செவ்வாய், 18 நவம்பர், 2014

6 துண்டுகளாக வெட்டினார்

அப்போது பூதகுரு முனிவர், அந்த அசுரனுக்கு புத்திமதி கூறினார். அவரது வார்த்தைகளை கேட்காமல் தொடர்ந்து அழிவு செயலில் இறங்கினான். இதனால் கோபம் அடைந்த மகாவிஷ்ணு, குரோனியை 6 துண்டுகளாக வெட்டி உலகில் தள்ளினார். அத்துடன் முதல் யுகமாகிய நீடிய யுகம் நிறைவு பெற்றது. இரண்டாவது யுகமாகிய சதிர யுகத்தில் குரோனியின் முதல் துண்டத்தை குண்டோம சாலியனாக பிறவி செய்யப்பட்டது. இந்த அசுரன் பிறந்த நேரத்தில் உலகெங்கும் அமைதி குலைந்தது. உலகுக்கு பெருங்கேடு வரப்போகிறது என்று உணர்ந்து, கோவி ரிஷி மூலம் அவனுக்கு அறிவுரை கூறப்பட்டது. அதை கேட்காத காரணத்தால் திருமால் அவனை அழித்து அந்த யுகத்தை நிறைவு செய்தார்.
மூன்றாவது யுகமாகிய நெடிய யுகத்தில் குரோனியின் 2–வது துண்டத்தை தில்லை மல்லாலன், மல்லோசி வாகனன் ஆகிய இரு அசுரர்களாக பிறக்கும்படி செய்தார்கள். இருவரும் வையகத்தை ஆள வழிகொண்டார்கள். மண்ணுலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் இருள்படியும் அளவுக்கு ஆட்சி அமைந்தது. இவர்களுக்கு ரோம ரிஷி சில அறிவுரைகளை வழங்கினார். அதை சிறிதும் பொருட்படுத்தாததால் திருமால் மந்திரபுரி கணையால் அந்த 2 அசுரர்களையும் அழித்து நெடிய யுகத்தை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக