புதன், 15 ஏப்ரல், 2015

அகிலம்

உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக்
கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி
ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று
மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து
பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து
வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து
காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து
வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து
மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக்
விளக்கம்
உடுத்திருந்த துணியின் மேல் அக்கறையின்றி எங்கள் தலைமுடி கலைந்த வண்ணம் கடுகளவு முனையுள்ள ஊசியில் கால் பெருவிரலை ஊன்றிய வண்ணம், ஆசை சுற்றத்தார்கள் உறவு போன்றவற்றை நீக்கி, மாய எண்ணங்களை அறுத்தெறிந்து மயங்குகின்ற வெறிகள், பாசம், பாதுகாக்கும் துணைகள் மறந்து வாசம் பொருந்திய பொருள்கள், வாயால் பேசுகின்ற பேச்சு, அந்தக் காட்டின் நினைவு, கனவு பயங்கள், வீட்டு நினைவு போன்றவற்றை தோன்றாதவாறு அறுத்தெரிந்து சகஸ்கார தள வெளி வீட்டைத் திறந்து மனம் நீர் கழிப்பது மறந்து சுவாசத்தின் போக்கினை நிறுத்தி வாழ்ந்தேம்.
சென்று விட்டு இப்பொழுது மெதுவாக இங்கு வந்து நிற்கின்றீர்களே? என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக