சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
விளக்கம்:
இவ்வாறு ஈசர் கூறவும் திருமால் மகிழ்ந்து வியாகரரை ஆள் அனுப்பி அழைத்தார். அதைக் கேள்வியுள்ற வியாகர மாமுனியும் பிறவிப் பெருங்கடலிலிருந்து பிழைத்தவர் போல மிகவிரைவாக ஓடி வந்து மூவரையும் வணங்கி, “சுவாமி, தாங்கள் என்னை அழைக்கக் காரணம் என்ன? என விண்ணப்பித்தார்.
அகிலம்:
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்
விளக்கம்:
திருமால் வியாகரரிடம் “வியாகரரே உலகம் தோன்றியதுமுதல் இதுவரை இவ்வுலக யுகங்களின் முடிவுகளும் சொல்லி இனிப் பிறக்கப் போகின்றவற்றையும் தெளிவாக தவறின்றிச் சொல்லுவீராக” என்றார்.
அப்போது வியாகரர் “ஆதியின் அருளால் நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்று வணங்கி விட்டுச் சொல்லலுற்றார்.
அகிலம்:
வேதவியாசர் முன்னாகமம் கூறல்
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்
விளக்கம்:
இப்பூவுலகில் குறோணி முதல் எந்தவித நல்ல குணமும் இல்லாத கெட்ட கலிநீசன்வரை ஏழு யுகங்களின் தோற்றத்தையும் கூறி, ஆறு யுகங்களின் அழிவு பற்றித் தெளிவாக எடுத்துக் கூறி, சாணார் இனத்தினரை வைகுண்டர் நல்ல உயர்வான நிலை கொடுக்க நாடிச் செல்லுவது பற்றியும் எடுத்துரைத்தார்.
அகிலம்:
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
விளக்கம்:
குறோணி முதல் நீசன் வரை கீழ்த்தன்மையான ஏழு பிறவிகள் பிறந்து இப்பூவுலகில் ஆறு யுகங்களிலும் தன் செயலினாலே அழிந்து மாண்ட நிலைகளையும் தெளிவுடன் நல்ல இயல்பு கொண்ட நாராயணரை நோக்கித் தூய்மையான மனதுடைய வியாசுரர் மீண்டும் தொடர்ந்து கூறலானார்.
அகிலம்:
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
விளக்கம்:
தெச்சணத்தை ஆளும் நல்ல அரசர்கள் இறப்பு எய்தி, தீமையான மக்களின் குறும்பு அதிகமாகப் பெருத்திருக்கும் தெச்சணம் நோக்கிப் பயன் பெற வரும் நசுறாணி அததேசம் வந்தவுடனே தோல்வியுற்று ஓடிடுவான். அதிலிருந்து பத்து ஆண்டுகள் கழித்து வைகுண்டர் என்னும் ஒருவர் வந்து உலகத்தை அரசாட்சி செய்வார். என்று ஏற்கெனவே பரம்பொருள் கூறியுள்ளார்.
அகிலம்:
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்
விளக்கம்:
அதன்படி தருமபூமியில் வைகுண்டர் மூலம் அரசாட்சி புரியும் ஒரே கடவுள் நீவிரே ஆவீர். சுவாமி அப்போது அத்தருமயுகத்தில் தமது தீய முன் வினைகளை கழித்து அழித்தவர்கள் அங்கே சுகமாக வாழ்ந்து வருவர். என்று முந்தைய ஆகமங்களை ஆய்ந்து ஆதி வியாகரர் பாம்பு மெத்தையில் படுத்துப் பள்ளி கொள்ளும் நாராயணரை நோக்கி எடுத்துக் கூறினார்.
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
விளக்கம்:
இவ்வாறு ஈசர் கூறவும் திருமால் மகிழ்ந்து வியாகரரை ஆள் அனுப்பி அழைத்தார். அதைக் கேள்வியுள்ற வியாகர மாமுனியும் பிறவிப் பெருங்கடலிலிருந்து பிழைத்தவர் போல மிகவிரைவாக ஓடி வந்து மூவரையும் வணங்கி, “சுவாமி, தாங்கள் என்னை அழைக்கக் காரணம் என்ன? என விண்ணப்பித்தார்.
அகிலம்:
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்
விளக்கம்:
திருமால் வியாகரரிடம் “வியாகரரே உலகம் தோன்றியதுமுதல் இதுவரை இவ்வுலக யுகங்களின் முடிவுகளும் சொல்லி இனிப் பிறக்கப் போகின்றவற்றையும் தெளிவாக தவறின்றிச் சொல்லுவீராக” என்றார்.
அப்போது வியாகரர் “ஆதியின் அருளால் நான் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்று வணங்கி விட்டுச் சொல்லலுற்றார்.
அகிலம்:
வேதவியாசர் முன்னாகமம் கூறல்
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்
விளக்கம்:
இப்பூவுலகில் குறோணி முதல் எந்தவித நல்ல குணமும் இல்லாத கெட்ட கலிநீசன்வரை ஏழு யுகங்களின் தோற்றத்தையும் கூறி, ஆறு யுகங்களின் அழிவு பற்றித் தெளிவாக எடுத்துக் கூறி, சாணார் இனத்தினரை வைகுண்டர் நல்ல உயர்வான நிலை கொடுக்க நாடிச் செல்லுவது பற்றியும் எடுத்துரைத்தார்.
அகிலம்:
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
விளக்கம்:
குறோணி முதல் நீசன் வரை கீழ்த்தன்மையான ஏழு பிறவிகள் பிறந்து இப்பூவுலகில் ஆறு யுகங்களிலும் தன் செயலினாலே அழிந்து மாண்ட நிலைகளையும் தெளிவுடன் நல்ல இயல்பு கொண்ட நாராயணரை நோக்கித் தூய்மையான மனதுடைய வியாசுரர் மீண்டும் தொடர்ந்து கூறலானார்.
அகிலம்:
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
விளக்கம்:
தெச்சணத்தை ஆளும் நல்ல அரசர்கள் இறப்பு எய்தி, தீமையான மக்களின் குறும்பு அதிகமாகப் பெருத்திருக்கும் தெச்சணம் நோக்கிப் பயன் பெற வரும் நசுறாணி அததேசம் வந்தவுடனே தோல்வியுற்று ஓடிடுவான். அதிலிருந்து பத்து ஆண்டுகள் கழித்து வைகுண்டர் என்னும் ஒருவர் வந்து உலகத்தை அரசாட்சி செய்வார். என்று ஏற்கெனவே பரம்பொருள் கூறியுள்ளார்.
அகிலம்:
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்
விளக்கம்:
அதன்படி தருமபூமியில் வைகுண்டர் மூலம் அரசாட்சி புரியும் ஒரே கடவுள் நீவிரே ஆவீர். சுவாமி அப்போது அத்தருமயுகத்தில் தமது தீய முன் வினைகளை கழித்து அழித்தவர்கள் அங்கே சுகமாக வாழ்ந்து வருவர். என்று முந்தைய ஆகமங்களை ஆய்ந்து ஆதி வியாகரர் பாம்பு மெத்தையில் படுத்துப் பள்ளி கொள்ளும் நாராயணரை நோக்கி எடுத்துக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக