ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா துணை

தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே

விளக்கம்:

வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளாதே

அகிலம்:

எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்

விளக்கம்:

நான் உனனருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.

அகிலம்:

பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே

விளக்கம்:

பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே.

அகிலம்:

வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே

விளக்கம்:

ஒருவர்க்கும் எதிராகப் பேசாதே, வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.

அகிலம்:

சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்

விளக்கம்:

நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக.

அகிலம்:

ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே

விளக்கம்
எல்லாவற்றறையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.

அகிலம்:

ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே

விளக்கம்:

தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது ததைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்துவிடாதே.

அகிலம்:

ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே

விளக்கம்:

எனக்குரிய சாதி எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா என்மகனே.

அகிலம்:

அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்

விளக்கம்:

உன்மேல் அன்புடைய அந்தஇனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்கள் தம்முள் ஞானம் உருவாகியதும் முடிந்தது. மகனே, சிவப்பொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன். எனது துல்லியத் தன்மையையும், சூட்சுமத்தையும் வெளியே காட்ட மாட்டேன்.

அகிலம்:

நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே

விளக்கம்:

நீ என் ஒரே நினைவில் நின்று செயல் படு.

அகிலம்:

பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே

விளக்கம்:

மகனே, நீசர்கள் உன்னை நோக்கி “இவன் பேயன், பைத்தியக்காரன்” என்று கூறி, உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிது கூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள்.

அகிலம்:

ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே

விளக்கம்:

எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக