அகிலம்
குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்
ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை
நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்
பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி
முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து
வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து
கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று
கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்
ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்
விளக்கம்:
இவ்வாறு இருந்து பேச்சு மூச்சின்றித் தவத்தின் உச்ச நிலையை அனுபவித்தோம். உமது அருளால் தீமையான பேச்சுகள் இல்லாமல் பன்னிரண்டு வருடங்கள் வரை தவத்தில் நின்றோம். இப்படித் தவத்தில் நின்ற காரணத்தால் எங்களைச் சுற்றிப் பெரிய புற்றுகள் தோன்றி மூடின. எங்கள் பக்கத்தில் ஆல் முளைத்து அதில் புறா இனங்கள் கூடி வாழ்ந்து முட்டை இட்டு மூன்ற முறைகள் குஞ்சுகள் பொரித்துவிட்டன. எங்களைச் சுற்றி வட்டமிட்டு அணி அணியாகக் காட்டில் உள்ள செடிகள் எல்லாம் வளைந்து சூழ்ந்து விட்டன. அக்காட்டில் உள்ள கடுவாய் கரடி ஆகியவை அப்புற்றிறன் அருகில் இருமுறை சக்தி வாய்ந்த குட்டிகள் ஈன்று அவை விரைவாக வளர்ந்தன. அவற்றோடு யானையின் குட்டிகள் பழகி அந்தப் புற்றின் அருகில் வாழ்ந்து வந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக