புதன், 19 நவம்பர், 2014

வைகுண்டர் வரங்களை கேட்டல்

அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரேதங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்

விளக்கம்:

உடனே சிறு குழந்தையான வைகுண்டர் திருமாலை நோக்கி, என் தந்தையே என்னை பெற்றெடுத்து அறிவு நிலையை வளர்த்து இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே. இருப்பினும் தங்க முடித்தலைவனே, என் தந்தையே, பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறியவற்றைக் கேட்பீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக