ஞாயிறு, 23 நவம்பர், 2014

அய்யா உண்டு

சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரமனுறு தலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துயிரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரையுஞ் செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடை தவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னி கவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்யுகத் திலுள்ள அவ்வோரையும் வதைத்து
எவ்வுகமுங் காணா ஏகக் குண்டமேகி
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில்
வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்கு ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன் வாழும் ஆழிக்கரை யாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலஞ் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக