அகிலம்:
வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே
விளக்கம்:
நான் பெரியவன் என்னும் ஆணவ வார்த்தைகளைப் பேசாதே, எதிரி செய்ததைப் போன்று பழிக்குப் பழியாக எதையும் செய்ய நினைக்காதே.
அகிலம்:
ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே
விளக்கம்:
எல்லாரிடமும் ஏழையைப் போன்று வாழ்ந்து வா.
அகிலம்:
ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்
விளக்கம்:
மிகவும் ஆழமான உயர்ந்த மனதுடைய அருமை பொருந்திய மகனே, என் கண் மணியே, உன் உயர் நிலை அறியாமல் எதிர்க்கும் வம்பர்கள் எல்லாரும் வீணாக அழிந்து விடுவர்.
அகிலம்:
மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே
விளக்கம்:
எல்லா மதங்களையும் எனக்குள் அடக்கலாக்கிக் காட்டு என் மகனே.
அகிலம்:
தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு
விளக்கம்:
அன்பு மகனே, தரளமணி, முத்திரி ஆகியவற்றை என் பரிசாக உனக்குத் தந்து விட்டேன் அவற்றை உனது கந்தைத் துணியினுள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்ளுவாயாக.
அகிலம்:
மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே
விளக்கம்:
மகனே, உனது மனம் மட்டும் தெளிவாக அறியும்படி நான் காட்டிய இரகசியத்தை உன் அகத்திலேயே நினைத்து அகம் மகிழ்ந்திரு.
அகிலம்:
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
விளக்கம்:
பொறுமை என்னும் உயர்ந்த குணந்தான் மிகப் பெரிய தர்மம் ஆகும், கலியுக நாதனே, என் மகனே, நீ பொறுமையைக் கடைபிடித்தால் உன் மனதுக்கு உறுதி அதிகமாகும்.
அகிலம்:
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
விளக்கம்:
பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.
அகிலம்:
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
விளக்கம்:
என் மகனே, நான் உணர்த்திய சிறப்புகளை நீ அறிந்தாயா? காண்பதற்கு அரிய திருமாலின் மண்டபச் சிறப்புகளையும், மிகப் பழமையான தேரையும் பதியையும் நீ அறிந்தாயா?
அகிலம்:
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
விளக்கம்:
நாரணா, என் மகனே, நான் தேடித் தந்துள்ள இவ்விஞ்சைகள் மீது உன் நாட்டம் முழுவதும் இருக்க வேண்டும், மறவாதே, என்று திருமால் உததேசித்தார்.
வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே
விளக்கம்:
நான் பெரியவன் என்னும் ஆணவ வார்த்தைகளைப் பேசாதே, எதிரி செய்ததைப் போன்று பழிக்குப் பழியாக எதையும் செய்ய நினைக்காதே.
அகிலம்:
ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே
விளக்கம்:
எல்லாரிடமும் ஏழையைப் போன்று வாழ்ந்து வா.
அகிலம்:
ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்
விளக்கம்:
மிகவும் ஆழமான உயர்ந்த மனதுடைய அருமை பொருந்திய மகனே, என் கண் மணியே, உன் உயர் நிலை அறியாமல் எதிர்க்கும் வம்பர்கள் எல்லாரும் வீணாக அழிந்து விடுவர்.
அகிலம்:
மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே
விளக்கம்:
எல்லா மதங்களையும் எனக்குள் அடக்கலாக்கிக் காட்டு என் மகனே.
அகிலம்:
தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு
விளக்கம்:
அன்பு மகனே, தரளமணி, முத்திரி ஆகியவற்றை என் பரிசாக உனக்குத் தந்து விட்டேன் அவற்றை உனது கந்தைத் துணியினுள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்ளுவாயாக.
அகிலம்:
மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே
விளக்கம்:
மகனே, உனது மனம் மட்டும் தெளிவாக அறியும்படி நான் காட்டிய இரகசியத்தை உன் அகத்திலேயே நினைத்து அகம் மகிழ்ந்திரு.
அகிலம்:
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
விளக்கம்:
பொறுமை என்னும் உயர்ந்த குணந்தான் மிகப் பெரிய தர்மம் ஆகும், கலியுக நாதனே, என் மகனே, நீ பொறுமையைக் கடைபிடித்தால் உன் மனதுக்கு உறுதி அதிகமாகும்.
அகிலம்:
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
விளக்கம்:
பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.
அகிலம்:
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
விளக்கம்:
என் மகனே, நான் உணர்த்திய சிறப்புகளை நீ அறிந்தாயா? காண்பதற்கு அரிய திருமாலின் மண்டபச் சிறப்புகளையும், மிகப் பழமையான தேரையும் பதியையும் நீ அறிந்தாயா?
அகிலம்:
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
விளக்கம்:
நாரணா, என் மகனே, நான் தேடித் தந்துள்ள இவ்விஞ்சைகள் மீது உன் நாட்டம் முழுவதும் இருக்க வேண்டும், மறவாதே, என்று திருமால் உததேசித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக