ஏகன்போக னப்பாநான் இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான் உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான் உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
விளக்கம்:
=========
அத்தனையும் அனுபவிப்பவன் நான் என்பதை அறிவார் இலர். மகிழ்வான கருவூர் (சகசுராரம்) விட்டு இவ்வுலகுக்கு மிகவும் வருந்தி வந்தேன். பாலனாகிய இந்தச் சிறுகுழந்தை(வைகுண்டர்) வந்த பாதையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளே உங்களுக்கு எல்லாக் கடமைகளையும் செய்வதற்காக நான் இவ்வுலகில் அவதாரம் எடுத்தேன்.
=========
அத்தனையும் அனுபவிப்பவன் நான் என்பதை அறிவார் இலர். மகிழ்வான கருவூர் (சகசுராரம்) விட்டு இவ்வுலகுக்கு மிகவும் வருந்தி வந்தேன். பாலனாகிய இந்தச் சிறுகுழந்தை(வைகுண்டர்) வந்த பாதையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளே உங்களுக்கு எல்லாக் கடமைகளையும் செய்வதற்காக நான் இவ்வுலகில் அவதாரம் எடுத்தேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
இருமனதா லெண்ணாதே பின்எனக்குஉத்தரம் சொல்வாயே
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே அந்த விசமதுதான் அனுகாதப்பா
===========================
இருமனதா லெண்ணாதே பின்எனக்குஉத்தரம் சொல்வாயே
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே அந்த விசமதுதான் அனுகாதப்பா
விளக்கம்:
========
நான் சொல்லுவதை நீ சந்தேகத்தோடு சிந்திக்காதே, அப்படிச் சிந்தித்தால் பிற்காலத்தில் எனக்கு நீ தகுந்த காரணம் கூற வேண்டிவரும். மருந்துவாழ் மலையில் வாழும் மாமுனிவனும் நானே. மாய சாலங்களைப் புரிந்து வரும் முனிவனும் நானே. இந்த நாடெல்லாம் நான் உபதேசங்கள் செய்து விட்டேன். அதற்குமேல் வைகுண்ட நாதனாகிய நான் என்ன செய்வேனப்பா? ஒழுங்காக நான் சொன்னபடி நீ செய்தால் எந்தவிதக் கர்மவினைகளும், காம இச்சையும் உன்னைத் தீண்டாது.
========
நான் சொல்லுவதை நீ சந்தேகத்தோடு சிந்திக்காதே, அப்படிச் சிந்தித்தால் பிற்காலத்தில் எனக்கு நீ தகுந்த காரணம் கூற வேண்டிவரும். மருந்துவாழ் மலையில் வாழும் மாமுனிவனும் நானே. மாய சாலங்களைப் புரிந்து வரும் முனிவனும் நானே. இந்த நாடெல்லாம் நான் உபதேசங்கள் செய்து விட்டேன். அதற்குமேல் வைகுண்ட நாதனாகிய நான் என்ன செய்வேனப்பா? ஒழுங்காக நான் சொன்னபடி நீ செய்தால் எந்தவிதக் கர்மவினைகளும், காம இச்சையும் உன்னைத் தீண்டாது.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
===========================
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
விளக்கம்:
=========
காம இச்சையை மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ, இறப்பின் முடிவினாலோ, அழிக்க முடியாது. எல்லாரிடமும் காம இச்சையாகிய பாம்பு பாசம் என்னும் வேறு உருவாகப் பிணைந்து ஆரவாரித்துக் கொண்டிருக்கிறது. அது நல்ல குணமுள்ளவரைத் தீண்டாது. வைகுண்ட நாதனாகிய நான் இதைச் சொல்லுகிறேன். முச்சந்தியாகிய மூலாதாரத்தில் இருந்து கொண்டு காம இச்சையாகிய பாம்பு தன் சக்தியைப் பெருக்கிக் கொண்டு வருகிறதப்பா.
=========
காம இச்சையை மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ, இறப்பின் முடிவினாலோ, அழிக்க முடியாது. எல்லாரிடமும் காம இச்சையாகிய பாம்பு பாசம் என்னும் வேறு உருவாகப் பிணைந்து ஆரவாரித்துக் கொண்டிருக்கிறது. அது நல்ல குணமுள்ளவரைத் தீண்டாது. வைகுண்ட நாதனாகிய நான் இதைச் சொல்லுகிறேன். முச்சந்தியாகிய மூலாதாரத்தில் இருந்து கொண்டு காம இச்சையாகிய பாம்பு தன் சக்தியைப் பெருக்கிக் கொண்டு வருகிறதப்பா.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
==========================
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு
ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
==========================
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு
ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி ஆக்கிவைக்க நான்வருவேன்
நாலுவகைக்கணக்கிலும் நான்தீர்ப்புச்செய்ததுண்டு
விளக்கம்:
=========
அய்யோ என்று அழுதாலும், பல நோன்புகள் செய்தாலும், கூப்பாடிட்டுக் கண்ணீர் வடித்தாலும், அது உன்னைக் கொத்தி விஷமாக்கி விடும். ஆண்களையும், பெண்களையும் இணைத்து ஆட்டி அவர்கள் இணைப்பு மூலம் உயர்நிலை ஆக்கி வைக்கவும் நான் வருவேன். சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நாலு வகைக் கணக்கிலும் அவரவர் நிலைக்கு ஏற்பத் தீர்ப்பு செய்வதுண்டு.
=========
அய்யோ என்று அழுதாலும், பல நோன்புகள் செய்தாலும், கூப்பாடிட்டுக் கண்ணீர் வடித்தாலும், அது உன்னைக் கொத்தி விஷமாக்கி விடும். ஆண்களையும், பெண்களையும் இணைத்து ஆட்டி அவர்கள் இணைப்பு மூலம் உயர்நிலை ஆக்கி வைக்கவும் நான் வருவேன். சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நாலு வகைக் கணக்கிலும் அவரவர் நிலைக்கு ஏற்பத் தீர்ப்பு செய்வதுண்டு.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
செம்பவளத்தேரறி நான்தேசமெல்லாம் பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம் அடிபிடிகள் அதிகமப்பா தேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடு ஆச்சுதப்பா
===========================
செம்பவளத்தேரறி நான்தேசமெல்லாம் பார்க்கவாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம் அடிபிடிகள் அதிகமப்பா தேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடு ஆச்சுதப்பா
விளக்கம்:
=========
செம்பவளத் தேரின் மேலேறித் தேசமெல்லாம் பார்க்க வருவேன். வம்புகளும் வசையான பேச்சுகளும் அதிகமாகி இறைவனை அடைகின்ற வழிகளை அறியாமல் இவ்வுலக மக்கள் மயங்கி வாழுகின்றார்கள். இத்தேசத்தில் ஆணவமும், பிறரை அடித்துப் பிடித்துத் துன்புறுத்துகின்ற நிலைகளும் அதிகமாகி விட்டன. கொலை களவு போன்ற தீயசெயல்கள் அதிகமாகி இவ்வுலக மக்களெல்லாரும் கேடு அடைந்து வருகிறார்கள்.
=========
செம்பவளத் தேரின் மேலேறித் தேசமெல்லாம் பார்க்க வருவேன். வம்புகளும் வசையான பேச்சுகளும் அதிகமாகி இறைவனை அடைகின்ற வழிகளை அறியாமல் இவ்வுலக மக்கள் மயங்கி வாழுகின்றார்கள். இத்தேசத்தில் ஆணவமும், பிறரை அடித்துப் பிடித்துத் துன்புறுத்துகின்ற நிலைகளும் அதிகமாகி விட்டன. கொலை களவு போன்ற தீயசெயல்கள் அதிகமாகி இவ்வுலக மக்களெல்லாரும் கேடு அடைந்து வருகிறார்கள்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
===========================
பெண்ணாலேஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்தரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லை மிகலிநமக்கு
===========================
பெண்ணாலேஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும்
ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்தரசர் முடிவாகுதடா
வறுமையதுதான் பெருத்து நீங்கள்வழிதப்பிப்போவீர்களே
பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லை மிகலிநமக்கு
விளக்கம்:
=========
பெண்களினால் ஆண்களின் அழிவும், ஆண்களினால் பெண்களின் அழிவும், இப்பூமி எங்கும் பெருகி வரும். அம்பலத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற வைகுண்ட இராசர் இவற்றை எல்லாம் முடித்து வைப்பார். இவ்வுலகில் வறுமை நிலை அதிகமாகி அதன் காரணத்தினால் நல்ல வழிகளிலிருந்து தப்பித் தவறு செய்வீர்கள். கவனமாய் இருங்கள். பொய்யும் புரட்டும் அதிகமாக தாண்டவமாடுகின்ற இக்கலி நமக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லாதது.
=========
பெண்களினால் ஆண்களின் அழிவும், ஆண்களினால் பெண்களின் அழிவும், இப்பூமி எங்கும் பெருகி வரும். அம்பலத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற வைகுண்ட இராசர் இவற்றை எல்லாம் முடித்து வைப்பார். இவ்வுலகில் வறுமை நிலை அதிகமாகி அதன் காரணத்தினால் நல்ல வழிகளிலிருந்து தப்பித் தவறு செய்வீர்கள். கவனமாய் இருங்கள். பொய்யும் புரட்டும் அதிகமாக தாண்டவமாடுகின்ற இக்கலி நமக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லாதது.
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக