மாலாண்மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
கந்தைத்துணிதோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன்
இன்னும்சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன்
ஆயிரத்தெட்டாம்மாசியிலே கலியுகத்தில்வந்தேனடா
விளக்கம்:
========
திருமாலாகிய ஆண்டியும் நானே, என்றும் மாறாத தன்மையுள்ள ஆண்டியும் நானே, கந்தைத் துணியைத் தோளில் இட்ட கந்தப்பனும், திருமாலும் ஆகிய நான் ஒரு சிறு ஆண்டியைப் போல் உங்களிடம் வருவேன். மேலும் சில காண்டங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்து எழுதி உங்கள் முன்னால் சொல்லுகிறேன், கேளுங்கள். ஆயிரத்து எட்டாம் ஆண்டு மாசி மாதத்தில் இக்கலியுகத்திலே நான் அவதாரம் எடுத்தேன்.
========
திருமாலாகிய ஆண்டியும் நானே, என்றும் மாறாத தன்மையுள்ள ஆண்டியும் நானே, கந்தைத் துணியைத் தோளில் இட்ட கந்தப்பனும், திருமாலும் ஆகிய நான் ஒரு சிறு ஆண்டியைப் போல் உங்களிடம் வருவேன். மேலும் சில காண்டங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்து எழுதி உங்கள் முன்னால் சொல்லுகிறேன், கேளுங்கள். ஆயிரத்து எட்டாம் ஆண்டு மாசி மாதத்தில் இக்கலியுகத்திலே நான் அவதாரம் எடுத்தேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
========================
சாதியானலிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா
ஆதியானலிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ
அதில், முத்தியுண்டு சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன்
கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன்
விளக்கம்:
========
உயர்வகையான இலிங்கம் ஒன்று சமுத்திரத்தின் (சகசுராரத்தின்) உள்ளே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆதிபரனாகிய அந்த இலிங்கத்தை நீங்கள் தினந்தினம் போற்றி ஒரு முகமாக மனதில் தியானித்து வாருங்கள். அப்படி செய்தால் உங்களுக்கு முக்தி நிலை வாய்க்கப்பெறும். அதனால் பெரும் சக்தி உங்களுக்குள் உருவாககும். முனிவனாகிய நான் இதை உபதேசிக்கிறேன். பல உருவங்களை எடுத்த நெடிய திருமாலும், பிரம்மாவும் ஆகிய நான் இப்போது புதிய வேசம் எடுத்து ஆடுகிறேன்.
========
உயர்வகையான இலிங்கம் ஒன்று சமுத்திரத்தின் (சகசுராரத்தின்) உள்ளே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஆதிபரனாகிய அந்த இலிங்கத்தை நீங்கள் தினந்தினம் போற்றி ஒரு முகமாக மனதில் தியானித்து வாருங்கள். அப்படி செய்தால் உங்களுக்கு முக்தி நிலை வாய்க்கப்பெறும். அதனால் பெரும் சக்தி உங்களுக்குள் உருவாககும். முனிவனாகிய நான் இதை உபதேசிக்கிறேன். பல உருவங்களை எடுத்த நெடிய திருமாலும், பிரம்மாவும் ஆகிய நான் இப்போது புதிய வேசம் எடுத்து ஆடுகிறேன்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா என் சித்துவித்தை அறிய மாட்டான்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான் அதையமர்த்த வல்லாருண்டோ
========================
நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா
செத்துச்செத்துப் பிறப்பே னடா என் சித்துவித்தை அறிய மாட்டான்
அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா
ஆடுதடா ஒருபம்பரம் தான் அதையமர்த்த வல்லாருண்டோ
விளக்கம்:
========
நித்தம் செத்துக் கொண்டிருப்பதும், பிறந்து கொண்டிருப்பதும் நானே, இவ்வாறு நித்தம் கொண்டிருக்கும் சாதுவான நான் தீயவர்களுக்கு மிகுந்த கொடுமைக்காரன் ஆவேன். நித்தம் செத்துக் கொண்டே இருப்பதைப் போல பிறந்து கொண்டும் இருக்கின்றேன். என் சித்துகளையும், விளையாட்டுகளையும் அறியமாட்டீர்கள். இரவு பகலும் பல இரகசிய வழிகளை உங்களுக்குச் சொல்லி விட்டு இப்போது முடிக்கின்ற நேரமாகும். குண்டலினி சக்தியாகிய பம்பரம் உன்னுள்ளே ஆடிக் கொண்டே இருக்கின்றது. அதைத் தவறான வழியில் செல்லாமல் ஒருநிலைப் படுத்தி அதன் ஆட்டத்தைச் சீர்படுத்திக் கட்டுக்குள் ஆக்கிப் பலன் பெறும் வல்லமை உள்ளவர்கள் இங்கு ஒருவரும் இலர்.
========
நித்தம் செத்துக் கொண்டிருப்பதும், பிறந்து கொண்டிருப்பதும் நானே, இவ்வாறு நித்தம் கொண்டிருக்கும் சாதுவான நான் தீயவர்களுக்கு மிகுந்த கொடுமைக்காரன் ஆவேன். நித்தம் செத்துக் கொண்டே இருப்பதைப் போல பிறந்து கொண்டும் இருக்கின்றேன். என் சித்துகளையும், விளையாட்டுகளையும் அறியமாட்டீர்கள். இரவு பகலும் பல இரகசிய வழிகளை உங்களுக்குச் சொல்லி விட்டு இப்போது முடிக்கின்ற நேரமாகும். குண்டலினி சக்தியாகிய பம்பரம் உன்னுள்ளே ஆடிக் கொண்டே இருக்கின்றது. அதைத் தவறான வழியில் செல்லாமல் ஒருநிலைப் படுத்தி அதன் ஆட்டத்தைச் சீர்படுத்திக் கட்டுக்குள் ஆக்கிப் பலன் பெறும் வல்லமை உள்ளவர்கள் இங்கு ஒருவரும் இலர்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
========================
காணுங்குறிசொல்லுதற்கு கழுகுமலையாண்டிவந்தேனடா
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
காரணத் தெய்வம் என்ற எனக்குக் கடன் செலுத்த யாருமில்லை
இனிதேனமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா
உங்கள் குலதெய்வமென் றுஎனக்குக்கடன் செலுத்தயாருமில்லை
காரணத் தெய்வம் என்ற எனக்குக் கடன் செலுத்த யாருமில்லை
விளக்கம்:
========
இவ்வாறு நான் கண்ட பல இரகசிய வழிகளை உங்களிடம் சொல்ல சகசுராரத்தில் ஆட்சி புரிந்த ஆண்டியாக இருந்த நான், இங்கே வந்தேன். இனிமேல் சகசுராரத்தில் அமுதம் உருவாகின்ற மலர் மீதிருந்து பல சிறப்புக்களைத் தகுதி பெற்றவருக்குச் செய்வேன். உங்களது குலத் தெய்வமானதும் வைகுண்டருமாகிய என்னை உபசரித்து பணிவிடைகள் செய்வதற்கு யாரும் இலர். எல்லா தெய்வங்களுக்கும் மூலமாகிய காரணத் தெய்வம் நான் தான் என்பதைப் புரிந்து கொண்டு எனக்கு வேண்டிய கடமைகளைச் செலுத்த இங்கு யாரும் இலர்.
========
இவ்வாறு நான் கண்ட பல இரகசிய வழிகளை உங்களிடம் சொல்ல சகசுராரத்தில் ஆட்சி புரிந்த ஆண்டியாக இருந்த நான், இங்கே வந்தேன். இனிமேல் சகசுராரத்தில் அமுதம் உருவாகின்ற மலர் மீதிருந்து பல சிறப்புக்களைத் தகுதி பெற்றவருக்குச் செய்வேன். உங்களது குலத் தெய்வமானதும் வைகுண்டருமாகிய என்னை உபசரித்து பணிவிடைகள் செய்வதற்கு யாரும் இலர். எல்லா தெய்வங்களுக்கும் மூலமாகிய காரணத் தெய்வம் நான் தான் என்பதைப் புரிந்து கொண்டு எனக்கு வேண்டிய கடமைகளைச் செலுத்த இங்கு யாரும் இலர்.
சிவகாண்ட அதிகாரப்பத்திரம்:
========================
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
========================
ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள்ஈடழிந்துபோனீர்களே
மகாலிங்கம் சொக்கலிங்கம் மாயமுத்து சோதிலிங்கம்
ஒருமுத்துலோகமுத்து இந்த உலகமெங்கும் பெருத்தமுத்து
ஏகமுத்து நாகமுத்து எங்கும்முழு முத்தானேன்
விளக்கம்:
========
என் குழந்தைகளே, நீங்கள் எனக்கு வேலை செய்கின்ற பிசாசுகளை நம்பி அவற்றால் சக்திகளெல்லாம் அழிந்து நிற்கின்றீர்களே, மகாலிங்கம், சொக்கலிங்கம், மாயமுத்து சோதிலிங்கம், லோகமுத்து, இவ்வுலகமெல்லாம் பெருத்த முத்து, ஏகமுத்து, நாகமுத்து எல்லாம் ஒரே முத்து தான். அந்த ஒரே முழுமுத்துவும் நானே.
========
என் குழந்தைகளே, நீங்கள் எனக்கு வேலை செய்கின்ற பிசாசுகளை நம்பி அவற்றால் சக்திகளெல்லாம் அழிந்து நிற்கின்றீர்களே, மகாலிங்கம், சொக்கலிங்கம், மாயமுத்து சோதிலிங்கம், லோகமுத்து, இவ்வுலகமெல்லாம் பெருத்த முத்து, ஏகமுத்து, நாகமுத்து எல்லாம் ஒரே முத்து தான். அந்த ஒரே முழுமுத்துவும் நானே.
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக