நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய
முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த
மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்
குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்
முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த
மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்
குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்
விளக்கம்:
========
இதைக் கேட்ட சுவாமி, நல்லதுதான், என்று கூறி நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் அறியும்படியாகக் கன்னியரை நோக்கி, பெண்களே, நீங்கள் முன்பு முல்லைவனத்தில் பெற்று வைத்த குழந்தைகள் ஏழுபேரையும் நான் இவ்வளவு காலமும் பிரியத்துடன் வளர்த்துப் பாதுகாத்து வந்தேன்.
========
இதைக் கேட்ட சுவாமி, நல்லதுதான், என்று கூறி நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் அறியும்படியாகக் கன்னியரை நோக்கி, பெண்களே, நீங்கள் முன்பு முல்லைவனத்தில் பெற்று வைத்த குழந்தைகள் ஏழுபேரையும் நான் இவ்வளவு காலமும் பிரியத்துடன் வளர்த்துப் பாதுகாத்து வந்தேன்.
அகிலம்:
=======
பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்
கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்
என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்
பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ
தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து
=======
பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்
கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்
என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்
பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ
தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து
விளக்கம்:
=========
நீங்கள் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பால்கூட கொடுக்காமல் அந்தப் பெரிய வனத்தில் விட்டுவிட்டு ஓடி விட்டீர். இப்போது மீண்டும் என்னிடம் வந்துள்ளீர். நான் இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்குப்பட்ட துன்பங்கள் எவ்வளவு. பொன்னைப் போன்று அருமை பொருந்திய கன்னிகளே, நான்பட்ட துன்பங்களை உங்களிடம் சொல்லித் தீருமோ. தெய்வேந்திரனுடைய பசுக் கூட்டங்களை அப்படியே அழைத்து வந்தேன்.
=========
நீங்கள் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பால்கூட கொடுக்காமல் அந்தப் பெரிய வனத்தில் விட்டுவிட்டு ஓடி விட்டீர். இப்போது மீண்டும் என்னிடம் வந்துள்ளீர். நான் இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்குப்பட்ட துன்பங்கள் எவ்வளவு. பொன்னைப் போன்று அருமை பொருந்திய கன்னிகளே, நான்பட்ட துன்பங்களை உங்களிடம் சொல்லித் தீருமோ. தெய்வேந்திரனுடைய பசுக் கூட்டங்களை அப்படியே அழைத்து வந்தேன்.
அகிலம்:
=======
மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு
ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து
மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்
=======
மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு
ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து
மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்
விளக்கம்:
=========
வண்டுகள் மொய்கின்ற வனத்தில் இருந்த இக்குழந்தைகளுக்கு அப்பசுக்களின் பாலைக் கறந்து ஊட்டி வளர்த்தேன். அதை அறிந்த இந்திரன் என்னை வசமாக ஒழித்துக் கட்ட பெரும்படையோடு வந்தான்.
=========
வண்டுகள் மொய்கின்ற வனத்தில் இருந்த இக்குழந்தைகளுக்கு அப்பசுக்களின் பாலைக் கறந்து ஊட்டி வளர்த்தேன். அதை அறிந்த இந்திரன் என்னை வசமாக ஒழித்துக் கட்ட பெரும்படையோடு வந்தான்.
அகிலம்:
========
தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை
ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்
மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்
========
தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை
ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்
மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்
விளக்கம்:
=========
அவன் பிடியில் அகப்படாது தப்பிப் பிழைத்து, இந்த குழந்தைகளைத் துன்பத்துடன் வளர்த்து வந்தேன். ஒப்பற்ற பால் அமிர்தத்தை ஒரு நாள் கூட விடாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகப் பனைமரங்களை வளர்த்தேன்.
=========
அவன் பிடியில் அகப்படாது தப்பிப் பிழைத்து, இந்த குழந்தைகளைத் துன்பத்துடன் வளர்த்து வந்தேன். ஒப்பற்ற பால் அமிர்தத்தை ஒரு நாள் கூட விடாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகப் பனைமரங்களை வளர்த்தேன்.
அகிலம்:
========
மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து
சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று
பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத்
துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்
வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்
========
மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து
சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று
பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத்
துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்
வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்
விளக்கம்:
=========
குழந்தைகளுக்காகப் பெருந்துன்பங்கள் அனுபவித்தேன். சொக்கராக உருவெடுத்து அன்றைக்கு வைகை ஆற்றுக்குச் சென்று இந்தப் பிள்ளைகள் வாழ்வதற்காகப் பிட்டுக்கு மண் சுமந்தேன். மேலும், இவர்களை இந்தப் பெரிய பூமியில் ஆள வைக்க வேண்டும் என்று நிறைவு கெட்ட இந்தக் கலியுகத்தில், சாணார்க் குலத்தில் வைகுண்டர் என்னும் பெயரோடு தோன்றி வந்தேன்.
=========
குழந்தைகளுக்காகப் பெருந்துன்பங்கள் அனுபவித்தேன். சொக்கராக உருவெடுத்து அன்றைக்கு வைகை ஆற்றுக்குச் சென்று இந்தப் பிள்ளைகள் வாழ்வதற்காகப் பிட்டுக்கு மண் சுமந்தேன். மேலும், இவர்களை இந்தப் பெரிய பூமியில் ஆள வைக்க வேண்டும் என்று நிறைவு கெட்ட இந்தக் கலியுகத்தில், சாணார்க் குலத்தில் வைகுண்டர் என்னும் பெயரோடு தோன்றி வந்தேன்.
அகிலம்:
========
பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்
சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்
கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து
அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்
பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்
சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்
கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்
========
பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்
சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்
கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து
அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்
பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்
சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்
கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்
விளக்கம்:
=========
சாணார் குலத்தில் மாயன் வாந்தாரோ என்று கூறிய சலிநீசன் என் கைகளைப் பிடித்துப் பின்புறமாக வைத்துக் கயிற்றினால் கட்டி இறுக்கி சாட்டைகளைக் கொண்டு அடித்து பெரிய விலங்கிலிட்டு, தனியான பேச்சுப் பேசி அவன் அரண்மனையில் என்னைச் சிறைவைத்து என்னை நோக்கி நாங்கள் உடல் ஒடுங்கிப் பணிவுடன் உன் பாதங்களை நித்தம்நித்தம் போற்றி பணிகின்றோம். நீ சாணார்க் குலத்துக்கு போக வேண்டாம் எங்களோடு இரு என்று கூறிவிட்டு என் சம்மதத்துக்காக என்னை அடித்தான்.
=========
சாணார் குலத்தில் மாயன் வாந்தாரோ என்று கூறிய சலிநீசன் என் கைகளைப் பிடித்துப் பின்புறமாக வைத்துக் கயிற்றினால் கட்டி இறுக்கி சாட்டைகளைக் கொண்டு அடித்து பெரிய விலங்கிலிட்டு, தனியான பேச்சுப் பேசி அவன் அரண்மனையில் என்னைச் சிறைவைத்து என்னை நோக்கி நாங்கள் உடல் ஒடுங்கிப் பணிவுடன் உன் பாதங்களை நித்தம்நித்தம் போற்றி பணிகின்றோம். நீ சாணார்க் குலத்துக்கு போக வேண்டாம் எங்களோடு இரு என்று கூறிவிட்டு என் சம்மதத்துக்காக என்னை அடித்தான்.
அகிலம்:
=======
பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென
இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து
=======
பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென
இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து
விளக்கம்:
=========
நான் பெற்ற பிள்ளைகள் எல்லாரும் பெருகித் தந்தை இலர் என்று அலைந்து போவார்களே என நினைத்து நான் நினைத்தால் முறித்து எறியக் கூடிய விலங்கில் சான்றோர்களுக்காக தலை கவிழ்ந்தபடி அமர்ந்து இருந்தேன்.
=========
நான் பெற்ற பிள்ளைகள் எல்லாரும் பெருகித் தந்தை இலர் என்று அலைந்து போவார்களே என நினைத்து நான் நினைத்தால் முறித்து எறியக் கூடிய விலங்கில் சான்றோர்களுக்காக தலை கவிழ்ந்தபடி அமர்ந்து இருந்தேன்.
அகிலம்:
========
சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்
பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்
பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்
மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது
என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்
மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்
========
சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்
பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்
பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்
மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது
என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்
மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்
விளக்கம்:
=========
நீசன் மந்திரச் சால வித்தைகளுடன் எனக்கு செய்த துன்பங்களைச் சான்றோர்க்காகவும், இவ்வுலகம் உண்மையை அறிவதற்காகவும் நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் பெண்களே, நீங்களோ பெற்றது மட்டும் போதும் என்று சென்று விட்டு இப்பொழுது மெதுவாக இங்கு வந்து நிற்கின்றீர்களே? என்றார்.
=========
நீசன் மந்திரச் சால வித்தைகளுடன் எனக்கு செய்த துன்பங்களைச் சான்றோர்க்காகவும், இவ்வுலகம் உண்மையை அறிவதற்காகவும் நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் பெண்களே, நீங்களோ பெற்றது மட்டும் போதும் என்று சென்று விட்டு இப்பொழுது மெதுவாக இங்கு வந்து நிற்கின்றீர்களே? என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக