புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமேஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே

விளக்கம்:
அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர்?

அகிலம்:

முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ

விளக்கம்:

மேலும் என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா?

அகிலம்:

அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்துமேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ

விளக்கம்:

மேலும் எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பரதேவதை என்னும் பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக