கு உரைத்தனர்.
இதனால் மன்னன் பயந்து போனான். "நீர் பிறந்த சாணார் குலத்துக்காக மட்டும்
வேண்டுமானால் போராடிக் கொள்ளலாம். அவர்களுக்குரிய உரிமையை மட்டும்
தருகின்றேன். மீதமுள்ள சாதியரோடு நீர் பேசக்கூடாது" என்று ஓர் ஓலையில்
எழுதி அய்யாவுக்கு அனுப்பினான். அய்யாவோ "சான்றோர் குலத்தில் பிறந்ததால்
அவர்களுக்காக மட்டும் பிறந்தவனல்ல.. மானுடர் அனைவருக்காகவும் பிறந்தேன்.
அனைவருக்காகவும் சேதிகள் உரைப்பேன்" என்று பதிலுரைத்தார்.
இதனால் மன்னன் அய்யாவை விடுதலை செய்யத் திட்டமிட்டு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்டான். "நீ நினைத்தபடி அல்ல... எம் அதிகாரத் தந்தை இறைவன்
கட்டளைப் படியே சிறைக்கு வந்தோம்.. நீ குறித்த நாளில் அல்ல... இறைவன்
சொல்லும் நாளிலேயே வெளியே வருவோம்" என்றுரைத்து வெளியேறாமல் சிறைக்குள்
இருந்தார்.
மாசி மாதத்தில் இறைவன் குறித்த திருநாளில் அய்யா சிறையில் இருந்து
வெளியேறினார். அவரை சான்றோர்கள் வாகனத்தில் அமர்த்தி சாமித் தோப்புக்கு
அழைத்து வந்தனர். இந்நிகழ்வை இன்று அய்யா வழி மக்கள் கொண்டாடி
வருகின்றனர்.
சிறைவாசம் செய்து மீண்ட அய்யா செய்த சில அற்புதங்களைப் பற்றி
அய்யாவை நாடிவருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.
வைதீக இந்து சமயத்தில் பெருகியிருந்த மூடத்தனத்தில் இருந்து மக்களை மீட்க
வேண்டும் என்பதே அய்யாவின் நோக்கமாக இருந்தது. பேய்களுக்குப் பயந்தும்,
மந்திரவாதிகளுக்கு அஞ்சியும் இருந்த மக்களை அய்யா அழைத்தார். வைகுண்டர்
பிறந்ததால் பேய்கள் அழிந்துவிட்டன என்றும் மந்திரவாதிகளின் சக்தி ஒழிந்து
விட்டது என்றும் கூறினார். யாருக்கும் எந்த நிலைக்கும் அஞ்சாமல் இருக்க
வேண்டும். அடிமைத்தனம் வேண்டவே வேண்டாம். தன்மானம் காப்பதே தர்மம்
என்றெல்லாம் மொழிந்தார்..
தன்னைக் காண வந்தோரின் நோய்களை திருமண்ணும் நீரும் கொடுத்துக்
குணப்படுத்தினார். ஆடம்பரத் திருவிழாக்கள் வேண்டாம், அமைதியாக இறைவனை
வணங்கினாலே போதும் என்றுரைத்தார். கிராமத் தெய்வங்களை வணங்குதல்
வேண்டாம். திருமால் மட்டுமே தெய்வம் அவனையே வணங்குங்கள் என்று
அறிவுறுத்தினார்.
தூண்டிவிட்டது.. மேலும் கிறித்தவ மதமாற்றமும் நின்றுபோனதால்,
கிறித்தவர்களும் அய்யாவின் மேல் கோபத்தில் இருந்தனர். தன்னை இறைவனின்
அவதாரம் என்று சொல்லி மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக மன்னனிடம்
புகார் அளிக்கப் பட்டது. அய்யாவைப் பற்றிக் கேள்விப் பட்ட மன்னன்
சுவாதித் திருநாள் சுசீந்திரம் வந்து தங்கினான். தன் மந்திரியிடம்
அய்யாவைப் பற்றி விசாரித்தான். மந்திரியும், "நமக்கு வரி செலுத்தி
அடிமைத்தனம் செய்யும் சாணார் குலத்தில் வைகுண்டராய்த் தோன்றியதாய்
சொல்லிக் கொள்கின்றான். மெய்க்கொண்ட பூமியெல்லாம் வேறொருவர் ஆளாமல் தாமே
முடிசூடி ஆள்வோம் என்றும் சொல்லிக் கொள்கின்றான்" என்றுரைத்தான். ஒரு
ஜோசியனை வரவழைத்து தன்னிலும் பெரியவன் யாரெனக் கேட்டான் மன்னன் .
ஜோசியனும் "மண்ணுலகையெல்லாம் ஒரு குடையில் ஆள மகாவிட்ணு மானுடனாய்த்
தோன்றுவார். அவர் தோன்றும் காலமும் இதுவே" என்றான். "அவர் பிறக்கும்
குலம் யாது?" என மன்னன் வினவ "அது பெரிய வம்சாவழி கொண்ட குலமாக
இருக்கும்" என்று ஜோசியன் உரைத்துச் சென்றுவிட்டான்.
இதனால் மகாவிட்ணு போற்றுதற்குரிய நம்பூதிரி குலத்தில் பிறப்பார் என்றும்
சாணார் குலத்தில் மகாவிட்ணு அவதரிப்பது நடக்க இயலாத ஒன்று என்றும் முடிவு
செய்த மன்னன் வைகுண்டரை கைது செய்து அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அய்யாவைக் கைது செய்ய படைகள் புறப்பட்டன.. மக்கள் வெகுண்டெழுந்தனர்.
எல்லாம் இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த அய்யா பொறுமை காக்கும்படி தம்
மக்களுக்கு அறிவுறுத்தினார். "பொறுத்திருங்கள். உங்களை பூலோகம்
ஆளவைப்பேன். நன்மையைச் சொல்லி, நல்லவழி நடந்து சிரிக்கப் போவது எந்த சாதி
என்று பார்த்து விடலாம்" என்றுரைத்தார்.
படை வீரர்கள் வந்து அய்யாவைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளி,
துப்பாக்கியால் அடித்துக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர்.
வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் அய்யாவின் புன்னகை கண்டு அமைதியானது.
"சாணார் குலத்தில் சாமி அவதரிப்பானோ?" என்ற கேலியை உதாசீனம் செய்த அய்யா
இறைவனின் கட்டளைப் படி அமைதியாக சென்றார்.
தளபதி கௌடன் என்பவன் அய்யாவை மிகவும் கேலி செய்தான். அடித்தான். "அவன்
அடித்த அடியையெல்லாம் ஆபரணமாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என்று
அகிலத்திரட்டில் பாடுகின்றார் அய்யா.
கலிநீசன் என்று அய்யாவால் அழைக்கப் பட்ட திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன்
சுவாதித் திருநாளின் முன்னிலையில் அய்யா குற்றவாளியாக நிறுத்தப் பட்டார்.
அய்யா தனது சக்தியை எல்லாம் மறைத்து சாதாரண மனிதனாக அவன் முன்னால்
நின்றார். இவனை சோதனை செய்வோம் என்று எண்ணிய மன்னன் தன் கையில் இருப்பது
என்ன என்று கேட்க "இறைவனின் எண்ணம் எதுவோ அது இருக்கும்" என்று
பதிலுரைத்தார் அய்யா. இதனால் அவர் கள்ளசாமி என்று முடிவு செய்த மன்னன்
ஆத்திரமுற்றான். அய்யாவை சரடன் என்னும் கொடிய தளபதியிடம் அழைத்துச்
செல்லக் கட்டளையிட்டான்.
சரடனும் அய்யாவை நிந்தித்து, ஓர் பாத்திரத்தில் சாராயத்தை ஊற்றி அதில்
ஐந்து வித விடங்களைக் கலந்து பால் என்று சொல்லி அய்யாவுக்கு அளித்தான்.
அறியாதவரா அய்யா? ஆயினும் இறைவனின் திருவுளப்படி எல்லாம் நடைபெற வேண்டும்
என்று சொல்லி அதைக் குடித்தார். ஆயினும் எதுவும் ஆகவில்லை. எனவே திகைத்த
சரடன் அய்யாவை சிறைக்குள் தள்ளக் கட்டளையிட்டான்.
கடுஞ்சிறைக்குள் அய்யா தள்ளப்பட்டார். கடுவாய் ஒன்றைப் பட்டினி போட்டு
அதையும் அய்யா இருந்த சிறையறையில் தள்ளினார்கள்..
கொடிய பசியோடு வந்த கடுவாயோ அய்யாவின் அருகில் சாந்தமாய் அமர்ந்தது..
இதைக் கண்ட நம்பூதிரி ஒருவன் சேவகனின் ஈட்டியை வாங்கி கடுவாயைக் குத்தி
அதை வெறியேற்றினான். வெறிகொண்ட கடுவாய் அந்த ஈட்டியைத் தன் வாயால்
கவ்விக் கொண்டது. நம்பூதிரி அதை பலங்கொண்டு இழுக்கத் தனது பிடியை
விட்டது. இதனால் தடுமாறி கீழே விழுந்த நம்பூதிரியின் மார்பில் அந்த ஈட்டி
இறங்கியது. இதனால் மரணமடைந்தான்.
இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. நம்பூதிரி ஒருவன் இதைப் போன்ற கொடியமரணம்
எய்துவது மன்னனுக்கு உகந்ததல்ல என்று அவையோர் மன்னனுக்கு உரைத்தனர்.
இதனால் மன்னன் பயந்து போனான். "நீர் பிறந்த சாணார் குலத்துக்காக மட்டும்
வேண்டுமானால் போராடிக் கொள்ளலாம். அவர்களுக்குரிய உரிமையை மட்டும்
தருகின்றேன். மீதமுள்ள சாதியரோடு நீர் பேசக்கூடாது" என்று ஓர் ஓலையில்
எழுதி அய்யாவுக்கு அனுப்பினான். அய்யாவோ "சான்றோர் குலத்தில் பிறந்ததால்
அவர்களுக்காக மட்டும் பிறந்தவனல்ல.. மானுடர் அனைவருக்காகவும் பிறந்தேன்.
அனைவருக்காகவும் சேதிகள் உரைப்பேன்" என்று பதிலுரைத்தார்.
இதனால் மன்னன் அய்யாவை விடுதலை செய்யத் திட்டமிட்டு அவரை விடுதலை செய்ய
உத்தரவிட்டான். "நீ நினைத்தபடி அல்ல... எம் அதிகாரத் தந்தை இறைவன்
கட்டளைப் படியே சிறைக்கு வந்தோம்.. நீ குறித்த நாளில் அல்ல... இறைவன்
சொல்லும் நாளிலேயே வெளியே வருவோம்" என்றுரைத்து வெளியேறாமல் சிறைக்குள்
இருந்தார்.
வெளியேறினார். அவரை சான்றோர்கள் வாகனத்தில் அமர்த்தி சாமித் தோப்புக்கு
அழைத்து வந்தனர். இந்நிகழ்வை இன்று அய்யா வழி மக்கள் கொண்டாடி
வருகின்றனர்.
சிறைவாசம் செய்து மீண்ட அய்யா செய்த சில அற்புதங்களைப் பற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக