அகிலம்:
வைகுண்டர் வரங்களை கேட்டல்.:
===========================
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரேதங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
விளக்கம்:
உடனே சிறு குழந்தையான வைகுண்டர் திருமாலை நோக்கி, என் தந்தையே என்னை பெற்றெடுத்து அறிவு நிலையை வளர்த்து இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே. இருப்பினும் தங்க முடித்தலைவனே, என் தந்தையே, பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறியவற்றைக் கேட்பீராக.
அகிலம்:
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்துநன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
விளக்கம்:
என் சம்பூரணதேவன் நிலையிலுள்ள முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக வைகுண்டராக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே!
அகிலம்:
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
விளக்கம்:
உமது உண்மை நிலை அறியாமல் கீழ்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே, மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச் சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே?
அகிலம்:
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
விளக்கம்:
உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே?
அகிலம்:
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
விளக்கம்:
நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே?
அகிலம்:
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமேஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
விளக்கம்:
அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர்?
அகிலம்:
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
விளக்கம்:
மேலும் என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா?
அகிலம்:
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்துமேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
விளக்கம்:
மேலும் எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பரதேவதை என்னும் பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா?
அகிலம்:
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்
விளக்கம்:
இப்படி எல்லாருக்கும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும் நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.
வரங்கள் நிறைவேறத் திருமால் வழிமுறை கூறல்:
===================================
அகிலம்:
அந்த வுடனே ஆதிநா ராயணரும்சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
விளக்கம்:
உடனே திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அணைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து வைகுணடரை மாற்றுப் பிறப்பு மூலம் தமது மகனாக உருவாக்கிய திருமால் மகனை நோக்கி சொல்லலானார்.
அகிலம்:
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
விளக்கம்:
எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி, பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.
அகிலம்:
மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
விளக்கம்:
மகனே, நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகளை சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன் கேள்.
அகிலம்:
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
விளக்கம்:
முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.
அகிலம்:
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
விளக்கம்
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு சான்றோர் சாதி மக்களைக் காத்துக் கொள்ளச் செய்யும் தவசாகும்.
அகிலம்:
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
விளக்கம்:
கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பரதேவதை என்னும் பெண் உயர்வு பெறவும் நல்ல முறையில் வாழ்ந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும்.
அகிலம்:
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனேஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்துபாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ
விளக்கம்:
ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு.
வைகுண்டர் வரங்களை கேட்டல்.:
===========================
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரேதங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
விளக்கம்:
உடனே சிறு குழந்தையான வைகுண்டர் திருமாலை நோக்கி, என் தந்தையே என்னை பெற்றெடுத்து அறிவு நிலையை வளர்த்து இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே. இருப்பினும் தங்க முடித்தலைவனே, என் தந்தையே, பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறியவற்றைக் கேட்பீராக.
அகிலம்:
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்துநன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
விளக்கம்:
என் சம்பூரணதேவன் நிலையிலுள்ள முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக வைகுண்டராக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே!
அகிலம்:
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
விளக்கம்:
உமது உண்மை நிலை அறியாமல் கீழ்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே, மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச் சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே?
அகிலம்:
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
விளக்கம்:
உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே?
அகிலம்:
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
விளக்கம்:
நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே?
அகிலம்:
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமேஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
விளக்கம்:
அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர்?
அகிலம்:
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
விளக்கம்:
மேலும் என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா?
அகிலம்:
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்துமேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
விளக்கம்:
மேலும் எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பரதேவதை என்னும் பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா?
அகிலம்:
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்
விளக்கம்:
இப்படி எல்லாருக்கும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும் நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.
வரங்கள் நிறைவேறத் திருமால் வழிமுறை கூறல்:
===================================
அகிலம்:
அந்த வுடனே ஆதிநா ராயணரும்சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
விளக்கம்:
உடனே திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அணைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து வைகுணடரை மாற்றுப் பிறப்பு மூலம் தமது மகனாக உருவாக்கிய திருமால் மகனை நோக்கி சொல்லலானார்.
அகிலம்:
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
விளக்கம்:
எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி, பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.
அகிலம்:
மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
விளக்கம்:
மகனே, நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகளை சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன் கேள்.
அகிலம்:
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
விளக்கம்:
முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.
அகிலம்:
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
விளக்கம்
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு சான்றோர் சாதி மக்களைக் காத்துக் கொள்ளச் செய்யும் தவசாகும்.
அகிலம்:
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
விளக்கம்:
கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பரதேவதை என்னும் பெண் உயர்வு பெறவும் நல்ல முறையில் வாழ்ந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும்.
அகிலம்:
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனேஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்துபாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ
விளக்கம்:
ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக