இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
விளக்கம்:
இங்கே காணுகின்ற மும்மூர்த்திகளையும் யான் எப்பொழுது காண்பேன் என்று எத்தனை காலம் அடியேணாகிய நான் காத்திருந்தேன். அவ்வாறு நான் காத்திருந்த நாள்களை எண்ணி முடிக்க முடியாது. உங்கள் வருகையைப் பாத்திருந்த கண்களின் பாவம் இன்று தொலைந்தது எனப் பலவாறாகக் கூறிக் கொண்டு முருகன் தமது பக்கத்தில் வந்தடைந்த ஈசரையும் கன்று கூட்டங்களை மேய்த்த திருமாலையும், தாய் சக்திதேவியையும் கட்டித் தழுவி மனம் மகிழ்ந்தான்.
அகிலம்:
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
விளக்கம்:
பிறகு ஒழுங்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்த தேவர்களையும் சிறப்பித்து வரவேற்று அய்யா, பெரியோர்களே, எனது கோவிலின் அலங்காரங்களை நீங்கள் எல்லாரும் அமர்ந்து இளைப்பாற நிறைய தங்க மேடைகள் இங்கு உள்ளன. தங்களுடைய தங்கமலை போன்ற மலைகளும் இங்கு உள்ளன.
அகிலம்:
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
விளக்கம்:
பாட்டினைப் பாடுவதற்கும், படிப்பதற்கும் சிறந்த பாவாணர்களும் நன்றாக ஆடிடவும் சிறந்த முத்திரைகளைக் கை மூலம் காட்டிடவும், நல்ல பெண்டிர்களும் இங்கு உள்ளனர். நீங்கள் அருந்துவதற்கு ஏற்றவரைப் பாலும், பழங்களும் உள்ளன. திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்கதும் கண்டு களிக்கத் தக்கதுமாகிய நல்ல கன்னிப் பெண்டிர்களும் இங்கு உள்ளனர். தேவைக்குத் தகுந்த செலவு செய்த நிறைந்த பொருள்களும் உள்ளன.
அகிலம்:
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
விளக்கம்:
சுவைக்க தக்க நல்ல உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்குப் பல்லாக்குகளும் கோவிலில் போகிமாரும் உள்ளனர்.
அகிலம்:
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
விளக்கம்:
குல்லாக்களும் உள்ளன. குளிப்பதற்குத் தாம்பிரபரணி ஆறும் உண்டு. சதுரங்கம் விளையாட மேடைகளும், சண்முக விலாசமும் உள்ளன. திருமால் பள்ள கொள்ள பால்கடலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி எடைக்கும் அதிகமாக வருவாயும் இங்கு உண்டு. அதிகமாகப் புடவைகளும், பொனசவடீ ஆபரணங்களும் இங்கே வரும். ஒவ்வொரு வருடமும் வடம் போன்ற மாலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக வரும். இங்கே அமைக்கப்பட்டுள்ள கருவூலங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்ப்போமானால், காவடி ஒரு கோடியும் வாங்கப்படுகின்ற காணிக்கை மூன்று கோடியுமாக, இவ்வுலக மக்கள் பல சாதியினரும் கோடிகோடியாகக் கூடி இங்கே கொண்டு குவிக்கின்றனர்.
இப்படியாக எனக்கு பலவகைப் பாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன. எந்த வகையில் ஆயினும் சரி, நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று அழைத்தான்.
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
விளக்கம்:
இங்கே காணுகின்ற மும்மூர்த்திகளையும் யான் எப்பொழுது காண்பேன் என்று எத்தனை காலம் அடியேணாகிய நான் காத்திருந்தேன். அவ்வாறு நான் காத்திருந்த நாள்களை எண்ணி முடிக்க முடியாது. உங்கள் வருகையைப் பாத்திருந்த கண்களின் பாவம் இன்று தொலைந்தது எனப் பலவாறாகக் கூறிக் கொண்டு முருகன் தமது பக்கத்தில் வந்தடைந்த ஈசரையும் கன்று கூட்டங்களை மேய்த்த திருமாலையும், தாய் சக்திதேவியையும் கட்டித் தழுவி மனம் மகிழ்ந்தான்.
அகிலம்:
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
விளக்கம்:
பிறகு ஒழுங்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்த தேவர்களையும் சிறப்பித்து வரவேற்று அய்யா, பெரியோர்களே, எனது கோவிலின் அலங்காரங்களை நீங்கள் எல்லாரும் அமர்ந்து இளைப்பாற நிறைய தங்க மேடைகள் இங்கு உள்ளன. தங்களுடைய தங்கமலை போன்ற மலைகளும் இங்கு உள்ளன.
அகிலம்:
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
விளக்கம்:
பாட்டினைப் பாடுவதற்கும், படிப்பதற்கும் சிறந்த பாவாணர்களும் நன்றாக ஆடிடவும் சிறந்த முத்திரைகளைக் கை மூலம் காட்டிடவும், நல்ல பெண்டிர்களும் இங்கு உள்ளனர். நீங்கள் அருந்துவதற்கு ஏற்றவரைப் பாலும், பழங்களும் உள்ளன. திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்கதும் கண்டு களிக்கத் தக்கதுமாகிய நல்ல கன்னிப் பெண்டிர்களும் இங்கு உள்ளனர். தேவைக்குத் தகுந்த செலவு செய்த நிறைந்த பொருள்களும் உள்ளன.
அகிலம்:
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
விளக்கம்:
சுவைக்க தக்க நல்ல உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்குப் பல்லாக்குகளும் கோவிலில் போகிமாரும் உள்ளனர்.
அகிலம்:
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
விளக்கம்:
குல்லாக்களும் உள்ளன. குளிப்பதற்குத் தாம்பிரபரணி ஆறும் உண்டு. சதுரங்கம் விளையாட மேடைகளும், சண்முக விலாசமும் உள்ளன. திருமால் பள்ள கொள்ள பால்கடலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி எடைக்கும் அதிகமாக வருவாயும் இங்கு உண்டு. அதிகமாகப் புடவைகளும், பொனசவடீ ஆபரணங்களும் இங்கே வரும். ஒவ்வொரு வருடமும் வடம் போன்ற மாலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக வரும். இங்கே அமைக்கப்பட்டுள்ள கருவூலங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்ப்போமானால், காவடி ஒரு கோடியும் வாங்கப்படுகின்ற காணிக்கை மூன்று கோடியுமாக, இவ்வுலக மக்கள் பல சாதியினரும் கோடிகோடியாகக் கூடி இங்கே கொண்டு குவிக்கின்றனர்.
இப்படியாக எனக்கு பலவகைப் பாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன. எந்த வகையில் ஆயினும் சரி, நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று அழைத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக