அகிலம்:
தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்
விளக்கம்:
கீழ்தன்மையான பேய்களுக்கு நீ கூற வேண்டிய உபதேச மொழிகளைக் கூறுகின்றேன். கேட்பாயாக. எல்லாவழிகளுக்கும் காரணமாக இருக்கும் நாராயணர் தாம் வரப் போகின்ற தருமபூமியை நினைத்து மனமடக்கிச் சிறைவாகம் போன்று தவம் இருக்கின்ற காரணத்தால்
அகிலம்:
உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே
விளக்கம்:
இவ்வுலகில் ஊர்ந்து திரிகின்ற எந்தவித உயிர்ப்பிராணியையும் கொன்று பலியிடவோ, வேறு வகையான இரத்தவெறி பூஜை செய்யவோ, தீபதூபம் காட்டவோ, இலை, பட்டை போன்றவை கொண்டு பூஜை செய்யவோ கூடாது. அவற்றை நாம் காண்பதுகூட தகாது. நான் தருமபூமியை நினைத்துத் தவசு இருப்பதால் இதன் உண்மையை அறிந்தவர்கள் இத்தகைய பூஜை, பலி ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பீர்களாக என்று வீணான பிசாசுகள் அறியும்படி சொல்லி விடு.
வைகுண்டருக்குரிய உபதேசம்:
============================
அகிலம்:
நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்
விளக்கம்:
தமக்குச் செய்த நன்றியைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாத நீசக்குலம், வெட்கமின்றி மட்டை எடுத்து உன்னை அடித்திடுவர். அவர்கள் மண்கட்டி கொண்டும், கல் கொண்டும் உன்னை எறிந்து துன்புறுத்துவர். உன் உடம்பு அழியக்கூடிய நிலை வந்தாலும் உனக்கு நான் கூறிய உபதேசகச் சட்ட விதி முறைகளை விட்டு மாறாதே. இந்த நாட்டைக் கெடுத்தாகக் கூறப்படும் கலி வாழும் பூமியில் சிறிது அளவுகூட தவறு செய்துவிடாதே.
தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்
விளக்கம்:
கீழ்தன்மையான பேய்களுக்கு நீ கூற வேண்டிய உபதேச மொழிகளைக் கூறுகின்றேன். கேட்பாயாக. எல்லாவழிகளுக்கும் காரணமாக இருக்கும் நாராயணர் தாம் வரப் போகின்ற தருமபூமியை நினைத்து மனமடக்கிச் சிறைவாகம் போன்று தவம் இருக்கின்ற காரணத்தால்
அகிலம்:
உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே
விளக்கம்:
இவ்வுலகில் ஊர்ந்து திரிகின்ற எந்தவித உயிர்ப்பிராணியையும் கொன்று பலியிடவோ, வேறு வகையான இரத்தவெறி பூஜை செய்யவோ, தீபதூபம் காட்டவோ, இலை, பட்டை போன்றவை கொண்டு பூஜை செய்யவோ கூடாது. அவற்றை நாம் காண்பதுகூட தகாது. நான் தருமபூமியை நினைத்துத் தவசு இருப்பதால் இதன் உண்மையை அறிந்தவர்கள் இத்தகைய பூஜை, பலி ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பீர்களாக என்று வீணான பிசாசுகள் அறியும்படி சொல்லி விடு.
வைகுண்டருக்குரிய உபதேசம்:
============================
அகிலம்:
நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்
விளக்கம்:
தமக்குச் செய்த நன்றியைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாத நீசக்குலம், வெட்கமின்றி மட்டை எடுத்து உன்னை அடித்திடுவர். அவர்கள் மண்கட்டி கொண்டும், கல் கொண்டும் உன்னை எறிந்து துன்புறுத்துவர். உன் உடம்பு அழியக்கூடிய நிலை வந்தாலும் உனக்கு நான் கூறிய உபதேசகச் சட்ட விதி முறைகளை விட்டு மாறாதே. இந்த நாட்டைக் கெடுத்தாகக் கூறப்படும் கலி வாழும் பூமியில் சிறிது அளவுகூட தவறு செய்துவிடாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக