அகிலம்:
உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே
விளக்கம்:
இவ்வுலகில் மானிடர்கள் தம்மைக் காத்த தமிழ் மொழி மூலமே அத்தமிழை உவமை கூறித் தாக்குவது போல, கலகம் உருவாக்கும் கெட்ட எண்ணத்தோடு இத்திருவாசக மொழியைக் கற்றுத் தேர்ந்துவிட்டு, தான் மேன்மை அடையக் காரணமாக இருந்த எம்மையும், எம் திருவாசகத்தையும் பழித்துக் கூறி, ஏளனமாக நகைத்தவர்களை, பேயை அனுப்பி, அதன் வலிமையான ஆயுதம் கொண்டு குத்தித் துளைத்து, பூவுலகில் மிகுந்த துன்பம் வரும்படி துன்புறுத்தி, நரகத்தில் கொண்டு சென்று ஆணியால் அறைந்து. தீமையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நரகக் குழியின் உள்ளே கொண்டு போடச் சொல்லுவேன்.
அகிலம்:
எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே
விளக்கம்:
இவ்வுலகில் உள்ளம் மகிழ்ந்த நிலையில் இருக்கும் அன்பர்களுக்குத் தெரியும்படியாக, நான் உரைத்த இத்திருவாசகத்தின் திருஎழுத்துக்கள் நாராயணர் மூலம் திறமையாக எழுதப்பட்டு, ஏடாய்ச் சேர்த்து வைத்துள்ளேன். இதை எடுத்து வாசிக்கின்ற அன்பர்களும், விளக்க உரை கூறுகின்ற அன்பர்களும், இவ்வுலகில் நிலையான புகழோடு வாழ்ந்து, தம்முள் நிலைத்திருக்கும் தருமபதியைக் காண்பர்.
அகிலம்:
காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே
விளக்கம்:
இவ்வாறு தருமபதியாகிய உயர்ந்த கண் காட்சியைக் காண்பவர் மரணம் இல்லாத பெருவாழ்வை நிலையாக அடைவர். அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுற்று முக்கண்ணனாகிய சிவனின் உயர்வான நிலையைத் தம் புருவ மத்தில் நிலை நிறுத்தி அதன் மூலமாகத் தம் உள்ளத்தில் எவ்விதக் கலக்கமும் இல்லாமல். கருணை வடிவாகி என்றும் கயிலாசத்தைக் கண்டு, நல்ல முறையில் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்து வருவர்.
அகிலம்:
இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே
விளக்கம்:
இத்திருவாசகத்தைத் தவறாகப் புறக்கணித்த இடும்பர்கள் படும் பாட்டினைக் கூறப் போகின்றேன். கேட்பீராக. இதைப் புறக்கணித்தவர்கள் கெட்ட வாசனையுள்ள உலகில் வாழும் கலி பிடித்து, அதனால் அவர்கள் கண்கள் ஒளி இழந்து, குழி விழுந்து, உருகிக் கால்கள் உழன்று, தள்ளாடி, கொப்பூள் சிலந்தி நோய் என்னும் பெருநோய் உண்டாகி, அதனால் விஷமாகிய குடல் வெளியே பீறிக் கொண்டு வர, எல்லா இடங்களிலும் அலைந்து திருந்து அழிவர். இது நிச்சயம். என்மேல் ஆணை. இது தப்பவே தப்பாது.
அகிலம்:
தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே
விளக்கம்:
என் ஆணை மொழிக்ள தப்பாது எனச் சாபம் இட்டோம். சக்தி பேரில் சத்தியமாக எல்லா உலகங்களும் அறிந்திடவே இத்திருவாசகத்தை எழுதி வைத்தோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களில் ஒப்புவமை இல்லாதவர்களால்கூட இத்திருவாசகத்தை எழுத முடியாது. தந்தை வைகுண்ட நாதர் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை நூலில் உள்ள இத்திருவாசகம் இத்தகைய சிறப்புடையது ஆகும்.
அகிலம்:
என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே
விளக்கம்:
இத்திருவாசகத்தைத் சரசுவதிதேவி திருவாய் மலர்ந்து அருள, கன்று மேய்த்தோனாகிய நாராயணர் எழுதினார். இத்திருவாசகத்தைக் கலியுகத்தில் மக்களிடம் பரப்பிட நினைத்து, ஒரு நல்ல மறையோனிடம் சென்று, இத்திருவாசகத்தைப் பூலோக மக்கள் அறியும்படி செய் என்று கூறி அவனை பூவுலகுக்கு அனுப்பிவிட்டு எல்லாரும் மிகவும் மகிழ்ச்சிகரமாக வைகுண்டத்தில் அமர்ந்திருந்தனர்.
உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே
விளக்கம்:
இவ்வுலகில் மானிடர்கள் தம்மைக் காத்த தமிழ் மொழி மூலமே அத்தமிழை உவமை கூறித் தாக்குவது போல, கலகம் உருவாக்கும் கெட்ட எண்ணத்தோடு இத்திருவாசக மொழியைக் கற்றுத் தேர்ந்துவிட்டு, தான் மேன்மை அடையக் காரணமாக இருந்த எம்மையும், எம் திருவாசகத்தையும் பழித்துக் கூறி, ஏளனமாக நகைத்தவர்களை, பேயை அனுப்பி, அதன் வலிமையான ஆயுதம் கொண்டு குத்தித் துளைத்து, பூவுலகில் மிகுந்த துன்பம் வரும்படி துன்புறுத்தி, நரகத்தில் கொண்டு சென்று ஆணியால் அறைந்து. தீமையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நரகக் குழியின் உள்ளே கொண்டு போடச் சொல்லுவேன்.
அகிலம்:
எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே
விளக்கம்:
இவ்வுலகில் உள்ளம் மகிழ்ந்த நிலையில் இருக்கும் அன்பர்களுக்குத் தெரியும்படியாக, நான் உரைத்த இத்திருவாசகத்தின் திருஎழுத்துக்கள் நாராயணர் மூலம் திறமையாக எழுதப்பட்டு, ஏடாய்ச் சேர்த்து வைத்துள்ளேன். இதை எடுத்து வாசிக்கின்ற அன்பர்களும், விளக்க உரை கூறுகின்ற அன்பர்களும், இவ்வுலகில் நிலையான புகழோடு வாழ்ந்து, தம்முள் நிலைத்திருக்கும் தருமபதியைக் காண்பர்.
அகிலம்:
காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே
விளக்கம்:
இவ்வாறு தருமபதியாகிய உயர்ந்த கண் காட்சியைக் காண்பவர் மரணம் இல்லாத பெருவாழ்வை நிலையாக அடைவர். அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுற்று முக்கண்ணனாகிய சிவனின் உயர்வான நிலையைத் தம் புருவ மத்தில் நிலை நிறுத்தி அதன் மூலமாகத் தம் உள்ளத்தில் எவ்விதக் கலக்கமும் இல்லாமல். கருணை வடிவாகி என்றும் கயிலாசத்தைக் கண்டு, நல்ல முறையில் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்து வருவர்.
அகிலம்:
இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே
விளக்கம்:
இத்திருவாசகத்தைத் தவறாகப் புறக்கணித்த இடும்பர்கள் படும் பாட்டினைக் கூறப் போகின்றேன். கேட்பீராக. இதைப் புறக்கணித்தவர்கள் கெட்ட வாசனையுள்ள உலகில் வாழும் கலி பிடித்து, அதனால் அவர்கள் கண்கள் ஒளி இழந்து, குழி விழுந்து, உருகிக் கால்கள் உழன்று, தள்ளாடி, கொப்பூள் சிலந்தி நோய் என்னும் பெருநோய் உண்டாகி, அதனால் விஷமாகிய குடல் வெளியே பீறிக் கொண்டு வர, எல்லா இடங்களிலும் அலைந்து திருந்து அழிவர். இது நிச்சயம். என்மேல் ஆணை. இது தப்பவே தப்பாது.
அகிலம்:
தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே
விளக்கம்:
என் ஆணை மொழிக்ள தப்பாது எனச் சாபம் இட்டோம். சக்தி பேரில் சத்தியமாக எல்லா உலகங்களும் அறிந்திடவே இத்திருவாசகத்தை எழுதி வைத்தோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களில் ஒப்புவமை இல்லாதவர்களால்கூட இத்திருவாசகத்தை எழுத முடியாது. தந்தை வைகுண்ட நாதர் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை நூலில் உள்ள இத்திருவாசகம் இத்தகைய சிறப்புடையது ஆகும்.
அகிலம்:
என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே
விளக்கம்:
இத்திருவாசகத்தைத் சரசுவதிதேவி திருவாய் மலர்ந்து அருள, கன்று மேய்த்தோனாகிய நாராயணர் எழுதினார். இத்திருவாசகத்தைக் கலியுகத்தில் மக்களிடம் பரப்பிட நினைத்து, ஒரு நல்ல மறையோனிடம் சென்று, இத்திருவாசகத்தைப் பூலோக மக்கள் அறியும்படி செய் என்று கூறி அவனை பூவுலகுக்கு அனுப்பிவிட்டு எல்லாரும் மிகவும் மகிழ்ச்சிகரமாக வைகுண்டத்தில் அமர்ந்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக