கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத்
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே
சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு
விளக்கம்:
இவ்வாறு தமது முன் பிறவியினால் கருவில் அமைந்த தோசங்கள் எல்லாம் அனுபவித்துக் கழித்துவிட்டு சிறந்த சிவஞானத்தின் உயர்ந்த நிலையடைந்து, சிவமயமாய் நிலை பெற மனதில் நினைத்து மாயவரை நெஞ்சில் நிறுத்தித் தினமும் வருந்தினார். ஆனால் உலக மக்கள் பார்வைக்கு நோய் பிடித்தவராகக் காட்சி அளித்தார். இப்படியாக ஒரு வருடம் தமது முன்பிறவி பாவத்தினால் உடலில் வந்த தீயவினைகள் எல்லாம் உலகில் கழித்துவிட்டு பரம்பொருளே தஞ்சம் என்று இருந்தார். அச்சமயம் ஒருநாள் இரவு இறைவன் அருளால் சுவாமியின் தாய் வெயிலாளின் கனவில் தோன்றிய திருமால் அவளுக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுச் சென்றார்.
அகிலம்:
உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே
விளக்கம்:
இதை உண்மையாக நம்பி அவரின் தாய் தன் மகனை நோக்கி மகனே, இன்றிரவு நான் உன் நோயின் துன்பத்தைப் பற்றிய எண்ணத்தோடு மனம் வாடி இருந்ததை அறிந்து, சிவனின் மைத்துனராகிய திருமால் சொல்லிச் சென்ற கட்டளையை நீ கேட்பாயாக என்றாள்.
அப்போது தங்கள் உறவினர்களும் கேட்டுக் கொண்டிருக்க, சொல்லுகின்றாள். அன்புடையோரே, கேட்பீர்களாக.
அகிலம்:
ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்
விளக்கம்:
ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த ஆண்டில் மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில் கொடி ஏற்றப்பட்டு நல்ல முறையில் திருவிழா நடக்கிறது. அங்கே, உன் மகனை அழைத்து வந்தால் இவ்வுலக மக்கள் அறியும்படியாக உன் மகனுடைய நோயை தீர்த்து மிகவும் நன்மையான நல்ல உயர்வு கொடுப்போம், இது சத்தியம். நம்பேரில் ஆணை. இது தவறாமல் நடக்கும் என்று திருமால் என்னிடம் அருளினார். அவர் கருமேனி நிறமுடையவர்.
அகிலம்:
நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ
விளக்கம்:
நான் கண்ட இந்தச் சொற்பணம் எந்த வகையிலும் தவறாத ஒன்று என்று கூறித் தேன்மழை பொழிந்ததைக் கண்டவர் போன்று சிரித்து மனம் மகிழ்ந்து என்னுடைய இந்தக் கனவின்படி நாம் இங்கிருந்து திருச்செந்தூர் போய் வராமல் இந்த நோயானது எந்த வகையிலும் மாறக்கூடிய வழி இல்லை அல்லவா? என்று தாய் உரைத்தார்.
அகிலம்:
என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்
விளக்கம்:
எல்லாரும் இன்பமுடன் மகிழ்ந்து நன்று நன்று திருச்செந்தூருக்கு நடந்து போவதற்குரிய எல்லாப் பொருள்களையும் சேகரித்திடுவோம் என்றனர். உடனே அங்குப் புறப்படுவதற்குத் தேவையான பலகாரங்களை விதம் விதமாகச் கட்டியும், இன்னும் வேண்டுவனவும் சேகரித்தனர். வழியில் செல்லும்போது தான தருமங்கள் செய்ய வேண்டிய பொருள்களும் எடுத்துக் கொண்டனர். நோயுற்ற கவனமாக அழைத்து செல்லத் தேவையான ஆட்களையும் கூட்டி அவரை வீதியான தொட்டில் ஒன்றில் கிடத்தி, நேரம் கடத்தாமல் திருச்செந்தூர் நோக்கி நடக்கலாயினர்.
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே
சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு
விளக்கம்:
இவ்வாறு தமது முன் பிறவியினால் கருவில் அமைந்த தோசங்கள் எல்லாம் அனுபவித்துக் கழித்துவிட்டு சிறந்த சிவஞானத்தின் உயர்ந்த நிலையடைந்து, சிவமயமாய் நிலை பெற மனதில் நினைத்து மாயவரை நெஞ்சில் நிறுத்தித் தினமும் வருந்தினார். ஆனால் உலக மக்கள் பார்வைக்கு நோய் பிடித்தவராகக் காட்சி அளித்தார். இப்படியாக ஒரு வருடம் தமது முன்பிறவி பாவத்தினால் உடலில் வந்த தீயவினைகள் எல்லாம் உலகில் கழித்துவிட்டு பரம்பொருளே தஞ்சம் என்று இருந்தார். அச்சமயம் ஒருநாள் இரவு இறைவன் அருளால் சுவாமியின் தாய் வெயிலாளின் கனவில் தோன்றிய திருமால் அவளுக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுச் சென்றார்.
அகிலம்:
உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே
விளக்கம்:
இதை உண்மையாக நம்பி அவரின் தாய் தன் மகனை நோக்கி மகனே, இன்றிரவு நான் உன் நோயின் துன்பத்தைப் பற்றிய எண்ணத்தோடு மனம் வாடி இருந்ததை அறிந்து, சிவனின் மைத்துனராகிய திருமால் சொல்லிச் சென்ற கட்டளையை நீ கேட்பாயாக என்றாள்.
அப்போது தங்கள் உறவினர்களும் கேட்டுக் கொண்டிருக்க, சொல்லுகின்றாள். அன்புடையோரே, கேட்பீர்களாக.
அகிலம்:
ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்
விளக்கம்:
ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த ஆண்டில் மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில் கொடி ஏற்றப்பட்டு நல்ல முறையில் திருவிழா நடக்கிறது. அங்கே, உன் மகனை அழைத்து வந்தால் இவ்வுலக மக்கள் அறியும்படியாக உன் மகனுடைய நோயை தீர்த்து மிகவும் நன்மையான நல்ல உயர்வு கொடுப்போம், இது சத்தியம். நம்பேரில் ஆணை. இது தவறாமல் நடக்கும் என்று திருமால் என்னிடம் அருளினார். அவர் கருமேனி நிறமுடையவர்.
அகிலம்:
நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ
விளக்கம்:
நான் கண்ட இந்தச் சொற்பணம் எந்த வகையிலும் தவறாத ஒன்று என்று கூறித் தேன்மழை பொழிந்ததைக் கண்டவர் போன்று சிரித்து மனம் மகிழ்ந்து என்னுடைய இந்தக் கனவின்படி நாம் இங்கிருந்து திருச்செந்தூர் போய் வராமல் இந்த நோயானது எந்த வகையிலும் மாறக்கூடிய வழி இல்லை அல்லவா? என்று தாய் உரைத்தார்.
அகிலம்:
என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்
விளக்கம்:
எல்லாரும் இன்பமுடன் மகிழ்ந்து நன்று நன்று திருச்செந்தூருக்கு நடந்து போவதற்குரிய எல்லாப் பொருள்களையும் சேகரித்திடுவோம் என்றனர். உடனே அங்குப் புறப்படுவதற்குத் தேவையான பலகாரங்களை விதம் விதமாகச் கட்டியும், இன்னும் வேண்டுவனவும் சேகரித்தனர். வழியில் செல்லும்போது தான தருமங்கள் செய்ய வேண்டிய பொருள்களும் எடுத்துக் கொண்டனர். நோயுற்ற கவனமாக அழைத்து செல்லத் தேவையான ஆட்களையும் கூட்டி அவரை வீதியான தொட்டில் ஒன்றில் கிடத்தி, நேரம் கடத்தாமல் திருச்செந்தூர் நோக்கி நடக்கலாயினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக