|
அகிலத்திரட்டு அம்மானை
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய் வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள் சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள் இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில் திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல் காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில் பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள் விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி இப்போ நமக்கு எழுத்தின் படியாலே நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல் கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன் மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20 மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும் தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில் நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில் சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார் நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய் ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில் பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே கற்றைக் குழலார் கனமான தேவியரை ஏக மறிய இசைந்த மணம்புரிந்து வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத் தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச் சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள் ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே 40 இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம் என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும் மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல் கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப் பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள் நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத் தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் 60 ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத் தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப் பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச் செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக் கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும் வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும் மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும் கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து வாட விடாமல் வல்லபல தீனதுவும் மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே காளடம் மானம் கடிய சிறப்புடனே அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து 80 ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன் நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக் காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும் செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த் திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார் இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும் விருந்து மருந்தி வேதா கமம்போலே பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து பூமடந்தையம்மை திருக்கல்யாணம் இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும் ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் 100 பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச் சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல் வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய் தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும் கண்ணான மாயன் கையார வேகொடுத்து நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப் பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும் நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத் தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள் இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும் விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை 120 உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம் கொண்ட அடிமை குலச்சாதி யானோரை அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச் சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள் காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம் உற்று மனதில் உபாய மதுவாக வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும் தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை அய்யா வைகுண்டம் எழுந்தருளல் இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம் ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார் ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர் தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம் கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் 140 மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில் தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன் பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால் வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம் என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல் விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர் என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம் குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார் குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும் ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும் வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர் ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே 160 இனியா னுமது இலங்கும் பதியில்வர முனியா னவற்கு முற்ற விடையருளும் ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே வேண்டா முலகம் மேலுலக மேயழையும் அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும் தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால் என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே மன்று தனையாளும் மாயத் திருமாலும் வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப் பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும் கண்ணு மகனைக் கடிய விமானமதில் ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச் சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில் வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும் தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார் சற்குரு வான சடாமுனி யிங்குவந்து மெய்க்குரு வான வீர விசயனுக்குச் 180 நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக் காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப் பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய் இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத் திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் 200 சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில் பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில் வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில் மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக் கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ விமான மதிலேறி மேலோக மீதில்வரத் தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத் தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார் வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும் நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப் பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த 220 நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம் இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே ஆவி மகனை அன்போ டுறவணைத்துத் தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத் தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும் அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும் சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும் தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம் சரசு பதிமாதும் தாயீசொரி யாளும் பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார் கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும் அகிலமது அறிய ஆனார்வை குண்டமென எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன் முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல் ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் 240 பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில் திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில் தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில் சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர் பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக் குதறி மலைந்து கொடுவான மாமுகடும் கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத் தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில் முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய் அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப் பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில் மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும் சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும் இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் 260 சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார் பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும் அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக் மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப் சான்றோர் கோவில் அமைத்தல் பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள் சாமியுட தேவி சுற்றமட மாதர்களும் அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று மாதத் திருநாளும் வாரமற வாதபடி நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச் சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும் சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே துயரமதாய் வாடி சிவனே செயலெனவே 280 இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல் நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார் இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும் முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும் மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக் கூண்ட மணியே கோகுலமே கற்பகமே ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே என்றன் மணியே என்னாத ஓவியமே உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில் இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத் களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத் தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும் இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப் பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார் அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் 300 பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக் கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள் தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும் புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக் கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய ஆடிக் களித்து யாம மிகக்கூறி நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன் ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும் கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன் அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால் இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும் அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும் இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் 320 ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல் தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால் பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும் நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு கலைமுனி, ஞானமுனி சாட்சியம் கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும் அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ எறும்புகடை யானைமுதல் பேதா பேதம் எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால் உலகமதி லாருளதோ வுடைய மாலே செறும்பொருளா முமதுமக னங்கே வந்து செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும் தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும் தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார் தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன் உப்பரிகை மீதிருந்து அரசே யாள உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும் மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம் நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால் நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம் நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் 340 காங்கரிது எங்களுட கருணை நாதா கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம் ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும் ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப் பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும் பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார். நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும் நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து) ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக் கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும் கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர் டுண்டுபல மேளமொடு தாளத் தோடு உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார் சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச் சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித் தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர் கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக் குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற மன்றலணி மாயவரு மீசர் தானும் வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று இளங்குருமா னானகுரு வைந்த ராசர் இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப் பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப் பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப் பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன் பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும் தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற மறையவரு மீசுரரும் வரமே யீந்தார் அய்யா சான்றோர்க்கு இரங்கல் ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் 360 கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச் சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம் ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன் நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும் வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார் ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம் வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய் திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக் குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார் கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம் மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம் பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய் கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் 380 வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும் பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும் ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார் இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும் கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும் மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம் உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய் முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல் கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள் சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே ஆணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் 400 குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும் பொய் வேசம் பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன் ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய் முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில் தவம்போ லிருந்து தானாளு குண்டமதில் ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல் நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன் மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய் குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் 420 முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான் செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான் கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான் பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான் தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான் மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான் கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான் மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான் இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள் செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம் தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும் இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய் நல்லவை முழித்தல் சிவனு முமையாளும் செய்யத் திருமாலும் தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம் நான்முகனும் வேத நல்ல மறையோரும் தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக் கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் 440 வானமது குழவி மண்பூமி யம்மியெனத் தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும் உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும் அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும் மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும் தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும் பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி நல்ல மகனே நாடுந் தவத்தோனே செல்ல மகனே திருபெற்ற கண்மணியே உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும் சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும் ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும் பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும் யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே 460 நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர் முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே களித்தே யிருந்த கருத்தின் படியாலே பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும் அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும் புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும் பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும் அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார் எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார் தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும் நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார் நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால் வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச் சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும் நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும் விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும் வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் 480 ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால் ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச் சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார் விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக் கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக் கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக் நடுத்தீர்ப்பு குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச் சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள் ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத் தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப் புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக் காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் 500 ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய் கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம் நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத் தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர் பண்டார மென்று பாரறிய வந்தவரை அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால் கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம் சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும் தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம் முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன 520 சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில் ஆவி யறிய அனுப்போலும் நன்மையது செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும் எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச் சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன் நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப் பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும் உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும் மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே 540 தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத் தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால் வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள் மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே நாடதிக மான நல்லபட்டு நீராளம் தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப் பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும் மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம் அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப் பொன்னப்ப நாரணரே பெற்றவரே வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச் சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும் பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள் ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப் போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் 560 தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே 580 மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல் இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில் சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால் தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத் திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் 600 எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன் நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக் கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச் சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால் இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில் அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும் தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப் பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில் அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும் பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன் சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர் ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித் தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத் தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம் ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி 620 நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும் அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே பாரேழு தேசம் பண்பாய் முறையமிட முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப் பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும் மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை வீறுடனே நல்ல வேலாயுத மெனவே எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச் சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக் கொல்லுவே னென்று கூண்டப் படையோடு சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன் தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு 640 மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய் என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால் உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய் விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும் சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக் கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக் கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன் சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள் புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல் என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன் அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய் துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் 660 அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில் ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய் மகவா யுனக்கு மாய வுருவெடுத்து உகமே ழறிய உதித்து வளருகையில் பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும் உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும் தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால் சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார் ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட ஏற்ற பேரான இரணிய நமாவெனவே சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன் வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் 680 சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய் வல்லப் பொருளான மாய அரியோனும் எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி அங்கெங் குமாகி அளவுக் களவாகி நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப் பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான் தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக் கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும் தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால் குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச் சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் 700 கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும் கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும் புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும் மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால் கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான் என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து அன்றே கிறதா யுகமு மழித்துமிகப் பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும் மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய் மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும் சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் 720 கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும் நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப் பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால் பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச் சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச் சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப் பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும் அல்லாதே போனால் அலக்கழி வாகுமென எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன் காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம் இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் 740 ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய் அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும் மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும் கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள் முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால் அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள் அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால் உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும் அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ 760 மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ என்றாயே நீயும் இருவரையு மப்போது அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத் தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல் படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும் நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன் பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான் நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப் பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து என்கை யினாலே எடுத்து வொருபாணம் சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் 780 உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய் இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன் உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச் சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய் மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன் உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய் துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப் பவரா யுனக்குப் பக்கத் துணையாக ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து 800 உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து உற்ற திரேதா யுகமழித் துன்றனையும் சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன் பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார் அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப் பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன் சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன் அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல் இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய் மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே உன்னால் குதித்து உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் 820 பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக் கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே கலி முடிவு முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும் மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும் எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப் பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம் மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல் ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும் தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும் அந்திர மதான அன்னீத வஞ்சனையும் மாய்கை பலதும் வளக்கோர வாரமதும் சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம் என்னோடு கூட யானு மதுகூட வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும் பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக 840 ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித் தீயிரத்த மான தீரா தருநரகில் சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப் பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம் தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின் தர்ம யுகம் உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக கற்பு நெறியானக் கடிய பலவகையும் நல்லோர்க ளான நாடு மனுவோரும் நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும் கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில் நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம் தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல் நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் 860 எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால் வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச் செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும் பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும் கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும் நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும் சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும் தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும் கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல் தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம் முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும் களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச் செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய் கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் 880 நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும் பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும் தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய் நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம் ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும் காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார் பட்சி பறவை பலசீவ செந்துகட்கும் அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல் பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல் ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம் சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார் நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் 900 அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார் அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல் நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார் வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத் தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார் வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு மானுவ தர்ம வரம்பு தவறாமல் நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார் பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார் குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள் கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் 920 சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப் பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார் வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச் செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு நாதக் குருவான நாரா யணமணிக்கு சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும் தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும் நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும் ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் 940 இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச் செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே சரசு பதிமாது தண்டரள சுந்தரியும் விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும் வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும் ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும் வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும் இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள் முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும் சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார் போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார் சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள் பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால் ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன் பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக் கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன் கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் 960 பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும் சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில் வருவே னதுமட்டும் வடவா முகமதிலே குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள் இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான் அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார் பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத் திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து காரணம தாகக் களிகூர்ந் தினிதாக வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும் கைகண்ட நல்ல கலியாண முமுகித்து மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப் பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப் 980 பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன் கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப் பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய் தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும் மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும் நான்முகனும் வேத நல்ல மறையோரும் வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன் நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள் தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள் மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க போவோ மெனவே பெரியவை குண்டரையும் கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச் சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத் தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் 1000 கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக் கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர வாரி சங்கூத வாயு மலர்தூவ நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும் கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு நேராக வந்து நெடியோன் பதிதவிலே சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும் சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும் மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும் குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச் சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம் யாம முறையாய் அங்கே குதித்திடுமாம் என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம் பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் 1020 நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல் குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார் பட்டாபிஷேகம் இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில் செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும் ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில் மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல் விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில் ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில் ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே அய்யா அருள்வாக்கு ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார் மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் 1040 கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம் உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால் தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர் என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன் பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித் தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர் மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு 1060 ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல் நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார் மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல் பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார் தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும் மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும் எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும் செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும் சிங்கார மாகத் தேன்போல் மரைவீச சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக் கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக் கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து பாவித்து நித்தம் பரமவை குண்டரையும் சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே 1080 கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும் ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும் நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச் சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள் கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார் ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம் பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார் தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும் பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர் நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார் ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம் கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும் தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம் மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் 1100 பருதியு மதியெனப் பவந்து சேவனர் கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர் அருதியு மலர்மகள் அணிந்து பூவினர் கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர் பொன்முக வருளது பொதுமி யாவியே அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு இன்முக மதிலு மிருந்து லாவியே பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர் முதமுக வானவர் மூன்றென வொன்றினர் சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர் உதவென மனமு முவந்து லாவியே நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர் சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ பூமாது வானபக வதியும் வாழ பொன்மாது சரசுபதி புரிந்து வாழ நாமாது வானபூ மடந்தை வாழ நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ போர்மாது வானமா காளி வாழ பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ சிவவைந்த ராசருமே சிறந்து வாழ 1120 மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி மாயனுட முகம்நோக்கி மாது தானும் தீதகலும் நாயகமே சிறந்த மாலே தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும் நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர் ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும் இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும் பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப் பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும் எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும் நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம் ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர் பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும் பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின் பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன் சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக் கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக் கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும் வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ மாதேநீ கேளுயீ ரேளு பூமி மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள் சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச் செகவீர சாலமத னேக முண்டு பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும் பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர் வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம் இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம் மனுவோரு முனிவோரும் வான லோக மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார் இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம் பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் 1140 மாயனுரை மனமதிலே மாது கேட்டு மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள் தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத் திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே நாயநெறி காணாத அடிமை போல நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி ஆயருமை நாயடியா ளின்று கண்டேன் அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே என்றாதி யிருகையால் மாதை யாவிப் புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப் பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை வையகத்து மனுவோர்க ளறிய மாயன் தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன் நாதனருள் மறவாத இராம கிருஷ்ண நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச் செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே வாறான கதைவகுத்த நாதன் வாழ வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ வீறான தெய்வசத்தி மடவார் வாழ வீரமுக லட்சமியும் விரைந்து வாழ நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர் நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர் ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம் திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத் திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர் எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் 1160 அய்யா உண்டு |
திங்கள், 29 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
வியாழன், 25 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
|
அகிலத்திரட்டு அம்மானை
காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன் சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவசங் காராதமியே எங்களுட பவமே பவமே பலநாளுஞ் செய்த பவம றுத்தன் அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய் சிவசிவசிவசிவா அரகரா அரகரா அலையிலே துயில் ஆதிவராகவா ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள் செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில் முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின் உற்றதெச்சண மீதில் இருந்துதான் உலகில் சோதனை பார்த்தவர் வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே திருமொழி சீதை யாட்குச் சிவதலம் புகழ எங்கும் ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி உகபர சோதனைகள் பார்த்துத் திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோ லேந்தி ஒருமொழி யதற்குள் ளாண்ட உவமையை உரைக்க லுற்றார். அகிலம் 1 1. நூல் சுருக்கம் சிவமே சிவமே சிவமே சிவமணியே தவமே தவமே தவமே தவப்பொருளே சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில் பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில் போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய் தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும் செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும் முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப் பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும் தீசாதி யான துரியோதனன் முதலாய் அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில் 20 வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய் அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி நறுகரத் தோனான நாராயண மூர்த்தி உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத் திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய மாய னருள்புரிய மாதும் அருள்புரிய பூமாது நாமாது புவிமாது போர்மாது நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய சரசுபதி மாதே தண்டரள மாமணியே அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே பாரேழு மளந்த பரமே சொரித்தாயே பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச் சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில் பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் 40 இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும் மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும் தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக் கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும் ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும் மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக் கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும் தொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும் பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள் கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும் கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும் சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும் மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத் தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும் அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும் வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி எல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச் சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும் நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும் 60 மேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும் இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும் முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக் காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே பேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும் ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும் சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும் நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும் பத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி சத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து படுத்தின பாட்டையெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து உடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத் தான்வருத்தித் தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப் பாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு நாலு பிறவி நானிலத்தி லேபிறந்து பாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி நல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப் 80 பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து வானம் இடியால் மலைக ளிளகிடவும் கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும் தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும் ஒக்கவே நாதன் உரைக்கிறா ரன்போரே அவையடக்கம் அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள்முன்னே மெய்யா யெழுதி விதிப்பேனா னென்பதெல்லாம் ஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும் சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன குயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ மயிலாடக் கண்டு வான்கோழி யாடினதென மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன் நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான் மேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும் எம்பிரா னான இறையோ னருள்புரிய தம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன் எழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால் பழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க தெய்வம் பராவல் ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத் 100 தோச மகலச் சூழாமல் வல்வினைகள் காலக் கிரகம் காமசஞ்சல மானதுவும் வாலைக் குருவே வாரா மலேகாரும் காரு மடியேன் கௌவை வினைதீர வாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக் கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன் வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார். அடியெடுத்தருளல் வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும் தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில் கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில் தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில் நாதனென் னருகில் நலமாக வந்திருந்து சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து 120 தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள் மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய் அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே நூற்பயன் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப் பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர் கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார் மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில் என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல் திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை தெச்சணா புதுமை நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில் பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில் 140 நன்றான மாசி நாளான நாளையிலே சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில் மூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில் வந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே அகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே தோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே நீச வினைதீர நீராடுந் தெச்சணமே மாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே பாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே ஆனைப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே 160 சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே தெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது அச்சமில்லாப் பூம அடவுகே ளம்மானை கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர் பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான தெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம் சீமையின் இயல்பு புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட அன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும் கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும் எந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும் எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும் பொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற நந்தா வனம்பூத்து நகரி மணம்வீச செந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச அரகரா வென்று அபயமிடு மொலியும் சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும் முடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும் 180 மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும் முத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும் மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும் சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும் குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும் சங்கீத மேளம் தானோது மாலயமும் மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும் காரண வேதக் கல்விமொழி ஆலயமும் வாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும் மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும் கூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும் பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும் அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும் சொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும் சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும் தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும் கோவிந்தா வென்று குருபூசை செய்வாரும் நாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும் மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம் ஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம் 200 நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும் கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும் எப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல் தப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை காமனை எரித்த ஈசன் கழலிணை மறவா வண்ணம் பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரி யான சீமையின் குணமுஞ் சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில் நேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்து வாரே தர்மநீதம் ஆதிப் பொருளை அனுதினமுந் தானோதி சோதி யுடநீதம் சொல்லுவே னம்மானை தெய்ன மனுநீதம் தேசாதி ராசநீதம் மெய்யருந்தும் நீதம் விளம்புவே னம்மானை ஆயிரத்து எட்டு ஆனதிருப் பதிக்கும் வாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது கோயில் கிணறு குளங்கரைக ளானதையும் தேய்வு வராதே சுற்றுமதில் கட்டிடுவார் எளியோர் வலியோர் என்றெண்ணிமிகப் பாராமல் களிகூர நன்றாய்க் கண்டவழக் கேயுரைப்பார் அன்ன மடம்வைத்து ஆகங் களிகூர எந்நேரம் பிச்சை இடுவா ரெளியோர்க்குப் 220 பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்க் களிப்பாரும் எந்த இரவும் இருந்துபிச்சை யீவாரும் ஆறி லொருகடமை அசையாமல் தான்வேண்டி தேறியே சோழன் சீமையர சாண்டிருந்தான் சிவாயநம வென்ற சிவவேத மல்லாது கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள் ஆறி லொருகடமை அதுதரவே மாட்டோமென்று மாறொருவர் சொன்னால் மன்னன்மறுத் தேகேளான் பன்னிரண் டாண்டு பரிவா யிறையிறுத்தால் பின்னிரண் டாண்டு பொறுத்திறை தாருமென்பான் இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை யாண்டிருந்தான் அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே மெய்யறிவு கொண்ட மேலாம்பதத் தெளிவோன் தெய்வத் திருநிலைமை செப்புவே னம்மானை இவ்வகை யாகச் சோழன் இருந்து ராச்சியத் தையாள கவ்வைக ளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில் செவ்வகைத் திருவே யான திருவுளக் கிருபை கூர்ந்து தெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்து வாரே. தெய்வ நீதம் வாரம தில்லாமல் மன்னன் அதிசோழன் 240 நீதமாய்ப் பூமி நிறுத்தியர சாளுகையில் கண்டு வேதாவும் கமலத் திருமகளும் நன்று தெய்வாரும் நாரா யணருமெச்சி அன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி சென்று சிவனார் திருப்பாதந் தெண்டனிட்டுச் சாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே ஏகா பரனே எங்கும் நிறைந்தோனே மூலப் பொருளே முதற்பொருளே காரணரே சாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே நாரணரும் வேதா நாடிப் பொரும்போரில் காரணரே நீரும் கனல்கம்ப மானோரே ஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக் கோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே ஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே கோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே தானே யிருக்கும் தவமே தவப்பொருளே ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா வாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத் தேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண் 260 ஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே மாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும் சேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம் ஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே கன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார் நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க வல்லவனே பூமா தேவி தனைவருத்தும் வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய கருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும் வாசி யதுபூவாய் வழங்க வரவழையும் தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய் திருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது நித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும் நினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற எனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார் 280 பன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும் அன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும் கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும் வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும் இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும் பட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும் பசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும் கசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும் சாத்திர வேதம் சமயம் வழுகாமல் சூத்திர மாகத் துல்வப் படுத்திடவும் மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று இனிதாக நாளும் இறவா திருந்திடவும் சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல் இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல் தான தவங்கள் தப்பிமிகப் போகாமல் வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும் ஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம் மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும் இப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற சொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார் 300 அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே பெண்கள் நிலைமை தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில் நெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை கணவன் மொழியக் கலவுமொழி பேசாத துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை கற்கதவு போலே கற்பு மனக்கதவு தொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும் முன்பான சோதி முறைபோ லுறவாடிப் போற்றியே நித்தம் பூசித் தவள்மனதில் சாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள் அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக் கரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள் துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும் மயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து முகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது அகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப் பகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள் 320 தவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல் இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே வனியான சாதி வளமைகே ளம்மானை சாதி வளமை சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும் உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல் தங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல் திங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார் செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல் அலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம் தான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல் வான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல் கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம் செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது வையம்வழக்கு வாரா தேயிருந்தார் அடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல் குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால் பேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார் 340 இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை இப்படித் தெய்வ இராச்சிய நீதமும் மற்படித் தேச மனுவுட நீதமும் நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக் கற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர் கயிலை வளமை முத்தான சீமை மூன்று நீதத்தோடு பத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே நாலான வேதம் நல்ல கலியுகமாய் மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க பொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும் கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும் வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும் சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும் நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும் சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் 360 ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும் வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும் ஆரு மறிந்து அளவிடக் கூடாத பாரு படைத்த பரமே சுரனாரை விசுவாச மேலோர் விமல னடிவணங்கி வசுவாசு தேவன் வந்து மிகவணங்கி மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க பூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர் நாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க தலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை ஆறு செஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக் கூறக் கூறக் குறைவில்லை காணுமே கொன்றை சூடும் அண்டர் திருப்பதம் வாறு வாறு வகுக்க முடிந்திடா மகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம் வேறு வேறு விளம்பவே கேளுங்கோ மெய்யுள் ளோராகிய வேத அன்பரே அகில வளமை கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது 380 அகில வளமை அருளக்கே ளம்மானை தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள் ஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள் பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள் நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத் தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக் கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப் போவது என்ன புதுமை எனக்கறிய தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள் பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது என்றும் இருக்க இறவா திருப்போனே ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத நாதியாய் நின்ற நாரா யணப்பொருளே தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே உமக்கு எதிரி உலகமதி லுண்டோகாண் தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் 400 உகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க அகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள் என்று திருவும் இதுவுரைக்க மாயவரும் நன்று நன்றென்று நாரா யணருரைப்பார் நீடிய யுகம் சக்தி சிவமும் தானுதித்த காலமதில் எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும் ருத்திரர் மயே சுரருதித்த நாளதிலும் பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும் வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும் ஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும் ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின் ஈதுதித்த காலம் இராச்சியமொன் றுண்டுகண்டாய் அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து இவ்வுகத்து நாமம் என்னவிடு வோமென்று மாலும் பிரமாவும் மாயா திருப்போனும் ஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து நீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு தேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில் இவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி 420 எல்லோருங் கூடி இதமித்தா ரம்மானை அல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில் தில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே அறந்தா னறியா அநியாயக் கேடனுமாய் பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு அண்டம் அமைய அவன்பிறந்தா னம்மானை முகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட நகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன் பவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன் குறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய் கயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே அகிலங் கிடுகிடெங்கும் அவனெழுந்தா லம்மானை இப்படியே குறோணி என்றவொரு அசுரன் முப்படியே நீயே யுகத்தி லிருந்தான்காண் இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து அருந்தும் பசியால் அவனெழுந்து பார்ப்பளவில் பாருகங் காணான் பலபேருடல் காணான் 440 வாருதி நீரை வாரி விழுங்கினன்காண் கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல் குடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில் கயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி ஆவி யெடுத்து அவன்விழுங்கு மப்போது தாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும் மாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து தூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத் தவசு இருந்தார்காண் தாமோ தரனாரும் தவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே ஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும் பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே கயிலை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை அகில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன் பளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிமுதல் பண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவே 460 என்றுங் கயிலை இலங்கி இருந்திடவும் முண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும் துண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும் கண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன் என்று திருமால் எடுத்துரைக்க வேயீசர் மன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார் கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத் தூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி விட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில் கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப் பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய குண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான் அப்படியே குறோணி அவனுதிர மானதுவும் இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு வந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும் உண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள் 480 பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக் கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண் என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும் குன்றுபோல் வந்த கொடிய படுபாவி குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம் நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார் வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர் துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப் பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை அந்தக் குறோணி அவனுதிர மானதையும் கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி உதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச் சதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை சதுரயுகம் - குண்டோமசாலி பாடு அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக் குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப் 500 பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில் வந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை முந்து பிறந்த முழுமோச மானதிலும் மந்து முகமாய் மாபாவி தன்னுயரம் நானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள் முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே உடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி படைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான் அட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான் மட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால் அன்னுகத் திலுள்ள அசுரக் குலங்களையும் தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோ லுருண்டிடுவான் இப்படியே நாளும் இவன்குலங்க ளானதெல்லாம் அப்படியே தின்று அவன்பசிக ளாற்றாமல் அய்யையோ வென்று அலறினன்கா ணம்மானை மெய்யை யனான விறுமா அதுகேட்டுச் சிவனைத் தொழுது செப்புவா ரம்மானை தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே எவனோ ஒருத்தன் இட்டசத்த மானதிலே தவலோக மெல்லாம் தானலைவ தேதெனவே 520 மாய னதுகேட்க வகுப்பா ரங்கீசுரரும் ஆயனே நீயும் அறியலையோ ஞாயமது குண்டோ மசாலி கொடியமா பாவியனாய்ப் பண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய்ப் பிறந்தா னவனும் பேருதிரந் தன்கிளையாய் இறந்தா ரவர்கள் இரையா யவன்தனக்கு ஆன பசிகள் ஆற்றாம லேயவனும் வானமது அலைய வாய்விட்டான் கண்டாயே என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும் அன்று மகாமாலும் அக்குண்டோ மசாலினுக்கு இரையாகத் தேவர்களை ஏற்றநாங் கிலாக்கி வரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி வாயுவைத் தோணி வருணன் தனைமிதப்பாய்த் தேய மதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி தேடரிய மாயன் திருவோணி தானேறி மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவரக் காவாலி மாயன் கன்னியிலே தூண்டலிடச் சதுர யுகமாளும் சண்டித்தடி மோடன் எதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி 540 நாடிப் பசிதீர நல்லஇரை யாகுமென்று ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டல்தனை தூண்டில் விழுங்க சுரண்டி மிகக்கொளுவி மாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே பாவி மடிய பரமே சுரனாரும் தாவிச் சலத்தால் சதுர யுகமழித்தார் தேவர்கள் வேண்டுகோள் சதுர யுகமழிய தானவர்க ளெல்லோரும் மதுர மொழியீசன் மலரடியைத் தான்பூண்டு தேவர் மறையோர் தெய்வேந் திரன்முதலாய் மூவர்களும் வந்து முதலோ னடிபணிந்து பரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும் வரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே அந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை இந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே பிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி வரந்தா ருமென்று வாளா யுதத்தோடே வலுவும் பலமும் வாய்த்தசூ ரப்படையும் கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும் கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து 560 இருந்து பொறுக்க இராச்சியமொன் றுண்டாக்கும் வருந்தி மகாதேவர் மலரோ னடிவணங்க ஆதி சிவனும் அதிகசந் தோசமதாய் வேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும் நெடிய யுகம் தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பாடு மாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும் நாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி முன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண் டாக்கிவைத்துப் பின்னே படைப்புப் பிரம்மா வுருப்படைக்க சிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க உபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க முண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத் தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி அப்போது மாயன் ஆதி யடிவணங்கி இப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும் என்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க வன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார் திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும் பிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால் மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள் ஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார் 580 அண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில் தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி இந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம் என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து அன்று பிறந்த அசுரர்களைத் தானேவி போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல் வாறாரே சூரர் வாய்களிரு காதவழி சூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும் மூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும் கண்களொருநூறு வெண்டரள மிருகலமே துங்கணங் களாகச் சூர ரடந்தேறி கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள் அலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில் கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான் ஏனடா என்னை இருந்த தவசழித்து வீணடா செய்தாய் விழலா யறமோடா என்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும் உன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப் 600 பங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து இந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து உந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன் வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான் உடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர் கடல்மே லெறிந்தார் கர்ம விதிப்படியால் அந்த முனியும் அரனா ரருளாலே மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான் சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து உருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை மோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள் ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர் கருதிய சூரர் கயிலை மேவியே பருதி சூடும் பரமனைப் போற்றியே வருதி கேட்டு வருந்தினர் சூரரே சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும் பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் 620 ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம் வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித் தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும் நேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார் வரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச் சிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார் தீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான் மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே ஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான் அம்புவியி லுள்ள அஸ்திரங்கள் வாளாலும் தம்பிரா னானாலும் தாண்டமுடி யாதவரம் வானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள தானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும் கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் மல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும் ஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும் தவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தான் உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து 640 நீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப் பாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார் விடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது மடைப்பாவி யான மல்லோசி வாகனனும் தில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும் வல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம் வந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை அந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில் உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து செதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம் இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும் தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே சூரப் படைகள் தொழுது அடிபணிந்து பாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார் ஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப் பாளையங் களாகப் பணிந்திருந்தா ரம்மானை சூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு பாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை 660 இப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில் முப்படியே சூரர் ஊழி விதிப்படியால் இறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி உறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல் தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார் மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி நம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே கெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை சூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல் வீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக் காவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும் கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும் மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும் மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும் அலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம் தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம் அரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே 680 என்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள் மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால் அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே முன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு வன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய் வளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர் மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச் சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன் அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச் சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும் பம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச் சூர ரிருவருட சிரசை மிகஅறுத்து வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி மலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார் அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம் செவ்வாக நின்று செப்பினா ரீசருடன் கிரேதா யுகம் இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று 700 மன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து சொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே ஓரிரண்டு துண்டம் உகமாய்ப் பிறந்தழிந்து ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே நூல்முறையைப் பார்க்கில் நெடிய யுகங்கழிந்தால் மேலுகந்தா னிங்கே மிகுத்தகிரே தாயுகந்தான் இருக்குதுகா ணென்று ஈச ருரைத்திடவே மருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி துண்டமொன்றை ரண்டாய்த் தூயவனார் தாம்வகிர்ந்து மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி சிங்கமுகச் சூரனெனும் திறல்சூர பற்பனெனும் வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்கா ணம்மானை சூர னுடசிரசு தொளாயிரத்து நூறதுவும் போரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும் சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி ஊரேநீ போவென்று உற்ற விடைகொடுத்தார் விடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே திடமாகப் பூமி செலுத்தியர சாளுகையில் வரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி 720 திறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல் அன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான் சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன் பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில் ஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார் ஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான் பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும் எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம் மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான் சூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து பாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச் சிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது பவமான சூர பற்பன் பிறந்தனனாம் இறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும் சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள் வீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி 740 உன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும் உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும் இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும் கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும் தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும் ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள் முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும் பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான் தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத் தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார் வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல் பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள் கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும் அகில முழுதும் அடக்கியர சாண்டனனே அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே 760 முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும் மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம் ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள் வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத் தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார் வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும் தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும் அஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும் தஞ்சமிட வானோர் தையல்தெய்வக் கன்னிமுதல் கயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல் அகில முழுதும் அடக்கி வரங்கொடுத்தோம் என்று வேதாவும் இவையுரைக்க மாலோனும் நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப் பேயனுக் கென்னுடைய பிறப்பைக் கொடுத்தல்லவோ தேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான் என்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர் 780 இன்றந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே கந்தன் அவதாரம் ஆறு முகமாய் ஆய னளவிடவே கூறிடவே சத்திதனைக் கொண்டார்வே லாயுதமாய் நல்ல சிவனாரை நந்தீ சுரராக்கி வல்ல பெலமுள்ள வாய்த்ததிக் கெட்டிலுள்ளப் பாலரையும் வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள் வாலமுள்ள சன்னாசி மாரைப் பெரும்படையாய்க் கந்தனெனும் நாமம் கனத்தசடை யாண்டியுமாய்க் கொந்துகொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து வேலு மிகப்பிடித்து வெண்ணீறு மேதரித்து நாலுரண்டு சிரசில் நல்லருத்தி ராச்சமிட்டுப் பத்துரண்டு காதில் பசும்பொன்னொவ்வாச் செம்பணிந்து முத்திரிக ளிட்டுக்கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டுச் சன்னாசி போலே தானடந் தெம்பெருமான் நன்னாதா னாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி வந்து ஒருமலைமேல் வாய்த்தகூ டாரமிட்டுச் சந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு வீரவாகுதேவர் தாது சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப் பாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட சிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் 800 திறவா னாயாகச் சீமையர சாளுமென்று இப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள் அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும் சண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே அண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும் கந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம் அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான் சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க ஏராத பாவி இகழ்த்தினா னப்போது தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப் பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான் ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள் பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும் நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் 820 நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச் சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன் என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும் கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான் அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான் நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக் கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார் தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும் மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து உன்னுடைய சேனை உற்றபடை யழித்து நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார் துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண் என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் 840 அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான் ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள் தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு சூரன்பாடு சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக் காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார் கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார் வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை சூர னவன்கண்டு தோசப் படையணிந்து மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான் கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப் பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார் வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே தம்பி தலைவன் தளமு மிழவாதே பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே 860 அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது நன்மை யதுகூட நாடுமே யல்லாது தின்மை வராது தேவரையும் விட்டுவிடு தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப் புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான் இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப் பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப் பண்டார மென்ற படைக்கார னும்நீயோ என்னுடைய சேனை எல்லாமிக அழித்து என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப் பண்டார னோடே படையெடுத்தா னம்மானை சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880 வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள் பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து மேலாம் பரனார் விமல னருளாலே எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில் பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில் வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல் இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல் கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல் விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற 900 முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால் என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால் வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன் கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம் தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள் ஆதியே நாதி அனாதித் திருவுளமே சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும் என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார் தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை இரணியன் பாடு சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920 தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில் பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில் மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும் நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார் சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில் ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக் கொன்னே னானென்று கூறினே னப்போது அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய் வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல் வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன் பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது 940 ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால் பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும் முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான் என்று இரணியனை இரணசங் காரமிட்டு அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில் கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார் செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை 953 |
முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.
தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.
பதிகளில் தலைமைபதியாக திகழும் சுவாமிதோப்பு பதியில் அமைந்துள்ள
முத்திரிகிணற்றை வைகுண்ட அய்யா ஏற்படுத்தினார். அக்கிணறு பல்வகை சிறப்புகளை
உடையது.
"முத்திரிகிணற்றின்" தோற்றம்:
பழங்காலத்தில் பொதுகிணற்றில் நீர் எடுப்பதற்க்கும் குளிப்பற்க்கும் மக்கள்
சிலருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற தூய
எண்ணம் கொண்ட வைகுண்ட அய்யா "முத்திரிகிணற்றை" தன் பதிகளில்
ஏற்படுத்தினார். பக்தர்கள் புனிதமாகவும், நோயின்றி வாழவும் அய்யா
ஏற்படுத்திய கிணறு "முத்திரிகிணறு" ஆகும்.
வைகுண்ட அய்யாவின் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட கலிநீசர்கள் வைகுண்ட அய்யா
ஏற்படுத்திய கிணற்றில் நஞ்சை ஊற்றி கொல்ல முயன்றனர். அய்யா வைகுண்டர்
"பால்" என்று அருந்துபவர்களுக்கு "பாலாகவும்"; "நஞ்சு" என்று
நினைப்பவர்களுக்கு "நஞ்சாக" இருக்கும் என்று கூறினார். பக்தர்கள் "சிவ சிவ
அரகரா" பாடி அந்த முத்திரிபதத்தை அருந்தியதால் அது அவர்களுக்கு இனிய
அமிர்தமாக தித்தித்தது.
வழிபடும் முறை: தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து); பதத்தை அருந்தி; அந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும். "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்: முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீறும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும். முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெருவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும். பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைடும். பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிகிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக! அய்யா உண்டு!
வழிபடும் முறை: தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து); பதத்தை அருந்தி; அந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும். "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்: முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீறும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும். முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெருவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும். பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைடும். பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிகிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக! அய்யா உண்டு!
மாப்புக் கேட்டல்
அய்யா நாங்கள்
அறிந்து அறியாமல் செய்ததெல்லம்
அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொருமை தரனும்
அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுல் கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.
அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ் சலம் இல்லாமல்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!
அய்யா உண்டு
அறிந்து அறியாமல் செய்ததெல்லம்
அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொருமை தரனும்
அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுல் கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.
அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ் சலம் இல்லாமல்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!
அய்யா உண்டு
அய்யா வைகுண்டர்
கொல்லம் ஆண்டு 1008க்கு முன்பாக கலியுக கொடுமைகள் தாங்ககாத தேவர்களும்,
முனிவர்களும் பச்சிபறவை முதல் ஜீவன் தங்களைப்படைத்த பரம்பொருளை வேண்டி
கலிகொடுமையில் இருந்து விடுதலைபெற முறையிட்டார்கள். ஒவ்வொரு யுகத்திலும்
தர்மத்தை சீர்குலைத்துவந்த அசுரர்களை இறைவன் அவதாரம் எடுத்து வந்து அவர்களை
அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். ஆனால் இந்த கலியுகத்திலே கலியன் உருவம்
இல்லாதவனாக தோன்றினான். கலியன் ஒவ்வொருவருடைய எண்ண அலைகளை ஆட்கொண்டான்.
ஆதலால் இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களும், கலிமாய எண்ணத்தோடு
தோன்றிவிட்டன.
கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும்.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும்.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

