செவ்வாய், 18 நவம்பர், 2014

வீட்டில் அகிலத்திரட்டு அம்மானை இருந்தால் செல்வம் பெருகும்

அகிலத்திரட்டு அம்மானை எனும் புனித நூலை நீங்கள் தொட்ட உடனேயே உங்கள் உடம்பில் இருக்கின்ற தீயசக்திகள் எல்லாம் உங்களை விட்டுப் பறந்தோடிவிடும். மேலும் நினைத்தாலே உங்கள் உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் மறைந்துவிடும். அகிலத்திரட்டு அம்மாளை எனும் நூலைப்படிக்க ஆரம்பிக்கின்றபொழுது, எந்தவிதத்தடை வந்தாலும் பயப்படாதீர்கள், தயங்காதீர்கள் துணிந்து தொடர்ந்து படியுங்கள்.

எந்த வித உணவை நீங்கள் உண்டு விட்டாலும் எந்தவிதப் பாவமும் உங்களை நெருங்க முடியாது. எனவே தினமும் அகிலத்திரட்டு படிப்பதை கைவிடாதீர்கள். நீங்கள் இந்த நூலைப் படிக்கும் போதே நீங்கள் நினைத் தவை எல்லாம் நிறைவேறும், திருமணம் நடைபெறாது தவிப்பவர்களுக்குத் திருமணம் நடைபெறும்.

 குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கும். நோய்கள் எல்லாம் பறந்தோடிவிடும். எதிரிகள் அஞ்சி ஒதுங்கி ஓடுவார்கள். அகிலத்திரட்டு அம்மானை நூல் வீட்டில் இருந்தால், முன் வினைத்தோசம், தீயவினைகள், பேய் நடமாட்டம், ஆகியவை  வீட்டை நெருங்காது. திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நல்ல நிகழ்ச்சி களுக்கும் ஏழைகளுக்கும் அன்பளிப்பாக இந்த நூலை  வாங்கிக் கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு புண்ணியம் தேடி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக