|
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-16
தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார் கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும் முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச் செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால் குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும் வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும் கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம் விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும் பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள் குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம் 20 அய்யா திருநாள் இகனை நடத்துதல் அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து இப்போ திருநாள் இகனைநடத்த வென்று நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள் தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால் இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப் பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத் தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள் பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும் மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும் கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும் தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும் வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும் நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப் பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக் காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு மாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்து பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக் கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே 40 மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன் சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமென வருவார் கிழமை மாதந் தவறாமல் திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக் கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப் பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கிப் பிச்சிமா லைதூக்கிப் பெருவாடை தான்தொளித்து மிச்சம்பழந் தூக்கி மிகுவாடை தான்தொளித்து சந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனே சிந்தரெவ ரும்போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள் வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன் தத்திதத்தி யாகச் சதாகோடி யாய்க்குவித்துப் பாலாயி தங்கள்வைத்துப் பாவித்து நற்பதிக்குள் மாலா யிருந்து மகிழ அலங்கரிப்பார் தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து மருவினிய மாதர் மகாகுரவை மலமலென டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள் மும்மான முளக்கம் போலே மிகமுழங்க கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு 60 நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம் கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும் மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச் சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக் கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக் கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத் துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம் காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும் நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத் 80 தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிகஇருந்து பெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிட சங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்ற சிங்கமுக லெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்க சான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்து ஆன்றோர் பதியை அலங்கிருத மாகிவரக் கன்னிமார் நாதன் கைக்குளொழுங் காய்வரவே மின்னும் பதித்தெருவும் மிக்கஇந் தப்பவிசாய் உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள் குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்கு பூமாரி பொன்மாரி பெரிய சலமாரி நாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்க எல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்று அல்லோரு மெச்சி அகமகிழ்ந்தா ரம்மானை நல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும் செல்ல மறுநாள் திங்க ளுதித்தவுடன் காட்சி நடத்திக் கரிய திருமாலும் நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தார் நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்து மாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தா ரம்மானை 100 இப்படியே திருநாள் இகனை மிகநடத்தி நற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடு கூடி யிருந்து குலாவி யிருக்கையிலே வேடிக்கை யாக விதியின் படியாலே நல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும் செல்லப்பட் டானதுவும் சிவந்ததங்கக் காறையதும் இட்டுக் கலியாணம் இலட்சுமியைச் செய்யவென்று மட்டநிக ரில்லா மாயன் மனதிலுற்றார் தங்கத்தால் காறை தானதியப் பட்டதுவும் அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்துத் திருநா ளிகனைத் திடிமன் முழக்கமொடு பெருமாளும் லட்சுமியைப் பேறாய் மணமுகித்துத் தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்து மருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார் நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார் ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே வைய மளந்த மாயத் திருமாலே எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார் 120 அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார் இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில் வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார் அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும் சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள் வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும் ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார் நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார் நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள் வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத் தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார் தெய்வமு மவராய்த் திருவுள முமவராய் வைய மகிழ மனுப்போலு மிருந்தார் 140 வத்துவகையும் மாடாடு சொத்துக்களும் ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார் அம்மை மார்களுக்கு மதலை ஈதல் இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள் குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார் ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும் வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும் விண்ணாண மாக வீரநா ராயணரை கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும் மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார் நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே 160 இப்போ மதலை எடுத்து மிகத்தாரும் செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார் நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும் குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன் பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக் கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர் என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால் பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான் தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல் மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன் மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத் 180 துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன் வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன் பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச் சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக் கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப் பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான் சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக் கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான் பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம் பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான் பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும் மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும் மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார் பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ 200 பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே ஆரு மொருதர் ஆராட்டங் காணாத மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும் ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல் கரிய அவரவர்கள் காடு வடவுகளில் உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக் கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக் குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப் பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால் ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப் பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து 220 வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும் ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத் தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும் பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம் வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும் தந்து புவியாளத் தலைவரே யும்முடைய விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும் தாருமென மாதரெல்லாம் தாழ்மையுட னீதுரைக்க ஆருநிக ரொவ்வா அச்சுதரு மேதுரைப்பார் மாதேநா னிந்த வையகத்தில் வந்தவுடன் பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில் தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்து கூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையது இன்னாபா ரென்று ஏழுபேரையு மெடுத்து 240 நன்னகரி பார்க்க நாத னிடுப்பில்வைத்து வட்டமிட்டு ஆடி மாதரொவ் வொருவர்க்கொரு கிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார் பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன் சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும் ஒப்பமென் றெல்லோரும் உம்பருந் தாமகிழ்ந்தார் செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்து அன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண் டானதிலே மன்றுதனை யாளும் மாபாவிச் சோழனவன் கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்து சொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோ தேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடைய மானதிய மக்களென மாயவருந் தானுரைக்க அப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்து இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள் மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே செப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்று பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில் நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் 260 கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும் ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலே தாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத் தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம் நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்து மடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக் கண்ணோ மணியோ கரடரா சன்மகனோ விண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோ தோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்ற சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச் சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும் புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார் நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம் வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டு நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து 280 என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று இன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச் சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்து மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காண மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும் குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள் நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள் வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானை கதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில் திருநா ளிகனை செய்து நிறைவேற்றி மக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்து மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார் கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும் மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானை பின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்தி மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார் பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத் தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப் பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய் மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி 300 இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில் பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும் துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடி மங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்து கொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார் மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால் வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லை கூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில் நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள் ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து திருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச் சண்டை பிடிப்பார் தந்ததுபோ ராதெனவே கண்டமட வாரோடும் கனிவாகப் போறீரென அவள்வீட்டில் போறீர் அவளோ டதிகமுமாய் உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்து என்னோடு பேச்சு இப்படியே செய்வீரென மின்னோ வியங்கள் வெகுவாகக் கத்திடுவார் 320 சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்க ள்தான்பேசி நாமகலப் போவோம் எனநடந்து மக்களுட வீட்டி லவர்போவார் வீரமால் தானறிந்து கூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்து அள்ளித் தருவேன் அனந்தவரா கன்பணமும் வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும் உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன் அந்தப்பெண் ணார்களுக்கு அதுக்கதுபோ லேகொடுப்பேன் எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்துக் குளிர்ந்தநய வார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டுச் சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவே உருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவிய முமறிவேன் ஏன்காணு மும்முடைய இந்திரசால மெல்லாம் கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக் குத்தெரியும் மருட்டா தேயுங்காண் மாய்மால முந்தெரியும் உருட்டா தேயும்போம் உமதுதொழி லுந்தெரியும் எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர் தனக்கேற்க நெஞ்சம் தானறியா தேயிருக்கும் கன்னி யுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன் நின்னு சடையாதேயும் நீர்போவு மென்றுரைப்பாள் 340 அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தைசொல்லி இப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவே மாய னழைக்க மாது மெழுந்திருந்து நாயன் பிறகே நடந்து மிகவருவான் வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார் சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய் இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில் சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும் நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச் செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத் திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக் 360 கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று அஞ்சலெனச் சாமளா தேவிதனை யழைத்துக் கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள் திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி மின்னி னொளிமதலை வீரத் தனமாக நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத் தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார் அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியை உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி வையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலே செய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான் போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோ ஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன 380 சோதியே யென்று தொழுதார் மடவார்கள் அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன் சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து அன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுது நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே பத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில் பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய் வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார் சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடி கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலே அஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும் மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவே ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல் பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்து கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு நினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான் நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக எண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்று நண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு 400 வரவில்லை யானால் மாதருடன் மக்களையும் சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ என்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையா அன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்று பாவிப் பயலே பகராம லித்தனைநாள் மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனே தீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால் கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனே முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால் என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனே பூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோ மாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய் அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல் இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்று மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில் தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்து ஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால் மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே கெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல் கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் 420 இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லை எப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி எல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்து அல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம் தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும் கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும் பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும் துள்ளி யிகனை சுகசோ பனம்வரவே பூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும் ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும் சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார் வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல் ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன் கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத் தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித் தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம் எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து ஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்தி வாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி 440 மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறி சங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்தி பாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலே தாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்து பொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில் வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும் மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும் தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும் கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காண வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலே நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று அய்யா கன்னிபகவதி பதியேகல் உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கி வள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியை மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார் கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்று தளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய் மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய் கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி 460 தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப் பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே கண்ணு மயிலே கனகவொளி மாமணியே பெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு என்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும் குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும் காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான் பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய் எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேது கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீ அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே சும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மா பரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்கு விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி திலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன் வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான் உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன் 480 மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள் உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன் பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில் இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால் நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்து என்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்தி பொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார் பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப் போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன் ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும் சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம் மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய் தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார் பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள் தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுது நாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள் 500 போற்றி யுமக்குப் போதவய தானதினால் நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும் ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது மாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள் உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான் கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம் பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான் இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார் எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம் என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள் விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள் அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்து இப்போது வேணும் இவளை மிகஇளக்க என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து மன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லி ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம் வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் 520 தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம் மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம் தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம் புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம் குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும் கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம் மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம் மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித் தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம் தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும் வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம் நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள் மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம் டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம் இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம் காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும் பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம் இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால் எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் 540 அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த் தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென அச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டு அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி போய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார் வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து கண்ணரிய போத்தி காரணத்து நற்போத்தி திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும் தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர் கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன் செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன் செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள் அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார் இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் 560 ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம் கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும் இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன் சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால் ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும் பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார் அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள் நற்போடு வொத்த நம்முடைய பேராநீர் வேறாட்கள் கூடவெளியேறப் போகாது வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும் உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும் பைய இருந்திருந்து பாதை மிகநடந்து நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும் 580 பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள் சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில் பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல் இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல் கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம் போக வென்றாலும் பொழுது புறப்படுமுன் ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம் அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று இப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச் சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னி அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்று கரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து உன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்து சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப் பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலே மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக் கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி 600 வந்தவளை யழைத்து வாவா பிறகெனவே சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார் முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே முட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள் கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும் கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க மலர்மாரி தூவ வாயு மரைவீச பூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல் காமி குமரி காலசையா மல்நடந்தாள் நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார் வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும் பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக் காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச் சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள் அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ 620 வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால் வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள் பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால் தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும் நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம் விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம் என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே அறைந்த வாரி அதற்கு வடபுறமாய் இடம்மான வோசை டகுடகா வென்றுமிக இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச் சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக் குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப் பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப் பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச் சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமென என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும் நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே 640 தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள் குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றி மின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம் வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டி நடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டு அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள் கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள் சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால் எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும் திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப் பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னே என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால் பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான் உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில் 660 ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னை திருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள் பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன் காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன் மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க கலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன் என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்து அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த் தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம் வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும் சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும் செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும் புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும் சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ லுண்டு மென்று பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம் சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள் உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி 680 குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார் பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள் சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர் ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக் சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள் ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும் நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம் செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும் நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார் நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும் இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன் பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக் கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை பகவதிக்குச் சச்சிதானந்த வடிவைக் காண அருளல் பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும் பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் 700 நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலே தண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும் தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல் செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனே அம்பலத்தே நின்று ஆனந்த மேபுரிய ஆனந்த மான அழகு பகவதியும் தானந்த மான சச்சிதானந் தவடிவைக் கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே நின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதை கிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகல பழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக் கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார் மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப் பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொரு கூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல் பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானே லாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள் அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே எங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான் 720 திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோ நிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோ மான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சே தான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே இக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ என்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோ அன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச் சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும் சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம் என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் 740 தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல் பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள் மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள் சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள் கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள் எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள் தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள் சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப் போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும் எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான் சங்குள் பிறந்த சமயத்திருமணியும் எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும் தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள் கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக் களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள் கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும் காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே 760 சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள் என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித் தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில் குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம் வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல் சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய் இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத் தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன் சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட ஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும் கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார் நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம் பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்கு என்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்து இன்று இருவென்று எம்பெருமா ளுமாட நல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல் 780 செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள் பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்பு உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி பத்து வயசுப் பிராயம்போ லேசமைந்து சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள் இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே நாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும் சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனே முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ நரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான் உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம் மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூட போய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவே நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ சும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோ படைத்த பரனே பாவியே யென்றலையில் நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோ பரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக 800 விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல் ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்து கூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடி திரியும் பொழுது செய்யதிரு மாலவரும் பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும் இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடைய மனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்று நினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கி புனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்து தாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறிய காண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியை மனுவறிய அண்ட வானலோ கமறிய இனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்று நிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்து எச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில் அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப் படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப் பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும் நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான் புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே 820 உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத் தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச் சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித் தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து பகவதியம்மை காண்டம் படித்தல் பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள் ஆவி மறுக அவனிதனி லெங்களையும் சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய் போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச் சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும் வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப் பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால் பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் 840 உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல் பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும் சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும் ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம் சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு 860 மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள் புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக் கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள் நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு வாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள் நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள் சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் 880 சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும் அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய் தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும் மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன் சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப் பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது எங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்து தங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடு கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார் நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண் உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல் எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல் போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல் ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் 900 வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும் வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும் மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம் உபாய மறிய ஒருவரா லேலாது என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன் நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார் பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி குமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியே தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள் என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை கலியழிய வயது காலஞ்சரி யானதினால் வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான் பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து 920 சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து நாடாள நமக்கு நல்லபல னானதினால் தாடாண்மை யான சத்தி பகவதியே உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான் கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும் மயிலனையா ளான மாது சரஸ்வதியும் மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள் சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள் மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள் குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள் பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல் எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில் வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும் திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே வருகுமந்த வேளையிலே மாமுன சீராமரிஷி திருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார் நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன் 940 வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால் எக்கால மையா இவன்முடி வாவதுதான் அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச் சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ சிவன் ரோமரிஷிக்கு அருளியது மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும் தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து) எல்லா மறிய இலக்கறியக் கூறினராம் இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம் சிவஞான நினைவு செல்லாது தேசமதில் கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும் தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார் நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில் போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார் பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும் கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம் கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவே நாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடி வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் 960 மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும் கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர் மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார் வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும் அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும் மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்து தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள் தெய்வ நிலைகள் தேசமதில் காணாது மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார் தெய்வ மடவார் தேசமதி லேவருவார் வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார் பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும் சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க் கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம் உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான் இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே 980 அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும் பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான் துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம் கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில் சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனே வாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரே கூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ் செய்கிறதார் யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான் தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக் கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத் தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத் தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும் பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால் நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம் தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால் திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம் என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று 1000 நன்று நன்றையா நல்லகா ரியமெனவே சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே முந்தோர் மொழிந்த முறைநூற் படியாலே வந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு எந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதே தலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடு கிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு கொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள் பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசே கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து வாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல் கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல் தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடி கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக் கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க அம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்து நம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லி இருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள் 1020 பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டு அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக ஒழுகாக நிற்கும் உலக நருளழவே மாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவே ஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும் வையா வழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே சிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும் மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே இலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக் கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே பொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனே முன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன் ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனே வேண்டும் நருட்கள்வந்து விழுந்திறைகள் தோற்றேனே தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே துணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனே பணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும் நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே செகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே 1040 இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்கு முத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ அய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரை வெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனே பாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்று ஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோ மூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்தி மீண்டென் சரீரம் விழலா யெரியுதையோ பாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும் நாலு ரண்டான நல்ல ருசியதுவும் பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ ஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரே என்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவே மன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித் தேனினிய கண்ணே தேவி பகவதியே நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய் நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோ மேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன் பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன் என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன் 1060 தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக் கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன் திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன் அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும் அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமை பொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணை என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக் குன்று தனமின்னாள் குமரி மனமகிழச் சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப் புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள் நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்து மாது குமரி வாயுரை யாதிருந்தாள் பகவதி திருக்கல்யாணம் அப்போ திருமால் ஆனந்த மேபெருகி இப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்று உன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம் மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம் அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்று பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச் சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ 1080 தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாட ஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாட பகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச் சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும் பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து மிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண் பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக் கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி விண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார் கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு இன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக் கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார் தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக் கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச் சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே எல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானை நல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்து செல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார் அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச் 1100 சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம் ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும் நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும் சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடி நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே பார்வதி திருக்கல்யாணம் ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியை வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளை மாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள் பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும் மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத் திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்து மாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டு காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார் மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூற சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக் கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர் உருத்தா யிருந்துஓதுவார் மோகமதாய்ப் பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையே கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே கூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் 1120 நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது கனியேயென் மாமணியே கருத்தி லறியீரோ உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ ஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக் கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே வாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப் பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ அன்னங்காய் வைத் அமுதருந்து மென்றுசொல்லி முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ வாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள் கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள் பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ என்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூற மன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள் வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து 1140 முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர் அய்யோஈ தென்ன அடிமாறு காலமதோ பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம் இப்பா ருலகில் இப்படியே வந்ததென்ன முப்படியே யுள்ள முறைநூற் படியாலே பொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோ வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான் என்றந்த மாதர் இதுகூற மாயபரன் நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலே வந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்று புந்தி யயர்ந்து பூவை முகங்கோடி அண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்று பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள் அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில் இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல் தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவே நின்றார் மடவார் நினைவு தடுமாறிப் பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத் 1160 தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்கு ஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டி சந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார் வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட செய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்து வாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன் தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக வேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார் இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள் நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல் செய்து இகனை சிவசோ பனம்புரிந்து பைதுவளை மாதரோடு பண்பாக வேயிருந்தார் மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த் தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம் வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும் சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு சோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி 1180 சேவரசி யான மெல்லியரை நாமணந்தான் மோகினி வேடம் புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்று மதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவே மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு சீதுகந்த மாதரென செம்பவள மாயவரும் காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச் சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்து மாலை யணிந்து மார்பில் கலையணிந்து கோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத் தோர்வை படாதே தோகையென வேசமைந்து மஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்து செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்தி எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று சொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லி முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார் நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்று தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார் இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் 1200 பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளை மயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவ இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு சச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும் பெண்ணேயென் னக்காள் டுரைபகரும் பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமே கண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமே கலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனே வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும் நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும் சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே சத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும் புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும் கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து கும்மி யடித்துக் குரவை மிகக்கூறி எம்வடிவு போலே ஏலங் குழலார்கள் ஆடிப் படித்து அலங்கிருத மாகியவர் சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன் பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை மேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது 1220 என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும் அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு கூடி நடந்து கூண்டரிய நற்பதியில் ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில் வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடைய சிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்து திக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கி பக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல் புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக் குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப் பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று சுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள் உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில் துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள் வையகத்தோர் காண வாழும் பகவதியாள் செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள் மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல் அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப் பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் 1240 இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும் சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப் பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக் கண்ணான என்றன் கற்பு மழிந்தேனே என்றுமா தேவி இப்படியே சொன்னவுடன் ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப் பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக் கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன் முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோ எனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ நாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ சோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோ என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள் குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம் எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம் கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே இராமனாய்த் தோன்றி இராவணசங் காரமது சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப் 1260 போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலே மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து ஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறி வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில் போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்க வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே ஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச் சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப் பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்து ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த் தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்து தொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து விளையாடி நீயும் வேறா ரறியாமல் குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்து சிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப் பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய் உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோ தன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது 1280 பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க் குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே பாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாது என்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டு நன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம் பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு கண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்கு வேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்க மானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித் தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல் சிலைநுதலிக் கன்னி சொல்லுரையா தேயிருந்தாள் இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்து பொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய் வேச மெடுத்து மேளத் தொனியுடனே வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க தேச நருளறியத் தெய்வமட வாரறிய மாய பரனும் மகாபெரிய நூல்முறையாய் வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானை மாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச் 1300 சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை வள்ளி திருக்கல்யாணம் மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்து துணைபெரிய மாயன் சுருதி முறைப்படியே ஆகமத் திகனை அலங்கிருத மாய்ப்புரிந்து நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து கேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியைக் கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே வேலையிட்ட மான வேண்டுஞ் சடங்குசெய்து நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம் பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம் கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார் வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில் 1320 ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம் பாலராண் பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக் கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடு பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல் நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார் நாரா யணர்க்கு நல்லமுது தான்படைத்து காரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார் 1327 |
திங்கள், 29 செப்டம்பர், 2014
அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை
|
அகிலத்திரட்டு அம்மானை
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய் வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள் சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள் இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில் திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல் காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில் பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள் விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி இப்போ நமக்கு எழுத்தின் படியாலே நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல் கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன் மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20 மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும் தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில் நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில் சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார் நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய் ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில் பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே கற்றைக் குழலார் கனமான தேவியரை ஏக மறிய இசைந்த மணம்புரிந்து வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத் தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச் சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள் ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே 40 இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம் என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும் மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல் கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப் பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள் நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத் தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் 60 ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத் தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப் பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச் செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக் கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும் வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும் மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும் கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து வாட விடாமல் வல்லபல தீனதுவும் மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே காளடம் மானம் கடிய சிறப்புடனே அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து 80 ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன் நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக் காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும் செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த் திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார் இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும் விருந்து மருந்தி வேதா கமம்போலே பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து பூமடந்தையம்மை திருக்கல்யாணம் இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும் ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் 100 பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச் சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல் வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய் தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும் கண்ணான மாயன் கையார வேகொடுத்து நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப் பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும் நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத் தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள் இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும் விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை 120 உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம் கொண்ட அடிமை குலச்சாதி யானோரை அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச் சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள் காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம் உற்று மனதில் உபாய மதுவாக வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும் தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை அய்யா வைகுண்டம் எழுந்தருளல் இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம் ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார் ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர் தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம் கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் 140 மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில் தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன் பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால் வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம் என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல் விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர் என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம் குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார் குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும் ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும் வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர் ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே 160 இனியா னுமது இலங்கும் பதியில்வர முனியா னவற்கு முற்ற விடையருளும் ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே வேண்டா முலகம் மேலுலக மேயழையும் அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும் தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால் என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே மன்று தனையாளும் மாயத் திருமாலும் வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப் பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும் கண்ணு மகனைக் கடிய விமானமதில் ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச் சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில் வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும் தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார் சற்குரு வான சடாமுனி யிங்குவந்து மெய்க்குரு வான வீர விசயனுக்குச் 180 நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக் காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப் பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய் இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத் திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் 200 சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில் பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில் வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில் மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக் கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ விமான மதிலேறி மேலோக மீதில்வரத் தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத் தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார் வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும் நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப் பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த 220 நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம் இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே ஆவி மகனை அன்போ டுறவணைத்துத் தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத் தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும் அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும் சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும் தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம் சரசு பதிமாதும் தாயீசொரி யாளும் பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார் கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும் அகிலமது அறிய ஆனார்வை குண்டமென எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன் முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல் ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் 240 பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில் திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில் தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில் சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர் பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக் குதறி மலைந்து கொடுவான மாமுகடும் கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத் தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில் முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய் அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப் பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில் மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும் சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும் இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் 260 சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார் பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும் அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக் மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப் சான்றோர் கோவில் அமைத்தல் பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள் சாமியுட தேவி சுற்றமட மாதர்களும் அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று மாதத் திருநாளும் வாரமற வாதபடி நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச் சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும் சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே துயரமதாய் வாடி சிவனே செயலெனவே 280 இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல் நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார் இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும் முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும் மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக் கூண்ட மணியே கோகுலமே கற்பகமே ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே என்றன் மணியே என்னாத ஓவியமே உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில் இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத் களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத் தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும் இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப் பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார் அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் 300 பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக் கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள் தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும் புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக் கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய ஆடிக் களித்து யாம மிகக்கூறி நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன் ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும் கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன் அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால் இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும் அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும் இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் 320 ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல் தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால் பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும் நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு கலைமுனி, ஞானமுனி சாட்சியம் கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும் அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ எறும்புகடை யானைமுதல் பேதா பேதம் எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால் உலகமதி லாருளதோ வுடைய மாலே செறும்பொருளா முமதுமக னங்கே வந்து செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும் தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும் தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார் தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன் உப்பரிகை மீதிருந்து அரசே யாள உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும் மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம் நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால் நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம் நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் 340 காங்கரிது எங்களுட கருணை நாதா கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம் ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும் ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப் பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும் பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார். நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும் நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து) ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக் கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும் கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர் டுண்டுபல மேளமொடு தாளத் தோடு உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார் சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச் சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித் தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர் கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக் குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற மன்றலணி மாயவரு மீசர் தானும் வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று இளங்குருமா னானகுரு வைந்த ராசர் இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப் பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப் பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப் பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன் பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும் தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற மறையவரு மீசுரரும் வரமே யீந்தார் அய்யா சான்றோர்க்கு இரங்கல் ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் 360 கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச் சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம் ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன் நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும் வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார் ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம் வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய் திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக் குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார் கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம் மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம் பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய் கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் 380 வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும் பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும் ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார் இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும் கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும் மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம் உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய் முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல் கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள் சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே ஆணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் 400 குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும் பொய் வேசம் பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன் ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய் முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில் தவம்போ லிருந்து தானாளு குண்டமதில் ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல் நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன் மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய் குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் 420 முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான் செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான் கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான் பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான் தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான் மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான் கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான் மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான் இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள் செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம் தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும் இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய் நல்லவை முழித்தல் சிவனு முமையாளும் செய்யத் திருமாலும் தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம் நான்முகனும் வேத நல்ல மறையோரும் தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக் கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் 440 வானமது குழவி மண்பூமி யம்மியெனத் தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும் உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும் அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும் மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும் தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும் பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி நல்ல மகனே நாடுந் தவத்தோனே செல்ல மகனே திருபெற்ற கண்மணியே உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும் சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும் ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும் பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும் யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே 460 நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர் முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே களித்தே யிருந்த கருத்தின் படியாலே பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும் அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும் புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும் பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும் அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார் எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார் தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும் நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார் நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால் வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச் சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும் நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும் விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும் வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் 480 ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால் ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச் சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார் விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக் கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக் கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக் நடுத்தீர்ப்பு குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச் சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள் ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத் தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப் புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக் காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் 500 ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய் கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம் நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத் தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர் பண்டார மென்று பாரறிய வந்தவரை அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால் கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம் சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும் தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம் முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன 520 சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில் ஆவி யறிய அனுப்போலும் நன்மையது செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும் எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச் சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன் நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப் பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும் உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும் மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே 540 தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத் தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால் வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள் மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே நாடதிக மான நல்லபட்டு நீராளம் தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப் பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும் மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம் அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப் பொன்னப்ப நாரணரே பெற்றவரே வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச் சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும் பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள் ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப் போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் 560 தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே 580 மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல் இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில் சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால் தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத் திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் 600 எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன் நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக் கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச் சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால் இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில் அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும் தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப் பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில் அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும் பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன் சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர் ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித் தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத் தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம் ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி 620 நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும் அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே பாரேழு தேசம் பண்பாய் முறையமிட முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப் பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும் மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை வீறுடனே நல்ல வேலாயுத மெனவே எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச் சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக் கொல்லுவே னென்று கூண்டப் படையோடு சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன் தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு 640 மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய் என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால் உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய் விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும் சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக் கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக் கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன் சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள் புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல் என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன் அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய் துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் 660 அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில் ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய் மகவா யுனக்கு மாய வுருவெடுத்து உகமே ழறிய உதித்து வளருகையில் பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும் உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும் தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால் சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார் ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட ஏற்ற பேரான இரணிய நமாவெனவே சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன் வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் 680 சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய் வல்லப் பொருளான மாய அரியோனும் எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி அங்கெங் குமாகி அளவுக் களவாகி நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப் பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான் தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக் கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும் தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால் குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச் சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் 700 கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும் கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும் புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும் மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால் கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான் என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து அன்றே கிறதா யுகமு மழித்துமிகப் பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும் மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய் மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும் சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் 720 கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும் நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப் பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால் பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச் சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச் சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப் பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும் அல்லாதே போனால் அலக்கழி வாகுமென எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன் காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம் இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் 740 ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய் அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும் மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும் கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள் முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால் அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள் அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால் உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும் அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ 760 மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ என்றாயே நீயும் இருவரையு மப்போது அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத் தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல் படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும் நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன் பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான் நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப் பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து என்கை யினாலே எடுத்து வொருபாணம் சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் 780 உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய் இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன் உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச் சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய் மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன் உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய் துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப் பவரா யுனக்குப் பக்கத் துணையாக ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து 800 உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து உற்ற திரேதா யுகமழித் துன்றனையும் சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன் பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார் அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப் பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன் சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன் அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல் இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய் மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே உன்னால் குதித்து உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் 820 பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக் கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே கலி முடிவு முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும் மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும் எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப் பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம் மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல் ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும் தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும் அந்திர மதான அன்னீத வஞ்சனையும் மாய்கை பலதும் வளக்கோர வாரமதும் சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம் என்னோடு கூட யானு மதுகூட வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும் பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக 840 ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித் தீயிரத்த மான தீரா தருநரகில் சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப் பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம் தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின் தர்ம யுகம் உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக கற்பு நெறியானக் கடிய பலவகையும் நல்லோர்க ளான நாடு மனுவோரும் நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும் கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில் நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம் தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல் நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் 860 எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால் வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச் செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும் பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும் கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும் நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும் சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும் தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும் கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல் தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம் முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும் களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச் செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய் கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் 880 நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும் பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும் தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய் நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம் ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும் காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார் பட்சி பறவை பலசீவ செந்துகட்கும் அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல் பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல் ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம் சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார் நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் 900 அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார் அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல் நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார் வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத் தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார் வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு மானுவ தர்ம வரம்பு தவறாமல் நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார் பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார் குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள் கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் 920 சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப் பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார் வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச் செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு நாதக் குருவான நாரா யணமணிக்கு சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும் தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும் நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும் ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் 940 இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச் செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே சரசு பதிமாது தண்டரள சுந்தரியும் விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும் வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும் ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும் வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும் இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள் முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும் சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார் போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார் சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள் பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால் ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன் பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக் கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன் கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் 960 பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும் சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில் வருவே னதுமட்டும் வடவா முகமதிலே குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள் இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான் அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார் பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத் திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து காரணம தாகக் களிகூர்ந் தினிதாக வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும் கைகண்ட நல்ல கலியாண முமுகித்து மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப் பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப் 980 பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன் கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப் பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய் தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும் மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும் நான்முகனும் வேத நல்ல மறையோரும் வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன் நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள் தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள் மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க போவோ மெனவே பெரியவை குண்டரையும் கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச் சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத் தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் 1000 கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக் கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர வாரி சங்கூத வாயு மலர்தூவ நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும் கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு நேராக வந்து நெடியோன் பதிதவிலே சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும் சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும் மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும் குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச் சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம் யாம முறையாய் அங்கே குதித்திடுமாம் என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம் பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் 1020 நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல் குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார் பட்டாபிஷேகம் இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில் செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும் ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில் மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல் விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில் ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில் ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே அய்யா அருள்வாக்கு ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார் மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் 1040 கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம் உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால் தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர் என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன் பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித் தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர் மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு 1060 ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல் நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார் மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல் பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார் தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும் மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும் எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும் செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும் சிங்கார மாகத் தேன்போல் மரைவீச சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக் கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக் கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து பாவித்து நித்தம் பரமவை குண்டரையும் சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே 1080 கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும் ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும் நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச் சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள் கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார் ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம் பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார் தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும் பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர் நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார் ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம் கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும் தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம் மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் 1100 பருதியு மதியெனப் பவந்து சேவனர் கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர் அருதியு மலர்மகள் அணிந்து பூவினர் கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர் பொன்முக வருளது பொதுமி யாவியே அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு இன்முக மதிலு மிருந்து லாவியே பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர் முதமுக வானவர் மூன்றென வொன்றினர் சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர் உதவென மனமு முவந்து லாவியே நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர் சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ பூமாது வானபக வதியும் வாழ பொன்மாது சரசுபதி புரிந்து வாழ நாமாது வானபூ மடந்தை வாழ நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ போர்மாது வானமா காளி வாழ பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ சிவவைந்த ராசருமே சிறந்து வாழ 1120 மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி மாயனுட முகம்நோக்கி மாது தானும் தீதகலும் நாயகமே சிறந்த மாலே தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும் நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர் ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும் இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும் பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப் பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும் எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும் நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம் ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர் பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும் பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின் பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன் சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக் கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக் கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும் வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ மாதேநீ கேளுயீ ரேளு பூமி மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள் சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச் செகவீர சாலமத னேக முண்டு பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும் பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர் வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம் இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம் மனுவோரு முனிவோரும் வான லோக மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார் இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம் பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் 1140 மாயனுரை மனமதிலே மாது கேட்டு மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள் தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத் திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே நாயநெறி காணாத அடிமை போல நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி ஆயருமை நாயடியா ளின்று கண்டேன் அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே என்றாதி யிருகையால் மாதை யாவிப் புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப் பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை வையகத்து மனுவோர்க ளறிய மாயன் தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன் நாதனருள் மறவாத இராம கிருஷ்ண நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச் செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே வாறான கதைவகுத்த நாதன் வாழ வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ வீறான தெய்வசத்தி மடவார் வாழ வீரமுக லட்சமியும் விரைந்து வாழ நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர் நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர் ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம் திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத் திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர் எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம் 1160 அய்யா உண்டு |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)