ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா உண்டு-

ஈரே ழுலகும் இரட்சிதத்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறன்மேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல்
இருந்த சொரூபமதும் இமசூட்ச வற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணி யிலுள்ளோர்க்குக்.
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராகச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறதூவும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்ற மக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்
சாணாரினத்தில் சுவாமி வந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம் வைகுண்டந் தானாக்கி
எல்லா இடும்பும் இறையுமிகத் தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் தொல்புவியை யாண்டதுவும்
நாலுமூணு கணக்கு நடுத்தீர்த்த ஞாயமதும்
மேலெதிரி யில்லாமல் வினையில்லா தாண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் யெடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினை நோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
-------அய்யா உண்டு--------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக