புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே

விளக்கம்:

உமது உண்மை நிலை அறியாமல் கீழ்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே, மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச் சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக