செவ்வாய், 25 நவம்பர், 2014

அய்யா துணை

தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா

அதுகுட்டிபோட்டு இருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து

பார்தனில் அக்குருவும் பதிபோட்டடு இருக்கின்றாரே

இரவுபகல் எப்போதும் அவர்குயிரை போட்டாற்றுவதில்லை

அஞ்சாம் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்

நஞ்சுதின்று நாளாச்சு நான்மறைப்போறேனடா

வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப் பிடித்திடுங்கோ

வையகத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம் வருகுதப்பா

கந்தன்திருவேலனே என்னை ஆண்டியெனறறிய மாட்டான்

கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா

கோலநடுமாலயனும் சாலங்கட்டி ஆடுகிறேன்

காளிவெள்ளம் வருகிறது கப்பல்செய்து வைத்திருங்கோ

நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா

நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

கங்கைபால் வற்றுமப்பா கிழவன் பன்டாரம் சொல்லுகின்றேன்

வெட்டவெளிதனில் மக்காள்வேலி பயிராகுதப்பா

ஊரோட்டம் தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா

மாரிவெள்ளம் அழிக்குதடா மாயான்டி சொல்லுகிறேன்

கூத்தாடிக்கூத்தாடி நாள்கொள்ளி வைத்துப் போவேனடா

கொள்ளிவைக்கும் குமரனடா கொப்பன்நந்தி யீசனடா

பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாரேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக