அம்மை மார்களுக்கு மதலை ஈதல்:
================================
இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே
நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி
மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்
================================
இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே
நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி
மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்
விளக்கம்:
=========
=========
இப்படியாக இல்லற வாழ்க்கையை உலகோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சமயம், தமது மனைவிகளாகிய தெய்வக்கன்னியர் கேட்டபடி அவர்களுக்குக் குழந்தைகள் கொடுக்க வைகுண்டர் மனதில் நினைத்தார்.
அகிலம்:
=======
குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்
ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து
நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி
வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க
ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க
பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்
வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே
கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்
விண்ணாண மாக வீரநா ராயணரை
=======
குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்
ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து
நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி
வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க
ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க
பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்
வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே
கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்
விண்ணாண மாக வீரநா ராயணரை
விளக்கம்:
=========
தாம் நினைத்தபடியே, பூலோகக் குழந்தைகளில் யார் யாருடைய குழந்தைகளென்று கூறி ஏழுகன்னிகளுக்கும் தனித்தனியாக குழந்தைகளைக் கொடுத்துவிடச் சமயம் வந்து விட்டது என்று நினைத்தபடி ஞாயிற்றுக் கிழமைத் திருநாள் சமயம் நாராயணர் மகிழ்ச்சி பொங்க ஆடியவண்ணம் இருந்தார். இப்படியாக திருவிழா நடந்து கொண்டிருந்தது. அங்கே உயர்வான சான்றோர் குல மக்கள் எல்லாரும் கூடி நின்றார்கள். இப்படிப் பிள்ளைகளைக் கன்னியர் ஏழுபேருக்கும் இன்று கொடுக்க வேண்டுமென்று நினைக்கின்ற வேளையில், கண்ணைப் போன்ற தெய்வக் கன்னியர் எல்லாரும் வெட்கத்தோடு வீர நாராயணரைப் பார்த்து பேசலாயினர்.
=========
தாம் நினைத்தபடியே, பூலோகக் குழந்தைகளில் யார் யாருடைய குழந்தைகளென்று கூறி ஏழுகன்னிகளுக்கும் தனித்தனியாக குழந்தைகளைக் கொடுத்துவிடச் சமயம் வந்து விட்டது என்று நினைத்தபடி ஞாயிற்றுக் கிழமைத் திருநாள் சமயம் நாராயணர் மகிழ்ச்சி பொங்க ஆடியவண்ணம் இருந்தார். இப்படியாக திருவிழா நடந்து கொண்டிருந்தது. அங்கே உயர்வான சான்றோர் குல மக்கள் எல்லாரும் கூடி நின்றார்கள். இப்படிப் பிள்ளைகளைக் கன்னியர் ஏழுபேருக்கும் இன்று கொடுக்க வேண்டுமென்று நினைக்கின்ற வேளையில், கண்ணைப் போன்ற தெய்வக் கன்னியர் எல்லாரும் வெட்கத்தோடு வீர நாராயணரைப் பார்த்து பேசலாயினர்.
அகிலம்:
========
========
கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்
இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக
விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்
மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்
விளக்கம்:
=========
கண்ணரே, கருமை நிறமான திருமாலே, எல்லாவற்றிற்கும் காரணமான குருவே, அய்யாவே, உலகை அளந்தவரே, இன்று எங்கள் குழந்தைகளை எடுத்து எங்களிடம் தனித்தனியாகப் பிரித்து வானோர்கள் புகழும்படியாக மகிழ்ச்சியுடன் எங்கள் கைகளில் தந்து, கலியழித்து வெற்றி கொண்டு எங்கள் ஆட்சி செய்வீராக.
=========
கண்ணரே, கருமை நிறமான திருமாலே, எல்லாவற்றிற்கும் காரணமான குருவே, அய்யாவே, உலகை அளந்தவரே, இன்று எங்கள் குழந்தைகளை எடுத்து எங்களிடம் தனித்தனியாகப் பிரித்து வானோர்கள் புகழும்படியாக மகிழ்ச்சியுடன் எங்கள் கைகளில் தந்து, கலியழித்து வெற்றி கொண்டு எங்கள் ஆட்சி செய்வீராக.
அகிலம்:
========
நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே
மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே
இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்
செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்
========
நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே
மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே
இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்
செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்
விளக்கம்:
=========
எங்கள் பராணநாதனாக நிற்கும் குருவே, செப்புச் சிலையை ஒத்த எங்களை விரும்புகின்ற எங்கள் கணவரே, மாதவரே, இன்று உதித்துள்ள நாள் மிகவும் நல்ல நாள் ஆகும். எனவே, இப்பொழுதே எங்கள் குழந்தைகளை எடுத்து தருவீராக என்று கன்னியார் கேட்டனர்.
=========
எங்கள் பராணநாதனாக நிற்கும் குருவே, செப்புச் சிலையை ஒத்த எங்களை விரும்புகின்ற எங்கள் கணவரே, மாதவரே, இன்று உதித்துள்ள நாள் மிகவும் நல்ல நாள் ஆகும். எனவே, இப்பொழுதே எங்கள் குழந்தைகளை எடுத்து தருவீராக என்று கன்னியார் கேட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக