தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
விளக்கம்:
வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளாதே
அகிலம்:
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
விளக்கம்:
நான் உனனருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.
அகிலம்:
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
விளக்கம்:
பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே.
அகிலம்:
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே
விளக்கம்:
ஒருவர்க்கும் எதிராகப் பேசாதே, வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.
அகிலம்:
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
விளக்கம்:
நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக.
அகிலம்:
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
விளக்கம்
எல்லாவற்றறையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.
அகிலம்:
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
விளக்கம்:
தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது ததைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்துவிடாதே.
அகிலம்:
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
விளக்கம்:
எனக்குரிய சாதி எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்மகனே.
அகிலம்:
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
விளக்கம்:
உன்மேல் அன்புடைய அந்தஇனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்கள் தம்முள் ஞானம் உருவாகியதும் முடிந்தது. மகனே, சிவப்பொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன். எனது துல்லியத் தன்மையையும், சூட்சுமத்தையும் வெளியே காட்ட மாட்டேன்.
அகிலம்:
நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே
விளக்கம்:
நீ என் ஒரே நினைவில் நின்று செயல் படு.
அகிலம்:
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே
விளக்கம்:
மகனே, நீசர்கள் உன்னை நோக்கி “இவன் பேயன், பைத்தியக்காரன்” என்று கூறி, உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிது கூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள்.
அகிலம்:
ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே
விளக்கம்:
எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன்.
விளக்கம்:
வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளாதே
அகிலம்:
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
விளக்கம்:
நான் உனனருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.
அகிலம்:
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
விளக்கம்:
பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே.
அகிலம்:
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே
விளக்கம்:
ஒருவர்க்கும் எதிராகப் பேசாதே, வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.
அகிலம்:
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
விளக்கம்:
நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக.
அகிலம்:
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
விளக்கம்
எல்லாவற்றறையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.
அகிலம்:
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
விளக்கம்:
தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது ததைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்துவிடாதே.
அகிலம்:
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
விளக்கம்:
எனக்குரிய சாதி எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்மகனே.
அகிலம்:
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
விளக்கம்:
உன்மேல் அன்புடைய அந்தஇனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்கள் தம்முள் ஞானம் உருவாகியதும் முடிந்தது. மகனே, சிவப்பொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன். எனது துல்லியத் தன்மையையும், சூட்சுமத்தையும் வெளியே காட்ட மாட்டேன்.
அகிலம்:
நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே
விளக்கம்:
நீ என் ஒரே நினைவில் நின்று செயல் படு.
அகிலம்:
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே
விளக்கம்:
மகனே, நீசர்கள் உன்னை நோக்கி “இவன் பேயன், பைத்தியக்காரன்” என்று கூறி, உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிது கூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள்.
அகிலம்:
ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே
விளக்கம்:
எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக