அகிலத்திரட்டு அம்மானை ஆகமம்’’ என்பது எழுதிய எழுத்துக்கு உள்ளே எழுதப்படாத
எண்ணரிய கருத்து புதையல்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகும். பிரபஞ்சம்
தொடங்கியது முதல் உள்ள 7 யுகச் செய்தியும், இனி வரவிருக்கும் தர்மயுகமும்
சேர்த்து 8 யுக செய்திகளையும் திட்டவட்டமாக சொல்லும் அந்த புத்தகத்தை
கொல்லம் ஆண்டு 1016–ல் கார்த்திகை மாதம் 27–ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று
அய்யா வைகுண்டரின் சீசர்களில் ஒருவரான அரிகோபாலன் என்கிற சகாதேவ சீசர்
அய்யாவின் அருளால் எழுத தொடங்கினார். இந்த அகிலத்திரட்டில் வரும் காப்பு
வாசகத்தின் முதல் பதமான ‘ஏரணியும் மாயோன்’ என்பதை மட்டும் தன் திருவாயினால்
அய்யா வைகுண்டர் எடுத்துக் கூறியுள்ளார். அதன் பிறகு வரும் காண்டங்கள்
அனைத்தும் அரிகோபால சீசரின் மனதில் இருந்து அய்யா வைகுண்ட பரம்பொருள்
அருளியது ஆகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக