செவ்வாய், 18 நவம்பர், 2014

அய்யா வைகுண்டர் அவதாரம்

மக்களை காப்பாற்ற, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20–ம் நாள் திருச்செந்தூர் திருப்பாற்கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து விஞ்சை என்ற ஆழ்ந்த சுய ஞானத்தோடு, 8 ஆயிரம் கோடி சூரிய பிரகாச ஒளியுடன் அய்யா வைகுண்டர் வெளிவந்தார். திருச்செந்தூரை அடுத்த தருவைக்கரை என்ற இடத்தை அடைந்த போது தெய்வமும் அவராய், திரு உள்ளமும் அவராய், மனிதன் கண் காண மனுச்சொரூபம் எடுத்தார். இவ்வாறு கலி அழிக்க அய்யா வைகுண்டர் அவதரித்த அந்த நாள்,  அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித ரூபம் எடுத்த வைகுண்டர் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு தெட்சணம் என்று அழைக்கப்படும் சுவாமிதோப்பில் வந்திருந்து கலி என்ற மாயையை அறுக்க 6 வருடம் அருந்தவம் புரிந்தார். கலியை அழிக்க மக்களுக்கு அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக கொடுத்தார். சாதி, மத பேதம், தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளை அருளினார். இந்த கலியை அழிக்க வேண்டுமென்றால் எவ்வாறு வாழவேண்டும் என்பதை கற்று உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அகிலத்திரட்டு அம்மானை என்ற ஆகமத்தை அருளினார். கலியை அழிக்க அன்பு ஒன்றே முதன்மை வழி என்று அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

கலியின் பிறப்பு

துவாபர யுகம் முடியும் தருவாயில் பூமி வெடிப்பது போல் ஒரு சத்தம். அந்த வெடித்த பூமியில் தலைகீழாக பிறந்தான் கலிநீசன். இந்த கலியன் பிறந்து சிவப்பெருமானிடம் பல வரங்கள் பெற்றான். இறைவனின் மூலசக்திகளை வரமாக வாங்கினான். மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டான். இவ்வாறு மேலோகமும், பூலோகமும் நடுங்க பல வரங்களை வேண்டி பெற்றான். வரங்களை பெற்ற கலியன் சான்றோர்களை கொடுமை செய்தான். ஒவ்வொருவரின் மனதில் புகுந்து ஆட்டி படைத்தான்.
கலி என்பது உருவம் அல்ல. அது மனிதனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். இந்த கலியுகத்தில் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கும் கலியை அழிக்க மும்மூர்த்திகளும் திருவுள்ளம் கொண்டனர்.

மகாவிஷ்ணுவின் கோபம்

அதைத்தொடர்ந்து வந்த திரேதாயுகத்தில் 10 பெரிய மலைகளை 10 தலைகளாக்கி ராவணனை பிறவி செய்தார். அவனுக்கு தம்பி விபீஷணன் மூலம் புத்தி சொல்லப்பட்டது. அதுவும் காதில் ஏறாததால், ராம பாணத்தால் அவனை திருமால் கொன்றார். அடுத்த யுகம் துவாபர யுகம். இந்த யுகத்தில் துரியோதனாக பிறவி செய்தார். அவனும் அநீதியின் மறு உருவமாய் திகழ்ந்தான். அப்போது பீஷ்மர் புத்தி கூறியும் அவன் கேட்கவில்லை. போர்க்களத்தில் பீமன், தனது கதாயுதத்தால் அவனை அடித்து கொன்றார். அவன் உயிர் போகும் தருவாயில் திருமாலைப் பார்த்து, ‘உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பீமனின் கதாயுதம் தான் என்னை துவம்சம் செய்தது’ என்று ஆணவமாக கூறினான்.
அப்போது மகாவிஷ்ணு கோபமுற்று அவனை பார்த்து, ‘கடந்த 6 யுகங்களிலும் நீ அரக்கனாக பிறந்து நீதிக்கு புறம்பாய் நின்றாய். ஆகவே உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய். அடுத்து வரும் கலியுகத்தில் கலிநீசனாக உன்னை பிறப்பித்து, உன் ஆயுள் கணக்கு முடியும் வரை அடுத்தடுத்து பிறவி செய்வேன். சிரசு ஒன்றாகவும், அறிவு புத்தியோடும், ஆணவங்கள் தன்னோடும், நல்ல கலையுணர்வோடும், என்னை நினைக்க நல்ல மனமும் தந்து உன்னை பிறவி செய்வேன். அப்போது என்னை அறியாமல், உணராமல், தர்ம நெறி தவறினாய் என்றால் தன்னாலே நரகத்தில் சேர்ந்து விடுவாய்’ என்று கூற துரியோதனன் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.

அசுரனின் ஆணவம்

அடுத்த யுகமாகிய கிரேதாயுகத்தில் சூரபத்மன், சிங்காமுகாசுரன் என்ற அசுரர்களை சகோதரர்களாக பிறவி செய்தார்கள். இந்த அசுரர்களும் சிவப்பெருமானிடம் பல வரங்களை பெற்று இந்த உலகம் முழுவதையும் அடக்கி ஆட்சி செய்தனர். வானுலக தேவர்களையும், தேவேந்திரனையும் அடிமையாக்கி சிறைப்படுத்தினார்கள். இந்த அசுரர்களுக்கு வீரபாகு தேவர் மூலம் புத்தி கூறப்பட்டது. அதையும் கேட்காத காரணத்தால், திருமால் ஆறுமுக கடவுளாக தோன்றி சக்தி என்ற வேலாயுதத்தால் அசுரர்களை சாய்த்தார். அசுரர்கள் உயிர்விடும் வேளையில், உனக்கு உரைத்த நல்மொழிகளை கேட்டு அதன்படி நடந்து இருந்தால் இப்போது நான் உன்னை கொன்று இருக்கமாட்டேன் என்று திருமால் சொன்னார்.
அப்போது அந்த அசுரர்கள் ‘நீயா என்னை வீழ்த்தினாய்?, இல்லை சக்தி என்ற வேல் தான் என்னை வதம் செய்தது’ என்று கூறி உயிர் விட்டனர். அதே யுகத்தில் மற்றொரு துண்டம் இரணியனாக படைக்கப்பட்டது. அவனுக்கு தன் மகன் பிரகலாதன் மூலம் புத்தி சொல்லப்பட்டது. அதுவும் கேட்காத காரணத்தால் திருமால், நரசிம்மராக வந்து அவனை வதைத்தார். அவன் உயிர் விடும் நேரத்தில் 10 பெரிய மலைகளை உன்னுடைய நகங்களாக்கி என்னை கொன்றாயே தவிர நீ என்னை வதம் செய்யவில்லை என்று கூறி மாண்டான்.

6 துண்டுகளாக வெட்டினார்

அப்போது பூதகுரு முனிவர், அந்த அசுரனுக்கு புத்திமதி கூறினார். அவரது வார்த்தைகளை கேட்காமல் தொடர்ந்து அழிவு செயலில் இறங்கினான். இதனால் கோபம் அடைந்த மகாவிஷ்ணு, குரோனியை 6 துண்டுகளாக வெட்டி உலகில் தள்ளினார். அத்துடன் முதல் யுகமாகிய நீடிய யுகம் நிறைவு பெற்றது. இரண்டாவது யுகமாகிய சதிர யுகத்தில் குரோனியின் முதல் துண்டத்தை குண்டோம சாலியனாக பிறவி செய்யப்பட்டது. இந்த அசுரன் பிறந்த நேரத்தில் உலகெங்கும் அமைதி குலைந்தது. உலகுக்கு பெருங்கேடு வரப்போகிறது என்று உணர்ந்து, கோவி ரிஷி மூலம் அவனுக்கு அறிவுரை கூறப்பட்டது. அதை கேட்காத காரணத்தால் திருமால் அவனை அழித்து அந்த யுகத்தை நிறைவு செய்தார்.
மூன்றாவது யுகமாகிய நெடிய யுகத்தில் குரோனியின் 2–வது துண்டத்தை தில்லை மல்லாலன், மல்லோசி வாகனன் ஆகிய இரு அசுரர்களாக பிறக்கும்படி செய்தார்கள். இருவரும் வையகத்தை ஆள வழிகொண்டார்கள். மண்ணுலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் இருள்படியும் அளவுக்கு ஆட்சி அமைந்தது. இவர்களுக்கு ரோம ரிஷி சில அறிவுரைகளை வழங்கினார். அதை சிறிதும் பொருட்படுத்தாததால் திருமால் மந்திரபுரி கணையால் அந்த 2 அசுரர்களையும் அழித்து நெடிய யுகத்தை நிறைவு செய்தார்.

அய்யா வைகுண்டர் அவதார தினம்

கப்பரம்பொருளான இறைவன் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளாக சமைந்து இந்த பிரபஞ்சத்தை படைத்தார். இதையடுத்து சிவப்பெருமான் திருவேள்வி ஒன்றை வளர்த்தார். வேள்வி நன்றாய் வளர்ந்து வரும் வேளையில் குரோனி என்ற அசுரன் கொடிய தோற்றத்துடன் பிறந்தான். இவன் பிறந்த உடனே பல காலம் தூங்கி விட்டான். தூக்கம் கலைந்து எழுந்ததும் பசியால் ஆர்ப்பரித்தான். கடல் நீரை பருகினான். இந்த உலகத்தையே விழுங்க முற்பட்டான்.

அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறைகள்

1. வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.

2. கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.

3. அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.

4. பசுவுக்கு புல்லும், வைக்கோலும் கொடுப்பது.

5. சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.

6. வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.

7. திண்பண்டம் நல்கல்.

8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.

9. அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.

10. அனாதைப்பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.

11. தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.

12. வாசனைப் பொருட்களை கொடுப்பது.

13. நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.

14. துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.

15. நாவிதர்களுக்கு உதவி செய்வது.

16. ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.

17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.

18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.

19. திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.

20. பிறர் துன்பம் தீர்ப்பது.

21. தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.

22. மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.

23. சாலைகள் அமைத்து கொடுப்பது.

24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.

25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.

26. மிருகங்களுக்கு உணவளிப்பது.

27. சுமைதாங்கி நிறுவுதல்.

28. விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.

29. கன்னிகாதானம் செய்து
கொடுத்தல்.

30. குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.

31. பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.

32. ஆடை தானம் செய்தல்.

இவைகளே அய்யா வைகுண்டர் வகுத்த 32 விதமான தான அறங்கள் ஆகும். இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்தால் மகிழ்ச்சி உண்டாகும். அய்யா உண்டு!