ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி திருமண முறை

 அய்யாவின் அவதார காலத்திற்கு முன்பும், அவர் அவதார காலத்திலும் பிராமணர்கள் அதிகமாக இருந்தனார். சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஆலயங்களில் பூஜைகள் செய்தனர். திருமண மந்திரங்களும் சமிஸ்கிருத மொழிகளில் மட்டுமே இருந்தன.

      சமிஸ்கிருத மொழி தேவர்களின் மொழி எனவும்,அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர்.

     ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தினார்.

      அய்யா வழி திருமண என்றால் புதுப் பாணியில் தமிழ் மொழியில் திருமண மந்திரங்கள் ஓதப்படும்.

      அய்யா வழி திருமணத்தில் மணப்பைண்ணும், மணமகனும் தெற்குப் பக்கத்தில் நோக்கி அமர்ந்திருக்க , அவர்களுடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார்.

     திருமணத்தில் அய்யா அருளிய கல்யாண வாழ்த்து பாடல் படிக்கப்படும்.

 " மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ" என்ற 56 வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும்.

    குரு அதைப் படிக்க கூடிய உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவார்கள்.

       "அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுத்து " என்ற வரியை குரு 5 முறை படிப்பார். அதன் பின் குரு தாலியை எடுத்துக் மணமகன் கையில் கொடுத்து பின்

         " சிவ  சிவா என்று சொல்லி திருச்சரடு சேர்த்தனரே " என குரு படிக்க மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவான்.

        கல்யாண வாழ்த்தில் உள்ள மற்ற வரிகள் மணமக்களை வாழ்த்தும் வரிகள்.
     
        மணமக்கள் மணவறையை 5 முறை சுற்றி வருவர்களவ . பின் திருமணம் நிறைவேறிவிடும்.
     
        இதுவே அய்யா வழி திருமண முறை.

அய்யா வழி மஞ்சள் நீராட்டு விழா முறை

அய்யா வழி மக்கள் பெண்கள் பூப்பெய்திய நாளிலிருந்து 41 நாட்கள் கழித்து தான் சடங்கு முறைகளை நடத்துவர்.
         
          அதுவரை பூப்பெய்திய பெண் வீட்டார் புனித இடங்களுக்கு செல்வது கிடையாது.

            அதன் பின்னர் ஒரு அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று 5 முறை பதம் எடுத்து எரித்து தீட்டினை அகற்றி கொள்ளலாம் அல்லது வீட்டில் வைத்து சடங்கு செய்ய நினைப்பவர்கள் அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்தில் உள்ள பணிவிடை காரர் வீட்டிற்கு அழைத்து 5 முறை பதம் எரிந்து தீட்டினை போக்கி கொள்ளலாம்.


அய்யா உண்டு

அய்யா வழி புதுமனை புகுவிழா முறை

அய்யா வழி மக்கள் புதுமனை புகுவிழா வின் போது அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்தில் இருக்கும் பணிவிடை கரரை அழைத்து இல்லத்தில் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.

             பணிவிடைகரார் என்றால் யார் ?

             அய்யா வழிபாட்டு தலத்தில் பூஜை என்னும் முறை கிடையாது.அய்யாவிற்கு பணிவிடை மட்டுமே.அத்த பணிவிடையை செய்பவர்கள் பணிவிடைக்கரார் என அழைக்கப்படுகிறர்கள்.

               புதுமனை புகுவிழா வில் விளக்கு ஏற்றி வீட்டின் நடுவே புதுபானை வைத்து.அதில் திருநாமம் இட்டு பாலை பொங்க  விடுவார்கள். பால் பொங்கும் நேரத்தில் குழசை ஓசை முழங்க , அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா என சொல்லி பானையை இறக்கி வைப்பார்கள்.

                பிறகு வெற்றிலை ,பாக்கு, பழம் முதலியவை வைத்து அய்யாவிடம் மாப்பு கேட்டு.அய்யா அருளிய உகப்படிப்பு படித்து அய்யா அருள் பெருவர்கள்.

                 பின் அந்த பாலை தருமம் இடுவார்கள்.

                புசனிக்காய் உடைப்பது , தேங்காய் உடைப்பது அய்யா வழிபாட்டு க்கு எதிரனது .எனவே அதை செய்யமாட்டார்கள்.

அய்யா உண்டு

அய்யா வழியில் குழந்தைக்கு பெயர் இடும் முறை

 குழந்தை பிறந்த 41 நாள் கழித்து அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று அய்யாவின் பள்ளியறை முன் குழந்தையை வைத்து அய்யாவின் ஆசியை பெற வேண்டும்.
         
            குழந்தைக்கு பெயாடும் போது அய்யா நிச்சயித்தப்படி பெயரிடுக்கிறோம் என சொல்லி, 5 முறை குழந்தையின் பெயரை கூறிக்,குழந்தையின் மேல் முத்திரி பதம் தெளித்து ,பின்பு வெற்றித் திருநாமம் சூட்ட வேண்டும்.

            அதுபோலவே குழந்தைக்கு முடி இறக்கும் போது , அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று அய்யா நிச்சயித்த படி முடி இறக்க வேண்டும் என சொல்லி , பின் முத்திரி பதம் தெளித்து , முடி இறக்க வேண்டும். அதுபோலவே , பெண் குழந்தைக்கு காது கூத்து விழாவும் நடைபெரும்.

        குழந்தைக்கு முதலில் அன்னம் கொடுக்கும் போது தலைமைப்பதி உள்ள நித்தியப்பால் வாங்கி கொடுக்கலாம், முடியாதவர்கள் அய்யா நிச்சயித்தபடி அன்னம் கொடுக்கிறோம் என்று சொல்லி முத்திரி பதம் சிறிது வாயில் இட்டு, பின் அன்னம் கொடுக்க வேண்டும்.

              அய்யா உண்டு