புதன், 15 ஏப்ரல், 2015

அகிலம்:

தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்
பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த
உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ
நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை
தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து
பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்
வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்
தந்து புவியாளத் தலைவரே யும்முடைய
விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்
விளக்கம்:
இப்படி நாங்கள் பெற்ற குழந்தைகளுக்காக் கடுமையான தவமி்ருந்த உண்மைகளை எல்லாம் எடுத்து சொல்லுவது என்றால் அது எளிதான காரியம் ஆகுமா? நாங்கள் நாணமற்று உண்ண உணவுமற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் வரை சிவவே தஞ்சம் என்று கடினமாகத் தவம் புரிந்து வந்தோம். பிள்ளைகளை உம்மிடமிருந்து பெறுவதற்குரிய ஆசையினால் இப்பூவுலகுக்கு வந்தோம். வள்ளலாகிய நீர் இப்பொழுது எங்கள் குழந்தைகளையும், அவர்களின் சந்ததியாரையும் விரைவாகத் தந்து இந்த இராசியத்தையும் ஆள வைப்பீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக