கன்னியர் மதலை கேட்டலும் சுவாமியின் பதிலும்:
==============================================
==============================================
நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே
வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்
ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே
வைய மளந்த மாயத் திருமாலே
எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய
மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார்
வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்
ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே
வைய மளந்த மாயத் திருமாலே
எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய
மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார்
விளக்கம்:
இவ்வாறாக உயர்வு பொருந்திய வைகுண்டர் அங்கே வீற்றிருக்கின்ற பொழுது மேன்மை பொருந்திய கன்னியர் வைகுண்டரிடம் வந்து, அவரை நோக்கி, அய்யாவே, எங்களையும் ஆட்சி புரிந்து வருகின்ற திருமாலே, இவ்வுலகத்தை அளந்தவரே, எங்களை நீர் இவ்வுலக் மக்கள் அறிய மங்களகரமாகத் திருமணம் முடித்து விட்டீர். இனி எங்களுக்கு உமது வாக்குறுதியின்படி குழந்தைகளைத் தந்தருள வேண்டும் என்று கேட்டனர்.
அகிலம்:
========
அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்
இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு
நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்
வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்
அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ
========
அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்
இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு
நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்
வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்
அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ
விளக்கம்:
=========
அப்பொழுது வைகுண்டர் அவர்களை நோக்கி, பெண்களே, இப்பொழுது நீங்கள் என்னிடம் கேட்ட குழந்தைகளைத் தருவதற்கு ஒரு நல்ல நேரம் வர இருக்கிறது. அந்த நல்ல நாளில் எல்லா வகையிலும் சிறப்புப் பொருந்திய குழந்தைகளைத் தந்து அருள்வோம். அதுவரை நீங்கள் மனம் கலங்காமல் அமைதியாய் இருங்கள் என்றார்.
=========
அப்பொழுது வைகுண்டர் அவர்களை நோக்கி, பெண்களே, இப்பொழுது நீங்கள் என்னிடம் கேட்ட குழந்தைகளைத் தருவதற்கு ஒரு நல்ல நேரம் வர இருக்கிறது. அந்த நல்ல நாளில் எல்லா வகையிலும் சிறப்புப் பொருந்திய குழந்தைகளைத் தந்து அருள்வோம். அதுவரை நீங்கள் மனம் கலங்காமல் அமைதியாய் இருங்கள் என்றார்.
அகிலம்:
=======
இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்
வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக
வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்
ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்
=======
இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்
சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்
வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக
வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்
ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்
விளக்கம்:
=========
ஏழு கன்னிகளும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பிறகு வழக்கம்போல் சுவாமிக்கு மனைவியாக வாய்த்த இலட்சுமியும் அந்த ஏழு கன்னிகளும் தினந்தோறும் எல்லாவகையான பணிவிடைகளையும் விரைவாகச் செய்து வந்தனர்.
=========
ஏழு கன்னிகளும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பிறகு வழக்கம்போல் சுவாமிக்கு மனைவியாக வாய்த்த இலட்சுமியும் அந்த ஏழு கன்னிகளும் தினந்தோறும் எல்லாவகையான பணிவிடைகளையும் விரைவாகச் செய்து வந்தனர்.
அகிலம்:
=======
நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து
காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்
=======
நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து
காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்
விளக்கம்:
=========
எல்லாவற்றுக்கும் காரணமான வைகுண்டரும், தமது மனைவிகளைத் தேடி அவர்களைப் புகழ்ந்து பேசி, அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து மகிழ்ச்சியுடன் இருந்தார்.
=========
எல்லாவற்றுக்கும் காரணமான வைகுண்டரும், தமது மனைவிகளைத் தேடி அவர்களைப் புகழ்ந்து பேசி, அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து மகிழ்ச்சியுடன் இருந்தார்.
அகிலம்:
=======
நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க
எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி
சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத்
தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்
=======
நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க
எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி
சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத்
தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்
விளக்கம்:
=========
அப்பொழுது எட்டுத் திசைகளில் உள்ள சான்றோர் மக்களும் அவரை நாடி வந்து அவர் பாதங்களை வாழ்த்திப் போற்றிப் பணிவாக நின்று விழுந்து வணங்கி அவரவர் மனதில் உள்ளவற்றை எல்லாம் வைகுண்டரிடம் மனம் விட்டுக் கூறி தங்களுடைய துன்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அவரிடம் விடை பெற்றுத் திரும்பிச் சென்றனர்.
=========
அப்பொழுது எட்டுத் திசைகளில் உள்ள சான்றோர் மக்களும் அவரை நாடி வந்து அவர் பாதங்களை வாழ்த்திப் போற்றிப் பணிவாக நின்று விழுந்து வணங்கி அவரவர் மனதில் உள்ளவற்றை எல்லாம் வைகுண்டரிடம் மனம் விட்டுக் கூறி தங்களுடைய துன்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அவரிடம் விடை பெற்றுத் திரும்பிச் சென்றனர்.
அகிலம்:
=======
தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்
வைய மகிழ மனுப்போலு மிருந்தார்
வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்
ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்
=======
தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்
வைய மகிழ மனுப்போலு மிருந்தார்
வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்
ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்
விளக்கம்:
=========
தெய்வமாகவும், உயர்வு பொருந்திய உள்ளம் உள்ளவராகவும் அவர் இருந்து கொண்டு, வையகம் மகிழும்படியான மனிதனைப் போன்றும் அவர் இருந்தார். சொத்து, மாடு, ஆடு போன்ற எல்லாவகைச் சொத்துக்களையும் அனுபவித்து, அவற்றோடு இணைந்து, இல்லற ஒழுக்கத்தோடு அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.
=========
தெய்வமாகவும், உயர்வு பொருந்திய உள்ளம் உள்ளவராகவும் அவர் இருந்து கொண்டு, வையகம் மகிழும்படியான மனிதனைப் போன்றும் அவர் இருந்தார். சொத்து, மாடு, ஆடு போன்ற எல்லாவகைச் சொத்துக்களையும் அனுபவித்து, அவற்றோடு இணைந்து, இல்லற ஒழுக்கத்தோடு அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக