வைகுண்டசுவாமியின் காலத்தில் திருவிதாங்கூர்
( கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தென் கேரளத்தின் பெரும்பகுதி) மன்னராட்சியில்
தாழ்த்தப்பட்ட சாதயினருக்கு ஒரு நீதியும், உயர்த்தப்பட்ட சாதயினருக்கு ஒரு
நீதியும் வழக்கில் இருந்தன. தீண்டாமையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் உற்ற
துயரினைப் போக்க,
“தாழக்
கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் ” – என்ற கொள்கையுடை வைகுண்டசுவாமிகள் தனது “அய்யா வழி இயக்கத்தின் ” மூலம்,
v சாதி சமயம் பொய்யானது.
v உயிர்க் கொலை கூடாது.
v கள் உண்ணலாகாது.
v ஓரிறைக் கொள்கை உயர்வானது.
v சிறு தெய்வ வழிபாடு
தேவையற்றது.
v அன்பு நெறியே உயர்வானது.
v பெண்ணுரிமை.
v அனைவருக்கும் கல்வி
போன்ற கொள்கைகளைப் பரப்பும் முகமாக ஊர்கள் தோறும் பதிகளையும்,
நிழல்தாங்கல்களையும் நிறுவி அவற்றை,
v ஒளி வழிபாட்டுத் தலம்.
v கல்விக் கூடங்கள்.
v அறம் கூறும் அவையம்.
v பசிப்பிணி அகற்றும் இடம்.
v உடல் பிணி தீர்க்கும்
இடம்.
v சம பந்தி போசனம் நடைபெறும் இடம்
என்று சமத்துவ சமுதாயத்தை மலரச் செய்ய அயராது
உழைத்தார். இதன் காரணமாகப் பல எதிர்ப்புகளையம், அவமானங்களையும் எதிர்கொண்டு
ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார். இதனால்
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள்,
v பெண்கள் தோள் சீலை
அணிதல், பொன் நகைகள் அணிதல், இடுப்பில் குடங்களில் தண்ணீர் எடுத்தல்.
v சமய நல்லிணக்கம்
மேற்கொள்ளல்.
v அனைவரும் கல்வி உரிமையைப் பெறல்.
v அரசின்
அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறல்
என உயர் சாதியனருக்கு நிகராக அனைத்து உரிமைகளையும்
பெற்றுச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக