வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
விளக்கம்:
நிலபுலன் முதலிய சொத்து வகைகளையும், மனைவி, வீடு, வாசற்படி போன்றவற்றையும் சிறிய அளவு கூட மனதில் எண்ணாது நீ தவமிருக்க வேண்டும்.
அகிலம்:
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
விளக்கம்:
நன்மை தீமை என்றும், இனிமையான பேச்சு, தீமையான பேச்சு என்றும், உண்மை என்றும் பொய் என்றும், வித்தியாசம் சிறிதும் பார்க்காமல்
அகிலம்:
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
விளக்கம்:
கந்தை ஆடை தரித்து உன் அடக்க நிலையை வெளியே யாருக்கும் காட்டாமல் ,
அகிலம்:
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
விளக்கம்:
எவரோடும் இனிய வார்த்தை பேச வேண்டும் என்று எண்ணம் இல்லாமல்,
அகிலம்:
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
விளக்கம்:
பாலைத் தவிர வேறு வகைப் பண்டங்கள் உண்ணாமல்,
அகிலம்:
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
விளக்கம்:
காலைக் கடனும், மாலைக் கடனும் மாலைக் கடனும் செய்யும் போது உடம்பைச் சுத்தமாக்குவது அல்லாமல், உடம்பு முழுவைதையும் சுத்தப்படுத்திச் சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நீ தவம் இருப்பாயாக.
அகிலம்:
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
விளக்கம்:
மூக்கின் நடுவே வலகலை, இடகலை, சுழிமுனை ஆகிய மூன்று முகங்களையும் கண்டறிந்து, நாக்குச் குழியாகிய சுழிமுனையில் நிலையாக நின்று, நானே நாராயணன் என்னும் திடமான எண்ணம் கொண்டு எங்கும் பரந்த பரம்பொருளைக் கண்டு இரண்டு ஆண்டுகள் முதல் தவசான யுகத்தவசை தொடர்ச்சியாக முடித்து விடு.
அகிலம்:
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
விளக்கம்:
உயர்வு பொருந்திய பரம்பொருளை உன் மனதில் ஒரே நினைவாய் மறவாமல் எப்பொழுதும் கண்டு ஒரே நினைவில் நிலை நின்று அங்கே உருவாகின்ற ஞானப்பாலை உண்டு நிலைத்து இருப்பாயாக.
அகிலம்:
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
விளக்கம்:
யுகத்தவசைப் போன்று ஆறு ஆண்டுகள் மூன்று தவசுகளையும் முடித்தால் நீ நினைத்தவை எல்லாம் நிச்சயமாய் உண்ணால் முடித்துவிட முடியும்.
அகிலம்:
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே
விளக்கம்:
பிறகு உன்னைத்தவிர வேறு ஒருவரும் உயர்ந்தவராக இந்த கலியுகத்தில் இருக்க முடியாது. நீ எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், வன்மையுள்ள செல்வ மகனே, அவை எல்லாம் அடையும் வழி முறைகள் இவையேயாம்.
அகிலம்:
நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
விளக்கம்:
அதன் பிறகு நீ செய்வது எல்லாம் நியாயமாகவே அமையும். நாராயணனாகிய நான் நீ ஆகாமல் வேறு எதையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாது. என்மகனே, தவத்தின் மூலமாக நீ நாராயணன் ஆகிவிட்டால் எங்கும் நிறைந்த சர்வபரன் என்பவன் நீயேதான் ஆவாய்.
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
விளக்கம்:
நிலபுலன் முதலிய சொத்து வகைகளையும், மனைவி, வீடு, வாசற்படி போன்றவற்றையும் சிறிய அளவு கூட மனதில் எண்ணாது நீ தவமிருக்க வேண்டும்.
அகிலம்:
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
விளக்கம்:
நன்மை தீமை என்றும், இனிமையான பேச்சு, தீமையான பேச்சு என்றும், உண்மை என்றும் பொய் என்றும், வித்தியாசம் சிறிதும் பார்க்காமல்
அகிலம்:
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
விளக்கம்:
கந்தை ஆடை தரித்து உன் அடக்க நிலையை வெளியே யாருக்கும் காட்டாமல் ,
அகிலம்:
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
விளக்கம்:
எவரோடும் இனிய வார்த்தை பேச வேண்டும் என்று எண்ணம் இல்லாமல்,
அகிலம்:
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
விளக்கம்:
பாலைத் தவிர வேறு வகைப் பண்டங்கள் உண்ணாமல்,
அகிலம்:
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
விளக்கம்:
காலைக் கடனும், மாலைக் கடனும் மாலைக் கடனும் செய்யும் போது உடம்பைச் சுத்தமாக்குவது அல்லாமல், உடம்பு முழுவைதையும் சுத்தப்படுத்திச் சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நீ தவம் இருப்பாயாக.
அகிலம்:
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
விளக்கம்:
மூக்கின் நடுவே வலகலை, இடகலை, சுழிமுனை ஆகிய மூன்று முகங்களையும் கண்டறிந்து, நாக்குச் குழியாகிய சுழிமுனையில் நிலையாக நின்று, நானே நாராயணன் என்னும் திடமான எண்ணம் கொண்டு எங்கும் பரந்த பரம்பொருளைக் கண்டு இரண்டு ஆண்டுகள் முதல் தவசான யுகத்தவசை தொடர்ச்சியாக முடித்து விடு.
அகிலம்:
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
விளக்கம்:
உயர்வு பொருந்திய பரம்பொருளை உன் மனதில் ஒரே நினைவாய் மறவாமல் எப்பொழுதும் கண்டு ஒரே நினைவில் நிலை நின்று அங்கே உருவாகின்ற ஞானப்பாலை உண்டு நிலைத்து இருப்பாயாக.
அகிலம்:
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
விளக்கம்:
யுகத்தவசைப் போன்று ஆறு ஆண்டுகள் மூன்று தவசுகளையும் முடித்தால் நீ நினைத்தவை எல்லாம் நிச்சயமாய் உண்ணால் முடித்துவிட முடியும்.
அகிலம்:
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே
விளக்கம்:
பிறகு உன்னைத்தவிர வேறு ஒருவரும் உயர்ந்தவராக இந்த கலியுகத்தில் இருக்க முடியாது. நீ எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், வன்மையுள்ள செல்வ மகனே, அவை எல்லாம் அடையும் வழி முறைகள் இவையேயாம்.
அகிலம்:
நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
விளக்கம்:
அதன் பிறகு நீ செய்வது எல்லாம் நியாயமாகவே அமையும். நாராயணனாகிய நான் நீ ஆகாமல் வேறு எதையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாது. என்மகனே, தவத்தின் மூலமாக நீ நாராயணன் ஆகிவிட்டால் எங்கும் நிறைந்த சர்வபரன் என்பவன் நீயேதான் ஆவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக