வந்தனர் மகர முன்னே மாதுபொன் மகரங் கண்டு
செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ
கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே
விளக்கம்:
இப்படி அக்கினியுரு ஆகிய திருமால் மகரத்தின் முன்னால் வரவும், இதை மகரம் கண்டு ஐயோ, இது சிவந்த அக்கினப் பந்தமோ? என்று சொல்லிப் பதறி வருந்தி என் மானத்தைக் காக்கின்ற நாராயணரோ? எரிந்து கொண்டிருக்கின்ற மலைபோன்ற வடவாக்கினையோ? இல்லை என்றால் இது கந்தனின் மாயமோ? என்று மனம் கலங்கினாள்.
அகிலம்:
கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும்
இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ
சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே
விளக்கம்:
இப்படியே மனங்கலங்கி மகர இலட்சுமி, மனதின் எண்ணம் எல்லாம் சிதைந்து ஏதேதோ சொல்லலானாள். உன்னை இனணய வருவோம் என்று ஏற்கெனவே சொன்ன என்னுடைய கணவர் தாமோ? வேறு யாரோ? என்று மீண்டும் உள்ளம் கலங்கினாள். அப்பொழுது பூமி அதிரத் திடீர்திடீர் என அக்கினிக் கதிர்கள் பாய அங்கே தோன்றிய அக்கினியைப் பார்த்து மகர இலட்சுமி பேசலுற்றாள்.
அகிலம்:
சுடரே சுடரே துலங்கு மதிசுடரே
கடலே கடலே கடலுட் கனலாரே
அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம்
தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம்
நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது
விளக்கம்:
அக்கினியே, எல்லா இடமும், வெளிப்பட்டுக் கொண்டு அதிகமாகப் பிரகாசிக்கும் சுடரே, அக்கினிக் கடலே, கடலுள் தோன்றும் கனலே, உன்னிடம் அபயம் கேட்கிறேன். அனலே காந்தல் முனையே, தீயே உன்னிடம் அபயம் கேட்கிறேன். திரிபுரத்தை எரித்தவனே, அபயம். மாசற்ற ஈசனாகிய சங்கரனின் உள்ளிருந்து நீ சுட்டு எரித்த இடங்களை உன்னிடமே கூறக் கூடாது.
அகிலம்:
மாசற்ற ஈசன் வல்லவனோ டுள்ளிருந்து
காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து
ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து
முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து
ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது
விளக்கம்:
பலம் பொருந்திய அர்ச்சுனனின் கையில் இருந்து காண்டாவனத்தை எரித்தாய். முப்பொருளுக்கும் முதற்பொருளான ஈசன் கையில் இருந்து முப்புரத்தையும் சுட்டு அழித்தாய். நீ எரித்து அழித்த செயலுக்கு உவமை மூலம் ஒப்புமை சொல்ல முடியாது.
அகிலம்:
அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம்
கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா
மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே
விளக்கம்:
எனவே, அனலே, ஆதியே உன்னிடம் அபயம் கேட்கிறேன். கனலே நீ இங்கே அமருவாயக, என்னுடைய காந்தல் உணர்வை மாற்றுவாயாக. என்னுடைய கணவர் திருமாலுக்காக உன்குனத்தை மாற்றிக் கொள்வாயாக்.
அகிலம்:
இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால்
சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன்
வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா
விளக்கம்:
உன்னுடைய இந்த இயல்பை எல்லாம் என் கணவர் இங்கு வந்தால் அவரிடம் சொல்லி உனக்குச் சொர்க்கநிலை வாங்கித் தருவேன். அர்ச்சுனனுக்கும் வல்லவனே, நீ விலகி அமருவாயாக.
அகிலம்:
என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே
பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார்
வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே
விளக்கம்:
என்னுடைய கணவர் இந்தக் கடலினுள்ளே பொன்னைப் போன்ற நல்ல மகரமாக வளருவதற்காக என்னை அனுப்பி வைத்தார். அவர் வருவேன் என்று கூறிய நாளும் இதோ வந்துவிட்டது.
அகிலம்:
தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால்
அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும்
சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய்
என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி
நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து
விளக்கம்:
எனவே அக்கினியே, உனக்கு என் கணவர் வந்தவுடன் வேண்டிய வரங்களைத் தருவேன். நீ இங்கே அமர்ந்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு அதிகமான நல்ல பலன்கள் உண்டாகும். சிறப்புப் பொருந்திய உயர்வான நிலையில் நீ சுகம் பெற்று வாழ்ந்திடுவாய் என்று மகரப்பெண் அக்கினியைக் கண்டு மனம் உளறி மயக்கமடைந்து நின்றாள்.
அகிலம்:
அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி
மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார்
விளக்கம்:
இதைக் கண்டு நெடிய திருமால், அனல் முழுவதையும் உள்ளடக்கித் தம்முடைய உண்மை உருவை அவளிடம் காட்டி, அவளை நோக்கி, என் அருமை மனைவியே, நீ என் அருகில் வருவாயாக என்று அழைத்தார்.
செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ
கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே
விளக்கம்:
இப்படி அக்கினியுரு ஆகிய திருமால் மகரத்தின் முன்னால் வரவும், இதை மகரம் கண்டு ஐயோ, இது சிவந்த அக்கினப் பந்தமோ? என்று சொல்லிப் பதறி வருந்தி என் மானத்தைக் காக்கின்ற நாராயணரோ? எரிந்து கொண்டிருக்கின்ற மலைபோன்ற வடவாக்கினையோ? இல்லை என்றால் இது கந்தனின் மாயமோ? என்று மனம் கலங்கினாள்.
அகிலம்:
கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும்
இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ
சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே
விளக்கம்:
இப்படியே மனங்கலங்கி மகர இலட்சுமி, மனதின் எண்ணம் எல்லாம் சிதைந்து ஏதேதோ சொல்லலானாள். உன்னை இனணய வருவோம் என்று ஏற்கெனவே சொன்ன என்னுடைய கணவர் தாமோ? வேறு யாரோ? என்று மீண்டும் உள்ளம் கலங்கினாள். அப்பொழுது பூமி அதிரத் திடீர்திடீர் என அக்கினிக் கதிர்கள் பாய அங்கே தோன்றிய அக்கினியைப் பார்த்து மகர இலட்சுமி பேசலுற்றாள்.
அகிலம்:
சுடரே சுடரே துலங்கு மதிசுடரே
கடலே கடலே கடலுட் கனலாரே
அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம்
தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம்
நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது
விளக்கம்:
அக்கினியே, எல்லா இடமும், வெளிப்பட்டுக் கொண்டு அதிகமாகப் பிரகாசிக்கும் சுடரே, அக்கினிக் கடலே, கடலுள் தோன்றும் கனலே, உன்னிடம் அபயம் கேட்கிறேன். அனலே காந்தல் முனையே, தீயே உன்னிடம் அபயம் கேட்கிறேன். திரிபுரத்தை எரித்தவனே, அபயம். மாசற்ற ஈசனாகிய சங்கரனின் உள்ளிருந்து நீ சுட்டு எரித்த இடங்களை உன்னிடமே கூறக் கூடாது.
அகிலம்:
மாசற்ற ஈசன் வல்லவனோ டுள்ளிருந்து
காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து
ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து
முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து
ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது
விளக்கம்:
பலம் பொருந்திய அர்ச்சுனனின் கையில் இருந்து காண்டாவனத்தை எரித்தாய். முப்பொருளுக்கும் முதற்பொருளான ஈசன் கையில் இருந்து முப்புரத்தையும் சுட்டு அழித்தாய். நீ எரித்து அழித்த செயலுக்கு உவமை மூலம் ஒப்புமை சொல்ல முடியாது.
அகிலம்:
அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம்
கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா
மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே
விளக்கம்:
எனவே, அனலே, ஆதியே உன்னிடம் அபயம் கேட்கிறேன். கனலே நீ இங்கே அமருவாயக, என்னுடைய காந்தல் உணர்வை மாற்றுவாயாக. என்னுடைய கணவர் திருமாலுக்காக உன்குனத்தை மாற்றிக் கொள்வாயாக்.
அகிலம்:
இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால்
சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன்
வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா
விளக்கம்:
உன்னுடைய இந்த இயல்பை எல்லாம் என் கணவர் இங்கு வந்தால் அவரிடம் சொல்லி உனக்குச் சொர்க்கநிலை வாங்கித் தருவேன். அர்ச்சுனனுக்கும் வல்லவனே, நீ விலகி அமருவாயாக.
அகிலம்:
என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே
பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார்
வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே
விளக்கம்:
என்னுடைய கணவர் இந்தக் கடலினுள்ளே பொன்னைப் போன்ற நல்ல மகரமாக வளருவதற்காக என்னை அனுப்பி வைத்தார். அவர் வருவேன் என்று கூறிய நாளும் இதோ வந்துவிட்டது.
அகிலம்:
தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால்
அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும்
சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய்
என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி
நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து
விளக்கம்:
எனவே அக்கினியே, உனக்கு என் கணவர் வந்தவுடன் வேண்டிய வரங்களைத் தருவேன். நீ இங்கே அமர்ந்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு அதிகமான நல்ல பலன்கள் உண்டாகும். சிறப்புப் பொருந்திய உயர்வான நிலையில் நீ சுகம் பெற்று வாழ்ந்திடுவாய் என்று மகரப்பெண் அக்கினியைக் கண்டு மனம் உளறி மயக்கமடைந்து நின்றாள்.
அகிலம்:
அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி
மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார்
விளக்கம்:
இதைக் கண்டு நெடிய திருமால், அனல் முழுவதையும் உள்ளடக்கித் தம்முடைய உண்மை உருவை அவளிடம் காட்டி, அவளை நோக்கி, என் அருமை மனைவியே, நீ என் அருகில் வருவாயாக என்று அழைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக