திங்கள், 24 நவம்பர், 2014

அய்யா உண்டு

சொந்த பனையேறி பனையேறக் கண்டு வயிறு பசிக்கென்றாரே சிவனே அய்யா!
பாலில் சுண்ணம்ப் போட்டு குடியும் என்று சொல்ல பாலாய் இருந்ததையோ சிவனே அய்யா!
மாறி பார்த்தவனை தாலி அறுத்துகட்டு என்று வகை கூறி விட்டாரையா சிவனே அய்யா!
(சாட்டு நீட்டோலை)
இந்த சம்பவம் அய்யா தந்தை நாராயணரிடம் விஞ்சைப்பெற்று செந்தூர் கடல்தாண்டி வந்து மகனை காணவில்லை என்று அழுத அம்மைக்கு அடையாளம் சொல்லி,கங்கைக்கும்,முருகனுக்கும் சட்டமுரைத்து,தெச்சனாம் பூமியாம் சாமிதோப்பு நோக்கி கலைமுனி,ஞானமுனி என்ற இரு முனிவருடன் நடந்து வந்துக்கொண்டிருக்கும் சமயம் தேவர்களை எல்லாம் ஆகாயமாரக்கமாக மானிடர் கண்ணுக்கு வரச்சொல்லி தானும் பத்தன் தருவை என்ற ஊரில் தன் உருவை மாற்றி மனு அவதாரம் எடுத்து வரும் பொழுது ஓர் ஊரில் நடந்ந இந்த சம்பவம் அதாவது ஒரு பனை ஏறி அவன் வைத்திருந்த சொந்த பனையில் ஏறி பதநீர் இறக்கும் சமயம் அய்யா பரம்பொருள் அவனிடம் சென்று" எனக்கு வயிறு பசிக்குறது கொஞ்சம் பதநீர் கொடு" என்று அய்யா கேட்க அவன் பதநீர் இல்லை என்று சொல்ல மறுபடியும் பார் இருக்கும் சொல்ல அவன் மீண்டும் ஏறி பார்க்கும் சமயம் அவனுக்கு ஆச்சர்யம் அந்த பதநீர் கலசத்தில் பதநீர் அதிகமாக ரொம்பி இருக்கிறது.இதனால் இவனுக்கு புத்தி மாறி இந்த பண்டாரத்திற்க்கு எதற்க்கு அதிகமான பதநீரை கொடுக்க வேண்டும் என்று பத்தி தடுமாறி அந்த பதநீரில் சுண்ணாம்புவை அதிகமாக கலந்து அய்யாவிடம் கொடுக்கிறான் அந்த பனையேறி.அவன் கொடுத்த அந்த பதநீரை பாலாக நினைத்து அய்யா அருந்த அது அவர் தொண்டைக்குள் பாலாகவே மாறி இறங்கியது.இதை காட்சியை கண்ட பனையேறியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அய்யாவின் பாதத்தில் வீழ்ந்து" அய்யா தாங்கள் கடவுள் உருவமாகவே எனக்கு தோன்றுகிறது தாங்களுக்கு இந்த பதநீர் பாலாக மாறிய ஆச்சர்யம் என்ன என்பதை எனக்கு உரைக்க வேண்டும் என்று வேண்ட அய்யா அவனுக்கு நல்வழிகள் சொல்லி அவனுக்கு வாழ நல்வகையை கூறுகிறார் அதாவது" தாலி சரடாகிய உன் சுவாசத்தை உன் கட்டுபாட்டில் கட்டி வை உனக்கும் இந்த மாயசக்தி கிடைக்கப்பெற்று நீயும் முக்தி பெறுவாய்"(நம் சுவாசத்தை உள்ளடக்கி இறைவனை அடையும் முறை ஆண்மாவை கண்டுகொள்ளும் முறை)என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு கடந்நு செல்கிறார் நம் இறைவன்.இதில் ஒரு முக்கிய நகழ்வு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த சம்பவத்தை தெரியாத சிலபேர் அய்யா அந்த பனையேறியை திட்டியதாகவும்,அவனுக்கு சாபம் விட்டு சென்றதாகவும் அதாவது தாலியை அறுத்து கட்டு என்ற வார்தையை மேலோட்டமாக தவறான அபசகுண வார்த்தையாக நினைக்குறார்கள் அவர்கள் ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும் அய்யா அனைவரையும் வாழவைக்க வந்தவர் அதுமட்டுமல்லாமல் அவர் விஞ்சை வாங்கும் சமயம் நாராயணம் வைகுண்டருக்கு உபதேசம் செய்த வார்த்தையை நினைவு கூற வேண்டும்"சாபத்தை கூறாதே தன்னளவு வந்தாலும்.சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்,அன்டினபேரை அகற்ற நினையாதே,இச்சட்டம் தனிலே எள் அளவு தப்பினாலும் திச்சட்டம் காய்க்க தேதி வரும் என் மகனே இன்னும் எத்தனையோ பொறுமையை உபதேசித்தவர் இப்படி விஞ்சை பெற்று பொறுமையும்,அன்பையும்,கருணையும் உருவமாகக் கொண்டு வந்த நம் அய்யா யாருக்காவது சாபம் கொடுப்பாரா வாழவைக்க வந்தவர் அய்யா நம்மை அழிக்க வந்தவரல்ல நம் அய்யா அய்யாவை கலியன் செய்த பெரும் கொடுமையை கூட தாங்கிக்கொண்டு சான்றோருக்கு பொறுமை உணர்த்தியவர் நம் தந்தை வைகுண்டம் அதானால் அய்யாவின் சத்திய வார்த்தையை சரியாக புரிந்துக்கொண்டு அய்யாவின் அருளை பெற கேட்டுக்கொள்கிறேன்.அய்யா உண்டு —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக